search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Statue"

    • கொள்ளிடம் ஆற்றில் 2 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது
    • குளித்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு தட்டுப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காலில் கடினமான ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த இளைஞர்கள் நீருக்குள் மூழ்கி காலில் தட்டுப்பட்டதை வெளியே எடுத்துள்ளனர்.

    அப்போது அது சாமி சிலை என்பது தெரிய வந்தது.இதனால் மீண்டும் நீருக்குள் மூழ்கி இளைஞர்கள் வேறு ஏதேனும் சாமி சிலை உள்ளதா என்று அலசியபோது, மேலும் ஒரு சாமி சிலை கிடைத்துள்ளது. நீரில் இருந்து வெளியில் கொண்டு வந்து பார்த்த போது சுமார் 3 அடி உயரம் கொண்ட தட்சணாமூர்த்தி, 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலைகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வருவாய் துறையினருக்கு இளைஞர்களும், அப்பகுதி பொதுமக்களும் தகவல் தெரிவித்தனர்.


    • மதுரையில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    30 ஆண்டு காலமாக இந்த சட்டமன்றத்தில் பணியாற்றியவரும், ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நின்று வெற்றி பெற்ற பசும்பொன் தேவர் தந்த பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு இந்த அரசு வெண்கல சிலை அமைத்தும், மணிமண்டபம் உருவாக்கியும், அவரது பிறந்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    மதுரை மண்ணின் மைந்தன், இசை பேரரசர், பத்மஸ்ரீ. டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர் சென்னையில் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியதற்கு, மதுரை மக்களின் சார்பாகவும், குறிப்பாக சவுராஷ்டிரா மக்களின் சார்பாகவும் தமிழக முதல்-அமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிலை

    மேலும் அவருடைய திருவுருவச்சிலை மதுரை யில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்திருப்பதாக கேள்விபட்டேன். அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கி றேன்.

    அதே போலவே மதுரை மண்ணில் பிறந்த இசைக் குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியை கவுரவிக்கும் வகையில் சென்னையிலோ, மதுரையிலோ சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைத்து தர வேண்டும்.

    கூட்டுறவு வரலாற்றில் இல்லாத வகையில் ஜெய லலிதா, மாற்றுத்திறனாளி களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டதன் பேரில், 2011 முதல் 2021 வரை, 69 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 292 கோடி ரூபாய் கடன் வழங்கி 2 முறை தேசிய அளவில் குடியரசு தலைவரிடம் விருதை நானே பெற்று வந்துள்ளேன்.

    கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி நடத்தினர். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சி யர்கள், பணி நியமனம் செய்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் பாகு பாடின்றி உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்து, தேர்தலை எவ்வித புகார் களின்றி நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பூர் நகரத்தின் மையமாகவும் அடையாளமாகவும் டவுன்ஹால் கட்டிடம் இருந்து வந்துள்ளது.
    • ஸ்மார்ட்சிட்டிக்காக பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு வருகின்றது .

    திருப்பூர் :

    அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் குமாரனந்தபுரத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருப்பூர் மண்டல தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தேவராஜ் ,பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் நகரத்தின் மையமாகவும் அடையாளமாகவும் டவுன் ஹால் கட்டிடம் இருந்து வந்துள்ளது.இதனை தேவாங்க சமூக வள்ளல் ரங்கசாமி செட்டியார் நினைவாக அவரது குடும்பத்தினர் தானமாக திருப்பூர் மக்களுக்காக வழங்கினர். 1955-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது ஸ்மார்ட்சிட்டிக்காக பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பொலிவுடன்கட்டப்பட்டு வருகின்றது .

    இந்த கட்டிடத்திற்கு ஏற்கனவே இருந்து வந்த ரங்கசாமி செட்டியார் நினைவு ஹால் என்ற பெயரினை மீண்டும் சூட்ட வேண்டும். மேலும் ரங்கசாமி செட்டியார் சிலை மற்றும் மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நகராட்சி துறை அமைச்சர், திருப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

    • பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் உருவசிலை.
    • விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் தட்சிணபண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு விஸ்வ வித்யாலயா பாடசாலை செயல்படுகிறது.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர்.

    கோயில் மற்றும் பாடசாலை வளாகத்தில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திரு உருவம் பிரதிஷ்டை செய்து திறப்பு விழா நடந்தது.

    சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சதர் குத்துவிளக்கேற்றினார். பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அம்மன் பேட்டை ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சொரூபானந்தா மகராஜ் சுவாமி விவேகானந்தரின் லட்சியம் குறித்து பேசினார்.

    கும்பகோணம் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார்.

    இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், பா.ஜ.க மூத்த நிர்வாகி அண்ணாமலை, நகர பொருளாளர் வேதம் முரளி, வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விட்டல் ருக்மணி விஸ்வ வித்யாலயா மாணவர்களின் சார்பில் விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    நிர்வாக பொறுப்பாளர் பஞ்சாபிகேசன் நன்றி கூறினார்.

    • எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன், முத்துக்குட்டி பாண்டியன், அமைப்புசாரா ஓட்டு னர் அணி சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், கவுன்சிலர் சந்திரசேகர், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், நிர்வாகிகள் சீனி முகமது சேட், பாறையடி மணி, புஷ்ப ராஜ், பகுதி துணை செயலாளர் மாரீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பாளை பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை ஏற்பாட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் நிர்வாகிகள் லட்சுமணன், முத்து லட்சுமி, கற்பக வல்லி, தாஜுதீன், ஆனந்தி சரவணன், ஆனந்தராஜ் மற்றும் ராமர், லட்சுமி நாராயணன், காதர் மஸ்தான், முத்துக்குமார், அருள் ஜெய்சிங், புதியமுத்து, மற்றும் மகளிர் அணி செயலாளர் பேச்சியம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று ஜெய் சிவராமர் கோவில் உள்ளது.
    • இக்கோவில் 12 அடி உயரத்தில் வீர அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று ஜெய் சிவராமர் கோவில் உள்ளது.

    இக்கோவில் நிர்வாகி சந்திரசேகர் மற்றும் பக்தர்கள் முயற்சியால், 12 அடி உயரத்தில் வீர அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் ஆகம முறைப்படி கைதேர்ந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த வீர அனுமன் சிலை, அங்கிருந்து லாரியில் வாழப்பாடிக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பக்தர்கள் வழிபாட்டுக்கு பின், பிரத்தியேக செயற்கை குளம் அமைத்து

    இச்சிலை தண்ணீரில் வைக்கப்பட உள்ளது.

    • திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
    • வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் மாதிரிபுகைப்படத்தினை அரசுக்கு அளித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில், 2021- 2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, வீரபாண்டிய கட்டபொம்மனை நயவஞ்சகமாகத் தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்டும் வகையில் தஞ்சையிலிருந்து திருப்பூர் மாவட்டம் தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆண்ட்ரூ கேதிஷ் என்ற ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர்நாயக்கர் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில் அவருக்கு உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2 கோடியே 60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

    மேலும் மேற்படி அரங்கம் மற்றும் சிலை அமைத்திட ஏதுவாக, 2021-2022ம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் திட்ட மதிப்பீட்டினை திருப்பூர் கலெக்டர் மேலொப்பத்துடன் அனுப்பி வைக்குமாறும், முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற ஏதுவாக, ஐந்து மாதிரி வரைபடங்களையும் அனுப்பி வைக்குமாறும் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல முதன்மைதலைமைப் பொறியாளரிடமும் (கட்டடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டத்தில் உருவச்சிலையும், அரங்கமும் அமைத்திட நிர்வாக அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்டது.

    இந்தநிலையில் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.2,60,00,000 (ரூ. 2கோடியே 60லட்சம் மட்டும்) திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கியுள்ள முக்கிய பணிகளின் விவரம் பின்வருமாறு:-

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம், தளி-2 கிராமம், மஜரா திருமூர்த்தி நகர், பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.80.98 ஹெக். நிலத்தினை தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு அரங்கம் அமைத்திடவும்,உருவச்சிலையினை உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் அமைத்திட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு முன்நுழைவு அனுமதி வழங்கியும் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரிபுகைப்படத்தினை, இணைத்தனுப்பி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார்.மேலும் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2.53,26,974 க்கு நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • முதுகுளத்தூரில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலை வைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
    • முதுகுளத்தூர் தொகுதி 3.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ்கனி எம்.பி. முன்னிலை வகித்தார்.மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்றார்.

    பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையி ல்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி பேசியதாவது:-

    முதுகுளத்தூர் தொகுதி ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக இருந்தது. இப்போது முன்னேறிய பகுதியாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் பணிகள் நடைபெறுகின்றன.

    முதுகுளத்தூர்-கடலாடி செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் ரூ.21 கோடி செலவில் பைபாஸ் சாலையும், உடைய நாதபுரம் அருகில் பைபாஸ் சாலையும் அமைய உள்ளன. முதுகுளத்தூரில் தேவர் சமூகத்திற்கு ஒரு மகால், செல்லூரில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை அமைக்கப்படும்.

    கன்னிராஜபுரம் கிராமத்தில் காமராஜருக்கு சிலையும், ராமசாமிபட்டி கிராமத்தில் கட்ட பொம்மனுக்கு சிலையும் அமைக்கப்படும். முதுகுளத்தூர் பகுதியில் சமூக பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. எல்லோரும் இணைந்தே பணியாற்றுகிறார்கள்.

    குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை என்று கிராம மக்கள் கூறினர். மேலும் செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள பிற்பட்டோர் நல விடுதியில் சாப்பாடு நல்லவிதமாக போடுவதில்லை என்றும் புகார் வந்துள்ளது. இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.

    முதுகுளத்தூர் தொடுதியில் கூடுதலாக 40 பஸ்கள் விடப்பட்டன. அதில் சில பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் விடப்படும். முதுகுளத்தூர் தொகுதி 3.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அதே போல வர உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பேரூராட்சி சேர்மன் ஷாஜகான், கவுன்சிலர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பூபதி மணி, செல்வநாயகபுரம் கருணாநிதி, உலகநாதன். வாகைக்குளம் அர்ச்சுனன், சேகர், செல்வநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பால்சாமி, சாம்பக்குளம் ராஜாத்தி கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.
    • கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர்ரவி, முருகன் சிலையை கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வைத்து தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இந்த சிலையை யாராவது விட்டு சென்றர்களா? இல்லை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா? என விசாரித்து வருகின்றனர்.

    • இமானுவேல் சேகரன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
    • ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டி காளைப் பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் தலைமையில் அம்மன் பொட்டல் தெரு,மலையடிப்பட்டி, இளந்திரைகொண்டான்போன்ற இடங்களில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அம்மன் பொட்டல் தெருவில் உள்ள தேவேந்திரகுல ஊர் நாட்டாமைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் கதிரவன் பொன்னாடை அணிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் செய்தித் தொடர்பாளர் கான்சை கண்ணன், ராஜபாளையம் நகர செயலாளர்கள் முருகதாஸ், கிராதி கோவிந்தராஜ், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டி காளைப் பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது.
    • வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தி லுள்ள மூன்றடுக்கு வணிக கட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

    இதற்கிடையே, வணிக கட்டடத்தின் 3-வது அடுக்கின் மேல் பகுதியில், 8 அடி உயர இயேசுவின் முழு உருவ பைபர் சிலை கடந்த ஜனவரி மாதம் 22 -ம் தேதி நிறுவப்பட்டது.

    அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இச்சிலையை அகற்ற வேண்டு மென சிலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் தேவாலயத்திற்கு முன் கூடியதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இச்சிலை திரைச்சேலைகளால் மூடி மறைக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன் திரைச்சேலைகள் அகற்றப்பட்டு சிலை திறக்கப்பட்டது. அனுமதி இன்றி வைக்கப்பட்ட இயேசு சிலை திறக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேவாலய நிர்வாகிகளுடன் அமைதிப்பேச்சு நடத்தினர்.

    இறுதியாக, தேவாலய வணிக கட்டடத்தின் மேல் நிறுவப்பட்ட இயேசு உருவசிலை, திரைச்சேலைக் கொண்டு நேற்று முன்தினம் மீண்டும் மூடி மறைக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்ற பிறகு இயேசு‌ சிலையை திறக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இச்சிலையை பத்தாம் பத்திநாதர் தேவாலய வளாகத்திற்குள் நிறுவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது
    • அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனரும், தலைவருமான ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    நெல்லை:

    சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாள் விழாவையொட்டி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் உள்ள அவரது நினைவு மாளிகையில் உள்ள வெண்கல சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனரும், தலைவருமான ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் நயினார் பாண்டியன், மாநில பொருளாளர் ராஜ்மோகன், தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் மாரிராஜா, மாநில இளைஞரணி செயலாளர் வைரத்தேவர், மாநில மகளிரணி செயலாளர் செல்வி, மாநில தொண்டரணி செயலாளர் சாந்திபூசன், மாநில விவசாய அணி செயலாளர் வைரமுத்து பாண்டியன், மாநில மாணவரணி செயலாளர் சின்னத்தம்பி, மாநில இணையதள பொறுப்பாளர் முருகதாஸ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×