search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலை அணிவிப்பு"

    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை கொத்ததெரு தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும்மான ராஜ்குமார் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ரெங்கநாதன் கொடியே ற்றினார்.இதில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுகுழு உறுப்பினர் கனிவ ண்ணன், நகர தலைவர் ராமானுஜம், துணைத் தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வடவீர பாண்டியன், மகளிர் அனியினர் சுதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளீரனினர் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    • மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பிற்கி ணங்க, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எனது (தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.) தலை மையில் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவில், வடசேரியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படு கிறது.

    இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாள்
    • பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்

    அரியலூர் 

    சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அரியலூர் நகரிலுள்ள தலைவர்கள் சிலைகளுக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த மண்டல துணைச் செயலர் மாறன், மாநில பொறுப்பாளர்கள் தனக்கோடி, கருப்புசாமி, முன்னாள் மாவட்டச் செயலர் செல்வநம்பி, அரியலூர் தொகுதிச் செயலர் மருதவாணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதாகர் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கர், பெரியார், காந்தி, காமராஜர் ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    • அன்னதானம் வழங்கப்பட்டது
    • திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி கதிரம்பட்டி கிராமத்தில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான டாக்டர் என் திருப்பதி தலைமை வகித்து படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிப் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கருணாகரன், சிவன், நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, சிவக்குமார், பழனி, சசி, சுதாகர், உட்பட பலர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாதேவி சரவணன், தேன்மொழி வெங்கடேசன், வசந்தி வெங்கடேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர் எம்.ஆர். மனோகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கதிரம்பட்டி பரமேஸ்வரன் சுப்பிரமணி,, சக்திவேல், ராஜி, செய்து இருந்தனர்.

    • எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    மேலூர்

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு மேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நகர் இணை செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சாகுல் ஹமீது, முன்னாள் நகர் செயலாளர் நாகசுப்பிரமணியன், கச்சிராயன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் தம்பிதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் கே.முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் பூமி நாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், இணைச் செயலாளர் தன பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் சோனியா காந்தி, தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்னக் கருப்பன், மேலூர் நகர் செயலாளர் தங்க சாமி, மேலூர் ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) ராகவன், (மேற்கு) ஜெயராமன், (தெற்கு) ராஜன், (வடக்கு) வக்கீல் பிரேம்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, அ.வல்லாள பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், கரந்த பாண்டி, அட்டப்பட்டி பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள்.

    திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் தர்மபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே பிபின் ராவத் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முப்படை வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.

    துணைத் தலைவர் கே.அருள் செயலாளர் ஆர்.மோகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முப்படையை சேர்ந்த வீரர்கள் முனியப்பன், கனகராஜ் லோகநாதன் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    • கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மண்டல பூஜை

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

    இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    சரண கோஷம் முழங்க மாலை அணிந்த பக்தர்கள்

    தமிழகத்தில் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் குருசாமிகள் முன்னிலையில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

    இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திருப்பூர் மாநகரில் அய்யப்பன் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்
    • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    நாகர்கோவில்:

    வெட்டூர்ணிமடத்தில் உள்ள காமராஜர் சிலை மறுசீரமைப்பு பணியை முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது சொந்த நிதியில் மேற்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளான இன்று மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகே சன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அந்த பகுதியில் மரக்கன்றுகளை அவர் நட்டார். ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை யும் நாஞ்சில் முருகேசன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சந்திரன், ராஜேந்திரன், சிவலிங்கம், கோபால், சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்திலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திமுக கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி கந்திலி கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர் தசரதன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ குணசேகரன் அவைத்தலைவர் ஏ. ராஜா முன்னிலை வகித்தனர்.

    அண்ணா திருவுருவப்படத்திற்கு நல்லதம்பி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் ஆர் குலோத்துங்கன் ஒன்றிய துணைச் செயலாளர் கே. சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பி பிரபு ஒன்றிய கவுன்சிலர் சி. எஸ்.ஆர்.வினோத், ஊராட்சி செயலாளர் கே குமரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன், எஸ் கார்த்திக், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய துணைச் செயலாளர் வி.டி. அழகிரி நன்றி கூறினார்.

    • இமானுவேல் சேகரன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
    • ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டி காளைப் பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் தலைமையில் அம்மன் பொட்டல் தெரு,மலையடிப்பட்டி, இளந்திரைகொண்டான்போன்ற இடங்களில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அம்மன் பொட்டல் தெருவில் உள்ள தேவேந்திரகுல ஊர் நாட்டாமைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் கதிரவன் பொன்னாடை அணிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் செய்தித் தொடர்பாளர் கான்சை கண்ணன், ராஜபாளையம் நகர செயலாளர்கள் முருகதாஸ், கிராதி கோவிந்தராஜ், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டி காளைப் பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×