என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
- அன்னதானம் வழங்கப்பட்டது
- திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி கதிரம்பட்டி கிராமத்தில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான டாக்டர் என் திருப்பதி தலைமை வகித்து படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கருணாகரன், சிவன், நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, சிவக்குமார், பழனி, சசி, சுதாகர், உட்பட பலர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாதேவி சரவணன், தேன்மொழி வெங்கடேசன், வசந்தி வெங்கடேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர் எம்.ஆர். மனோகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கதிரம்பட்டி பரமேஸ்வரன் சுப்பிரமணி,, சக்திவேல், ராஜி, செய்து இருந்தனர்.
Next Story






