search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை நிகழ்ச்சி"

    • சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன.
    • சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா என்ற கலைவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம்- நம்ம ஊரு திரு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சென்னை மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமிய கலைஞர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 18 இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    சென்னை தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்க ளில் நடத்தப்படுகிறது.

    மேலும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர் லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை சங்கமம் விழாவில் நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

    மேலும் பஞ்சாப்பின் பாங்ரா மற்றும் ஜிந்துவா நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லை ஹரோபா நனடம், காஷ்மீரின் ரூப் நடனம், பரதநாட்டியம், காவடியாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், மேளம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற ஆடல்- பாடல், வில்லிசை, கையுறை பாவைக்கூத்து, கோல்கால் ஆட்டம், இறை நடனம், தேவராட்டம், கணியான் கூத்து, ஜிம்பளா மேளம், களரி, மெல்லிசை, கட்டைக்கூத்து, நாடகம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்படை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு மூலிகை உணவுகள், கடல் உணவுகள், பாரம்பரிய மசாலாவுடன் கூடிய சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை நகர மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலைகளை கண்டுகளிக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.

    • பொதுமக்களுக்கு மஞ்சப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், கரகம், தப்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகா ப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.

    பின்னர் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ மாணவி யருக்கு மூலிகைக் கன்றுகள் வழங்கினார்.

    சுற்றுச்சூ ழல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செ.சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு

    ஏ.நிர்மலா ராணி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெர்லின் விமல், பள்ளித்துணை ஆய்வாளர் ராமநாதன், நகராட்சி துணைத் தலைவர் செந்தில்கு மார், நாகூர் சித்திக் சேவை குழுமத்தை சேர்ந்த நாகூர் சித்திக் வேளாங்கண்ணி அந்தோணிசாமி நாகை மோகன், அமிர்தா பள்ளி முதல்வர் என் சித்ரா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.செங்குட்டுவன், தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பால சண்முகம், ரமேஷ், மங்கலம், ரகு, காட்சன், அருண் முன்னாள் என்சிசி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் கலை குழுவினரின் கரகம் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முன்னதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி வரவேற்றார்.

    முடிவில் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நன்றி கூறினார்.

    • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது.
    • மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா பேருந்து வசதியையும், சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார். கருணாநிதியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 'பூம்புகார்' என்ற வர்த்தக பெயரால் 1.8.1973 அன்று முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கருணாநிதி 1989-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து பெண்கள் தாங்களாகவே வங்கி நடவடிக்கைகள், சுய தொழில் செய்தல், குழுவாக செயல்படுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்.

    அவரது வழியில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி, சமமான வளர்ச்சி என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பாதிப்பால் நலிவடைந்த நிலையில் இருந்த சுற்றுலாத்துறை, முதலமைச்சரின் சிறப்பான முன்னெடுப்புகளால் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வணிகர்கள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என லட்சக்கணக்கானோருக்கு இத்துறையின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும், நிரந்தர பொருளாதாரம் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் வருகின்றது.

    தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ –ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரியமும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களை கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள்பாதி, ஆடைபாதி என்பது தமிழ்நாட்டின் பழமொழிகளுள் ஒன்றாகும். இந்த பழமொழி ஆடை நெய்யும் நெசவாளர்களின் புகழை தெரிவிப்பதாக உள்ளது.

    கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திருமணங்களில் பெண்களின் ஆடைகள் கைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது கை வினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

    சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலை கள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமுக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப் பைகள், தஞ்சா வூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.

    சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சென்னை விழா-கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து விட்டு, விதம் விதமாக சாப்பிட்டும் வரலாம்.

    • மது போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு
    • கலை நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மது போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு மூத்த கிராமிய கலைஞரான பழனியா பிள்ளை தலைமையில் கலைக் குழுவினர் மதுவுக்கு எதிராக கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து மது போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் பேரூராட்சி தலைவர்குமரி ஸ்டீபன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் வினியோகம் செய்தார். நாளை (28-ந்தேதி) வரை தொடர்ந்து இந்த கலை நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்கிறது.

    • மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தருமை ஆதினம் 27ஆவது ஸ்ரீலதி குருமகா சந்திதானம் அருளாசிடனும் ஆட்சியன்றக் குழுக தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ஆலோசனையின் படியும் தொடக்கப்பள்ளியின் 38-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    ஆட்சிமன்றக்குழுத் துணைத்தலைவர் பேராசி ரியர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    பேராசிரியர் ஞானசேகரன், பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சிவதாஸ் கலந்துக்கொண்டார். முதல்வர் சரவணன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினர். சிறப்புரையில் மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சி, பணிவு, அன்பு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்த குணங்கள் மாணவர்களிடம் இருந்தால் அனைத்து செல்வங்களும் அவர்களை தேடி வரும் எனகூறினார்கள்.

    பொறுப்பாசிரியை லதா தொடக்கப்பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்கள்.

    இலக்கிய மன்ற விழாவில் நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    ஆண்டு விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவிற்கான ஏற்பாடு களை இருபால் ஆசிரியர்கள், அலுவலகள் செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் சசிகலா நன்றி கூறினார்.

    • கலெக்டர் பாராட்டு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலைத் திருவிழாவில் முதல் இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா நிகழ்ச்சியில் 8 அரசு பள்ளிகளை சார்ந்த 16 மாணவ மாணவிகள் பங்கெடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்று வந்துள்ளனர்.

    இந்த மாணவ மாணவிகள் தங்கள் பெற்ற பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாணவ மாணவிகள் மேலும் தங்கள் திறமைகளை வளர்த்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டுமென வாழ்த்தினார். மேலும் மாணவ மாணவிகள் ஊட்டச்சத்து சாப்பாடுகளை சாப்பிட வேண்டும். ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் மாணவிகள் வளர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    மாநில அளவில் நரசிங்கபுரம், மின்னல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 9 மாணவிகள் பாவனை நடிப்பில் முதலிடத்திலும், அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராமகிருஷ்ணன் நாதஸ்வரம் இசையில் முதலிடத்தையும், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவன் முகேஷ் எக்காளம் இசையில் 2-ம் இடத்தையும், கொடைக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பன்னகசயனன் மிருதங்கம் இசையில் 2-ம் இடத்தையும், பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹேமாவதி காகித வேலைப்பாடு கலையில் 2-ம் இடத்தையும், வள்ளுவம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுல கிருஷ்ணன் கோண கொம்பு கலையில் 3-ம் இடத்தையும், பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிசவிதா டிஜிட்டல் ஆர்ட் கலையில் 3-ம் இடத்தையும், அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலை ப்பள்ளி தாமரைப்பாக்கம் சூர்யா சங்கு முழக்குதல் போட்டியில் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.இவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் பெற்றோர்களை வாழ்த்து தெரிவித்து அனைவரையும் கலெக்டர் வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, மாவட்ட கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் நாநிலதாசன், உதவி திட்ட அலுவலர் பள்ளி கல்வித்துறை துரைவேல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் உருவசிலை.
    • விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் தட்சிணபண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு விஸ்வ வித்யாலயா பாடசாலை செயல்படுகிறது.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர்.

    கோயில் மற்றும் பாடசாலை வளாகத்தில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திரு உருவம் பிரதிஷ்டை செய்து திறப்பு விழா நடந்தது.

    சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சதர் குத்துவிளக்கேற்றினார். பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அம்மன் பேட்டை ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சொரூபானந்தா மகராஜ் சுவாமி விவேகானந்தரின் லட்சியம் குறித்து பேசினார்.

    கும்பகோணம் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார்.

    இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், பா.ஜ.க மூத்த நிர்வாகி அண்ணாமலை, நகர பொருளாளர் வேதம் முரளி, வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விட்டல் ருக்மணி விஸ்வ வித்யாலயா மாணவர்களின் சார்பில் விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    நிர்வாக பொறுப்பாளர் பஞ்சாபிகேசன் நன்றி கூறினார்.

    • சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார்.

    தொடர்ந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த இடங்கள் வருமாறு:-

    தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்.

    தினமும் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிராமத்தில் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் அமுதா செல்வம் தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், அகில இந்திய இளைஞர் மற்றும் மாணவர் பிரிவு செயலாளர் ஆபிரகாம் லிங்கன், உதவும் வேலைவாய்ப்பு மைய மேத்யூ, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி நந்தகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஞ்சிதா கோபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.

    தொடர்ந்து மாணவ ர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்த மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, அவா்களது பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கல்வியின் மீது ஆா்வத்தை ஏற்படுத்துகிற வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த கரகாட்டம் ஒயிலாட்டம் பறையாட்டம் கும்மியாட்டம் பெரிய கொம்பாட்டம் நாடகம் சமூக விழிப்புணர்வு பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பேராசிரியர் குமரன், அஜித்குமார், பெல் சேகர், தலைவர் ரேவதி சேட்டு, சமூக ஆர்வலர்கள் ராமன், லட்சுமணன் பயிற்சியாளர்கள் ஜேம்ஸ் குணசேகரன், மெர்லின் ஜேம்ஸ், லூர்து, ஆண்ட்ரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் காந்தி பரிசு, சான்றிதழ் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுதிறனாளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ், பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், 63 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்தது.
    • இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் பள்ளி சிறுவர்களின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி குருசேகரத் தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தலைமையில் நடந்தது. ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பால்ராஜ் வரவேற்றார்.

    பள்ளி சிறுவர்கள் கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களை பாடி, குறு நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டலத்தின் இளையோர் திருச்சபை இயக்குநர் கிதியோன் சாம் தேவ செய்தியளித்தார். இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் நிர்மலா குலோத்துங்கன் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. வடக்குதெரு, நாயுடு தெரு, நடுத்தெரு, திலகாபுரி தெரு, பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களின் குடும்பங்களை சந்தித்து சபை குரு வாழ்த்து தெரிவித்தார். சபை குருவானர் அருள்தனராஜ் ஜெபித்து தொடங்கி வைத்தார்.

    இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின் பாடல்கள், குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் வேதாகம தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சபை போதகர் பரிசு வழங்கினார். கிறிஸ்மஸ் கீத பவனி வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து குடும்ப கீத ஆராதனை, ஐக்கிய சங்கங்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • மாணவர்களிள் மொழித்திறன், ஓவியம், நடனம், நாட்டியம், இசை, வாய்ப்பாட்டு இசை உள்ளிட்ட 82 வகையான கலைதிறன் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • பள்ளிகள் அளவில் இந்த போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி நடந்து முடிந்துள்ளது.

    சென்னை:

    அரசு பள்ளி மாணவர்களின் கலை, பண்பாடு திறனை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

    மாணவர்களிள் மொழித்திறன், ஓவியம், நடனம், நாட்டியம், இசை, வாய்ப்பாட்டு இசை உள்ளிட்ட 82 வகையான கலைதிறன் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    பள்ளிகள் அளவில் இந்த போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து ஒன்றிய அளவில் நாளை (சனிக்கிழமை) வரையும் மாவட்ட அளவில் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வகையான போட்டியிலும் மாணவ-மாணவிகள் ஊக்குவிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    3 நிலையில் நடத்தப்படுகின்ற போட்டியில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாகி வருகிற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகின்றன. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள 13,210 அரசு பள்ளிகளில் கலை திருவிழா நடைபெறுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறுகிற 20 மாணவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மார்ஸ் கூறும்போது, அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர்.

    இது போன்ற போட்டிகள் நடப்பது அரசு பள்ளி குழந்தைகளின் திறனை மேம்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகும். நாட்டுப்புற இசைக்கருவிகள், தமிழர்களின் கலை, பண்பாட்டினை அறிந்து கொள்ள முடிகிறது.

    சென்னைகளில் 30 பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பங்கேற்று உள்ளனர் என்றார்.

    கலை திருவிழா போட்டியில் 17 லட்சம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். எந்தெந்த போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர் என்ற விவரத்தை கேட்டறிந்து நடத்தப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர். பள்ளி வளாகங்கள் திருவிழா போல காட்சி அளிக்கிறது.

    மாநில அளவில் தேர்வு பெறும் 500 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    ×