search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி - பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    X

    கன்னியாகுமரியில் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி - பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்

    • மது போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு
    • கலை நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மது போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு மூத்த கிராமிய கலைஞரான பழனியா பிள்ளை தலைமையில் கலைக் குழுவினர் மதுவுக்கு எதிராக கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து மது போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் பேரூராட்சி தலைவர்குமரி ஸ்டீபன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் வினியோகம் செய்தார். நாளை (28-ந்தேதி) வரை தொடர்ந்து இந்த கலை நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்கிறது.

    Next Story
    ×