போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தருமை ஆதினம் 27ஆவது ஸ்ரீலதி குருமகா சந்திதானம் அருளாசிடனும் ஆட்சியன்றக் குழுக தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ஆலோசனையின் படியும் தொடக்கப்பள்ளியின் 38-வது ஆண்டு விழா நடைபெற்றது.

ஆட்சிமன்றக்குழுத் துணைத்தலைவர் பேராசி ரியர் முருகேசன் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் ஞானசேகரன், பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சிவதாஸ் கலந்துக்கொண்டார். முதல்வர் சரவணன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினர். சிறப்புரையில் மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சி, பணிவு, அன்பு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த குணங்கள் மாணவர்களிடம் இருந்தால் அனைத்து செல்வங்களும் அவர்களை தேடி வரும் எனகூறினார்கள்.

பொறுப்பாசிரியை லதா தொடக்கப்பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்கள்.

இலக்கிய மன்ற விழாவில் நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

ஆண்டு விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கான ஏற்பாடு களை இருபால் ஆசிரியர்கள், அலுவலகள் செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் முடிவில் சசிகலா நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com