search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்தநாள் விழாவையொட்டி பூலித்தேவன் சிலைக்கு பசும்பொன் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
    X

    பூலித்தேவன் சிலைக்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்தபடம்

    பிறந்தநாள் விழாவையொட்டி பூலித்தேவன் சிலைக்கு பசும்பொன் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

    • சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது
    • அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனரும், தலைவருமான ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    நெல்லை:

    சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாள் விழாவையொட்டி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் உள்ள அவரது நினைவு மாளிகையில் உள்ள வெண்கல சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனரும், தலைவருமான ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் நயினார் பாண்டியன், மாநில பொருளாளர் ராஜ்மோகன், தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் மாரிராஜா, மாநில இளைஞரணி செயலாளர் வைரத்தேவர், மாநில மகளிரணி செயலாளர் செல்வி, மாநில தொண்டரணி செயலாளர் சாந்திபூசன், மாநில விவசாய அணி செயலாளர் வைரமுத்து பாண்டியன், மாநில மாணவரணி செயலாளர் சின்னத்தம்பி, மாநில இணையதள பொறுப்பாளர் முருகதாஸ், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×