என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Speech"
- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்
- புதுக்கோட்டை மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விராலிமலை,
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பெறுப்பேற்ற பின்னர் பல்வேறு கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.வில் உறுப்பினர்களின் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேகமான பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் சேர்த்தல் பணியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவூரில் முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேர்க்கை படிவங்களை பெற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழக முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.கே.வைரமுத்துவும் இணைந்து இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவூரில் உள்ள பெரியநாயகி மக்கள் மாதா மன்றத்தில் இந்த புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்த்தல் படிவங்களை பெற்றுக் கொண்டனர்.
இதைப் பெற்றுக் கொண்ட விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், தன்னலம் பாராது கட்சியின் வளர்ச்சிக்கு இரவு, பகலாக உழைத்த உங்களுக்கு நன்றி என்றும், இதே போல் விறுவிறுப்புடன் செயல்பட்டு வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு இதே போல் இரவு. பகல் பாராமல் உழைத்திட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ் செல்வன், சுப்பையா, சாம்பசிவம், பழனியாண்டி, நாகராஜ், திருமூர்த்தி, ஏ.வி.ராஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் மணிகண்டன் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க.வின் கரங்களை பலப்படுத்துவோம்.
- எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பேசினார்.
ராமநாதபுரம்
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் பெரியபட்டினத்தில் அந்த கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் ரியாஸ்கான் கட்சிக்கொடியை ஏற்றி பேசினார்.
கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, கட்சிக்கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதுகுறித்து மாவட்டத்தலைவர் ரியாஸ்கான் கூறுகையில், தற்போது மோடி தலைமையிலான அரசு தி.மு.க.வை முடக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க. மவுனமாக உள்ளது. அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் தி.மு.க.வுக்கு உள்ளது.
தி.மு.க. கரங்களை பலப்படுத்த எஸ்.டி.பி.ஐ. துணை நிற்கும் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ராமநாதபுரம் கிழக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
- ஊட்டி நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த பெருமைக்கு உரியவா் ஜான்சல்லீவன்.
- பொதுமக்கள் பாதுகாப்புக்காக 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
ஊட்டி,
ஊட்டி நகரை கட்டமைத்த ஜான் சல்லீவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த பெருமைக்கு உரியவா் ஜான்சல்லீவன்.
அவரை நினைவு கூறும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில், ரூ. 20 லட்சம் மதிப்பில் 2 அடி உயரத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, இதனை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.
ஊட்டி 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் நிறைவு விழாவில் தமிழக சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ராசா ஆகியாா் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்க உள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புக்காக 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படுவதாக, 283 பகுதிகள் கண்ட றியப்பட்டு உள்ளன.
அந்த இடங்களில் 42 மண்டல குழு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அடுத்தபடியாக மழையால் ஏற்படும் மண் சரிவு, சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றுவதற்காக, தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் குழுவினா் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஊட்டி ஆர்.டி.ஓ துரைசாமி, தாசில் தார் ராஜசேகா், ஊட்டி நகரசபை தலைவா் வாணீஸ்வரி, துணைத்த லைவா் ரவிக்குமாா், நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகராட்சிப் பொறியாளா் சேரமாகனி உள்பட அதிகாரிகள் பலா் உடன் இருந்தனர்.
- ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சர்வாதிகாரி தான்.
- பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
சிவகங்கை
சிவகங்கையில் பா.ஜ னதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் அண்ணா மலை கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழை உலக மொழி யாக்கியவர் பிரதமர் ேமாடி. பல்வேறு நாடுக ளுக்கும் சென்று தமிழை வளர்த்து வருகிறார். ஆனால் தி.மு.க. தமிைழ வைத்து வியாபாரம் செய்கிறது. புதிய பாராளு மன்றத்தில் நம்முடைய பாரம்பரிய செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் கலாச்சா ரத்தை அறிய உதவும்.
காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அப்போது ஊழல் குற்றச் சாட்டில் கனிமொழி உள்பட பலர் சிறைக்கு சென்றனர்.
தி.மு.க. ஆட்சி ஒரு குடும்பத்திற்காக நடைபெறு கிறது. பிரதமர் மோடியை சர்வாதிகாரி என தி.மு.க. வினர் பேசி வருகின்றனர். ஆமாம். அவர் ஊழலை ஒழிப்பதில் சர்வாதிகாரி தான். உலக நாடுகளின் பட்டியலில் பிரதமர் மோடி நடவடிக்கையால் இந்தியா வளர்ச்சி அடைந்து வரு கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி, மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட பார்வையாளர் சண்முக ராஜா, மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார், சுகனேஷ்வரி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, சங்கரசுப்பிரமணியன், நகர தலைவர் உதயா, மண்டல தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, லோகு முனியாண்டி, விவசாய அணி பொது செயலாளர் சரவணன், ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், ஒன்றிய பொது செயலாளர் பரம சிவம் மற்றும் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.
- அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தினை பரிட்சார்த்தமாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்.
- ராகி நார்ச்சத்து, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது.
ஊட்டி,
ஊட்டி தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் கூட்டுறவுத்துறை, பொது வினியோக திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவடட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது வினியோக திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் ஆகியோர் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தினை பரிட்சார்த்தமாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்.
ராகி நார்ச்சத்து, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது. சிறுதானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் சிறந்த தற்காப்பு கருவியாக உள்ளன. எனவே பொதுமக்களிடம் ராகியை வாங்கி பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு நல்ல தரமான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீலகிரியில் 60 சதவீத சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
- தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உப்பாசி கூட்டரங்கில் தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் அதிகாரிகள் தரப்பில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார், மாவட்ட கலெக்டர் அம்ரித், இண்கோ சர்வ் முதன்மை செயல் அதிகாரி மோனிக்காராணா, நீலகிரி தேயிலை சங்கங்கள் சார்பில் நெலிகொலு சிறுவிவசாயிகள் மேம்பாட்டு சங்கம், மலை மாவட்ட விவசாயிகள் சங்கம், சிறுதேயிலை விவசாயிகள் சங்கம், தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி வயநாடு சங்கம், தேயிலை தரகர்- ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே சிறுதேயிலை விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி. இங்கு 60 சதவீதம் சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தேயிலை விற்பனை சந்தையில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த தரத்துடன் அதிக லாபம் பெற முடியும். நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா, தேயிலை ஆகிய இரண்டும் கண்கள் ஆகும்.
எனவே அங்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.150 கோடி மதிப்பில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். பொதுமக்களின் வாழ்வாதாரமும் உயரும். நீலகிரியில் கலப்பட தேயிலைத்தூள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு நடத்தி உள்ளனர். இந்த வகையில் 11 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 6 வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு ரூ.1.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகி, அதில் 16 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.52,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சாரிபில் தேயிலை வியாபா ரிகளின் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
- ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
- நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
இதன் ஒரு பகுதியாக படகு இல்லத்தில் சாகச விளையாட்டு அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஊட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில், தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ள ஜிப் லைன், ஜிப் மிதிவண்டி, பங்கி ஜம்பிங், தொங்கு பாலம் ஆகிய பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்தபடியாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து ரூ.3.25 மதிப்பீட்டில் தயாராகி வரும் கெம்ப்ளிங் சாகசம், மரவீடு ஆகியற்றின் கட்டுமான பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து தமிழக சுற்றுலா அமைச்சர் கா. ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளை மேலும் குஷிப்படுத்தும் வகையில், சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவு றுத்தி உள்ளார்.
இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா வளர்ச்சி அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 2022-வது ஆண்டு சுமார் 24 லட்சம் சுற்றுலாப்பணிகள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், சாகச பூங்கா அமைப்பதற்காக ரூ.10 கோடியும், கோடப்ப மந்து கால்வாய் பணிக்காக ரூ.10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி படகு இல்லத்தில், சாகச சுற்றுலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ளது.
இங்கு சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு (நிப் லைன்), விதானப் பயணம் (கேனோபி டூர்), இழைவரி சுழற்சி (ஜிப் சைக்கிள்), மாபெரும் ஊஞ்சல் (ஜெயண்ட் ஸ்விங்), ரோலர் கோஸ்டர் ஜிப்லைன் , பங்கீ ஜம்பிங், ராக்கெட் எஜேக்டர் ஆகிய பணிகள் நடந்து வருகின்றது. அடுத்தபடியாக ஊட்டி கூடுதல் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3.25 லட்சம் மதிப்பீட்டில், சாகச மற்றும் கெம்ப்ளிங், மரவீடு உணவகம், வாகனம் நிறுத்தும் வசதி ஆகியவை அமைய உள்ளன. இதன் மூலம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும்.
ஊட்டியை மேலும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகள் முடிந்த பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மென்மேலும் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட சுற்றுலா அதிகாரி உமா சங்கர், உதவி செயற்பொறியாளர் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- ெபாள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடந்தது.
- நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ெபாள்ளாச்சி,
எனது தந்தையே, என் வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்மாதிரி என பொள்ளாச்சியில் நடந்த பாராட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விஸ்வநாதன் கூறினார்.
ெபாள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா பொள்ளாச்சியில் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் துரை வரவேற்றார்.
விழாவில் நீதிபதி விஸ்வநாதன் பேசியதாவது:-
பொள்ளாச்சியில் சிறு வயதில் படித்த அனுபவம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. மேல் படிப்புக்காக வெளியூருக்கு சென்றாலும் மனதில் இருந்து பொள்ளாச்சியை நீக்க முடியாது.
தந்தை எனக்கு கல்வியை கொடுத்ததால் நல்ல நிலைக்கு வந்துள்ளேன். ஒழுக்கத்தை எனது பெற்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.
உலகத்தில் உள்ள அனைத்து தாய்களும் தனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் அவர்களது உழைப்பு, அர்ப்பணிப்பு வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.
எனது தந்தையே என் வாழ்க்ைகயிலும், தொழிலும் முன்மாதிரியாக உள்ளார். தற்போதுள்ள வக்கீல்கள் கடுமையாக உழையுங்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களது வழக்கை செவ்வனே செய்ய முயற்சிக்க வேண்டும்.
நமக்கு கடவுள் ஒரு பாதை வகுத்துள்ளார். அந்த பாதையில் கடமையை செவ்வனே செய்தால் அதற்கான பலன் கிடைக்கும்.
எனது நீதிபதி பதவியை பொறுப்பாக பார்க்க விரும்புகிறேன். இதற்கு கடின உழைப்பு தேவையாகும். இந்த கண்ணோட்டத்தில் இருந்தால் தான், மக்களுக்கு நீதியை வழங்க முடியும். நான் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் இந்த பொறுப்பில் உள்ளவரை நன்றாக பணியாற்ற கடவுள் மற்றும் பெரியோரின் ஆசி தேவை. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து வக்கீல்கள் சங்கம் சார்பில், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி நீதிபதிகள், வக்கீல்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- துறைவாரியாக மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
- எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் சார்பில் 3,391 பயனாளிகளுக்கு ரூ.25 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடலின் கீழ் இந்தியாவிற்கே முன்னோடியாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தி வருகிறார்.மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் நகர பஸ்களில் மகளிருக்கான இலவச பயணத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
குழந்தைகளின் அடிப்படை கல்வியை மேம்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற திட்டங்கள் மூலமாக தகுதியான நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும், பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்'' என்றார்.
- மானிய திட்ட கடன்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
- எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யேற்று வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசின் மானிய திட்டங்கள் வங்கியின் மூலம் பொது மக்களுக்கு சென்ற டைகின்றன. குறிப்பாக மாவட்ட தொழில் மையம் தாட்கோ, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை போன்ற துறைகள் மூலம் பொதுமக்களுக்கான கடன் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்ப டுகிறது. பொதுவாக மானிய கடன் திட்டங்கள் வங்கியின் மூலம் வழங்குவதால் தேர்வு செய்யப்பட்ட துறைகள் பயனாளிகளுக்கான மானிய தொகையினை விடுவிக்க பரிந்துரை செய்யப்படும். இதன் மூலம் கடன் பெறும் பயனாளிகள் கடன்களை திரும்பி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.வங்கிகளை பொறுத்த வரை பெறக்கூடிய மனுக்க ளை உடனுக்குடன் பரிசீ லனை செய்து பயனாளி களுக்கான கடன் தொகை யினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக தொழில் தொடங்க ஆர்வமுடன் வருபவர்களுக்கு நாம்உறுதுணையாக இருந்தால் தான் அவர்களின் முயற்சி மேலும் அதிகரிக்கும். எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, நபார்டு வங்கி மேலாளர் அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்