search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    X
    புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட உதிரமாடன்குடியிருப்பில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அரசு ரூ. 11.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றதலைவர் பாலசரஸ்வதி, துணைத் தலைவர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நட்டி குத்துவிளக்கேற்றி பணியை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முதல்வர்களும் திரும்பி பார்க்கின்றனர்.தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது. 

    இதனால்மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை பின்பற்றி இங்கு உள்ள திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் செயல்படுகின்றனர். அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை உள்ளது. இப்படிப்பட்ட முதல்வருக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார். 

    இதில் தி.மு.க., காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×