search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subsidized loan"

    • ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க மானிய கடன் பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல், விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்து டன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக 100 பேருக்கும், கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டவும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் உறைவிப் பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்கவும் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியின ருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம், ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப் படும்.

    200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின விவசாய தொழிலா ளர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்க லாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
    • 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    இத்தி ட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டு களுக்குள் வலை மற்றும் பரிசல்கள் பெற்ற வர்கள் விண்ண ப்பிக்க தகுதிய ற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்கு பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த செய்தி வெளியிட்டு நாளிலிருந்து வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் வேலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக முகவரி எண் 16, 5-வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலுார்-632006 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரில் சென்று தேவையான விவரங்களை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மானிய திட்ட கடன்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
    • எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யேற்று வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அரசின் மானிய திட்டங்கள் வங்கியின் மூலம் பொது மக்களுக்கு சென்ற டைகின்றன. குறிப்பாக மாவட்ட தொழில் மையம் தாட்கோ, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை போன்ற துறைகள் மூலம் பொதுமக்களுக்கான கடன் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்ப டுகிறது. பொதுவாக மானிய கடன் திட்டங்கள் வங்கியின் மூலம் வழங்குவதால் தேர்வு செய்யப்பட்ட துறைகள் பயனாளிகளுக்கான மானிய தொகையினை விடுவிக்க பரிந்துரை செய்யப்படும். இதன் மூலம் கடன் பெறும் பயனாளிகள் கடன்களை திரும்பி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.வங்கிகளை பொறுத்த வரை பெறக்கூடிய மனுக்க ளை உடனுக்குடன் பரிசீ லனை செய்து பயனாளி களுக்கான கடன் தொகை யினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக தொழில் தொடங்க ஆர்வமுடன் வருபவர்களுக்கு நாம்உறுதுணையாக இருந்தால் தான் அவர்களின் முயற்சி மேலும் அதிகரிக்கும். எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, நபார்டு வங்கி மேலாளர் அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×