என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீன் வலை, பரிசல்கள் வாங்க மானிய கடன்
- பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
- 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இத்தி ட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டு களுக்குள் வலை மற்றும் பரிசல்கள் பெற்ற வர்கள் விண்ண ப்பிக்க தகுதிய ற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்கு பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த செய்தி வெளியிட்டு நாளிலிருந்து வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் வேலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக முகவரி எண் 16, 5-வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலுார்-632006 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரில் சென்று தேவையான விவரங்களை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






