search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speech"

    • 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன.
    • இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா்.

    ஊட்டி,

    முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திறன் திருவிழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கருணாகரன் வரவேற்றாா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ் திட்டம் குறித்து விளக்கினாா்.

    நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. எனவே அங்கு மாணவா்கள் சோ்க்கை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

    தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலீடு செய்ய வலியுறுத்தினார்.

    இதன் காரணமாக 143 அயல்நாட்டு நிறுவனங்கள், தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்து உள்ளன. இதன் மூலம் 4.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    குன்னூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ உலக அளவில் தரம் உயா்த்தப்பட்டு உள்ளது. இங்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை மாணவா்கள் பயிலும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல்வேறு புதிய கருவிகளும் கொண்டு வரப்பட்டு உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

    தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசும்போது, முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 100 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன்படி 2-வது மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு உள்ளன. இதன்மூலம் எண்ணற்ற இளைஞா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், இதுவரை 1.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனா் என்றார்.

    இதில் ஊட்டி எம்.எல்.ஏ கணேசன், குன்னூர் நகராட்சி துணைத் தலைவா் பி.எம்.வாஷிம் ராஜா, குன்னூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுனிதா, ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், திட்டக்குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ், நகரமன்ற உறுப்பினா் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர்கள் காளிதாஸ்.செல்வம், நகர துணை செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
    • சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பரலட்டி கிராமத்தில் நேதாஜி விளையாட்டு சங்கம் சாா்பில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

    இதில் மத்திய கால்நடை, மீன்வளத் துறை இணை மந்திரி எல். முருகன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    மத்திய அரசு கேலோ இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதன் காரணமாக, மாவட்டம் மற்றும் கிராம அளவில் தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா். இந்தத் திட்டத்தால் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பரலட்டி கிராமத்தைச் சோ்ந்த கிஷோா் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று இந்த கிராமம், மாவட்டம், நாட்டுக்கு பெருமை சோ்த்து உள்ளாா். இதே போல பிட் இந்தியா திட்டம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் அறிமுகப்படுத்தியது. இது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பேணிகாத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமன், பாபு மற்றும் தும்மனட்டி, பரலட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா். முன்னதாக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு படுகா் சமுதாய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    • கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி என்றார்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டீல் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்துவைத் தார். அப்போது அவர் பேசி–யதாவது:-

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண் கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகா–தாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவம–னையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத் தேன்.

    ஒரு மாதம் கழித்து ஜூலை 15 ஆம் நாளான இன்றைக்கு (நேற்று) கலை–ஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்தி–ருக்கின்றேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததை–யும் செய்வான் இந்த ஸ்டா–லின் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரை–யில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.

    தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என் றால், இந்த மதுரை, தமிழ் நாட்டினுடைய கலைநகர். தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் கலை–ஞர்.

    இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறி–வாலயத்தை நான் அமைத் திருக்கிறேன். இந்த நூல–கத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமை–யும் எனக்கு கிடைத்திருப் பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

    சங் கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் இயற்றிய மாமதுரை–யில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக் கும், குழந்தைகள் –மாண–வர்கள் போட்டித் தேர்வர் கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெ–றக்கூடிய வகையில் ஆறு தளங்கள் மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக் கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலை–வர் கலைஞரே சிலை வடி–வமாக இங்கே காட்சிய–ளித் துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தான் என்பதை யாரும் மறந்திடக்கூடாது. அதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம். உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்றபோது தமிழ்ப் பற்று இருந்த–தால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டக் குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.

    பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னா–லும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்ட கல்லூரியிலும்தான். அன் றை அரசியல் சூழலும் கலை–ஞருக்குள்ளே இருந்த போராளியும், அவர் விரும் பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போன–தற்கு காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்.

    படிப்பை நாம் எல்லோ–ரும் அடையவேண்டும் என்ற தலைவர் கலை–ஞர் உருவாக்கியதுதான் இன் றைய நவீன தமிழ்நாடு. இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும் பாலானவை கலைஞரால் உருவாக்கப்பட்டவை. நவீன கலைஞரால் உருவாக்கப்பட் டது. ஒரு இனத்தின் வளர்ச் சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முத–லில் கொடுத்தது, திராவிட இயக் கத்தின் தாய்க்கட்சி–யான நீதிக்கட்சி. கல்விப் புரட் சியை ஏற்படுத்தியது தி.மு.க.–வோட ஆட்சி.

    தரமான கல்வி வழங்கு–வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முத–லிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டு இருக்கி–றோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், 'எண்ணும் எழுத்தும்' இயக் கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாண–வர்களின் பசியை போக்க 'முதலமைச் சரின் காலை உணவுத்திட்டம்' என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார் பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

    அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "புது–மைப்பெண் திட்டம்". வரு–கிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த–நாளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப் போகிறோம்.

    தகுதியுடைய குடும்பத் தலை–விகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறு–வார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப் பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன்,

    மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்து–ராமன், மேலக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரபு, அவைத் தலை–வர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சோமசுந்தர–பாண்டியன், மாவட்ட பிரதி–நிதி அழகு பாண்டி, இளை–ஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசி–குமார், மருதுபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரரா–கவன், கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாநகர் மாவட்ட இளை–ஞரணி அமைப்பாளர் சௌந்தர், 92-வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி, அரசு வக்கீல் ஸ்ரீதர், நியாய விலை கடை தொழிலாளர் சங்க தனுஷ்கோடி, பால–முருகன், மதுரை மாநகர் மாவட்ட 52-வது வார்டு தி.மு.க. விஜி என்ற விஜயகுமார்,

    ஒன்றிய சேர்மன் வேட்டையன், மதுரை மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட விளையாட் மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மணிகண் டன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராம பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பி–னர் வைகை பரமன், ஊராட்சி தலைவர்கள் கவிப்பிரியா கணபதி, ஆனந்த், சரண்யா ராஜவேல், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத்தலைவர் கார்த்திக், அலங்காநல்லூர் பேரூ–ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, சோழவந் தான் பேரூராட்சி தலைவர் ஜெய–ராமன், துணைத்தலை–வர் லதா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.
    • இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    வடவள்ளி,

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் கோவை அரசு சட்ட கல்லூரி சார்பில் கோவை சட்டக்கல்லூரியில், 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதன்மை விருந்தினராக கோவை அரசு சட்ட கல்லூரி முன்னாள் மாணவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு தழிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் துணை வேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார். கோவை அரசு சட்ட கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 700 பேர் நேரில் வந்து பெற்று கொண்டனர்.

    விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.விஸ்வநாதன் பேசியதாவது:-

    கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு இந்த கல்லூரி தான் காரணம்.

    சட்ட பட்டம் வந்து விட்டது. அவ்வளவு தான் என்று எண்ண விட வேண்டாம். இப்போது தான் உங்களுக்கு வாழ்க்கையே ஆரம்பமாகிறது. வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நான் உங்கள் முன் நீதிபதியாக இல்லாமல் நண்பராக இருந்து சொல்கிறேன்.

    நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. நேரத்தை வீணாக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நல்ல புத்தகங்களை எடுத்து படியுங்கள். அது எப்போதாவது பயன்படும்.

    வக்கீல் தொழில் என்பது மிக கடினமான தொழில். அதில் ஊறிவிட்டால் நமக்கு அது ஒரு அமிர்தம் போன்றதாக காணப்படும். நீதிபதியிடம் உங்கள் தரப்பு வாதங்களை பனிவுடன் எடுத்து வையுங்கள். இளைய வக்கீல்களாகிய நீங்கள் வரும் காலங்களில் உங்களுக்கு என்று சில திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

    நான் அரசு பஸ்சில் தான் நீதி மன்றத்திற்கு சென்றேன். உங்கள் மனதில் சரி என்று பட்டதை மறைத்து கொள்ளாமல் தைரியமாக வெளியில் பேசுங்கள். பொய் வழக்கு என்று தெரிந்தால் அதனை எடுத்து வாதிட வேண்டாம். வக்கீல் தொழிலில் வானம் கூட எல்லையாகாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும் போது, சட்டம், அரசு, நீதித்துறை என நாட்டின் 3 துறைகளோடு, 4-ம் துறையான பத்திரிகையும் சேர்ந்து செயல்பட்டால் நாடு சிறப்பாக செயல்படும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மிக எளிதாக கிடைக்ககூடிய படிப்பு சட்ட படிப்பு.

    கோவை கல்லூரியில் யானை பிரச்சனை இருப்பதாக கூறிய நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், சட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு 95-க்கு கீழ் கட்டாப் மதிப்பெண் வைக்க கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.

    • வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பந்தலூர்

    தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் பந்தலூர் அருகே பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு, வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பேச்சு, ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பிதிர்காடு வனச்சரகர் ரவி தலைமை தாங்கினார். சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், பிதிர்காடு வனவர்கள் ஜார்ஜ், பிரவின்சன், பெலிக்ஸ், பள்ளி தலைமை ஆசிரியர் மீரா மற்றும் ஆசிரியர்கள், வனத்துறையினர், பெற்றோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வேண்டும்.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் மணிமாறன் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரையில் நாளை மறுநாள் (ஜூலை 15-ந் தேதி) பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறப்பு விழா நடைபெறு–கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத் தினை திறந்து வைக்கிறார். மதுரை வரும் முதல்வரை வரவேற்பது தொடர்பாக திருமங்கலம் தி.மு.க. அலுவலகத்தில் நேற்று தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    முதல்வர் வரவேற்பில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் வந்து முதலிடத் தினை பிடிக்கவேண்டும். இன்னும் 30 ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி–தான் நடைபெறும் அந்தள–விற்கு பல்வேறு நலத்திட்டங் களை முதல்வர் செய்து வருகிறார். கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் சால்வை, வேட்டி, பொன்னாடையை கட்சியினர் தவிர்த்து முத–ல் வருக்கு புத்தங்களை தர–வேண்டும்.

    நாம் தரும் புத்தகங்கள் நூலகத்தில் இடம் பிடித்து பொதுமக்களுக்கு பயன் தரும். மேலும் முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை அறி–வித்துள்ள தமிழக முதல் வருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை–வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங் கம், துணை செயலாளர் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, தங்கபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நகர செயலா–ளர்கள் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா–முத்துக்குமார், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், திருமங்கலம் நகர துணை–செயலாளர் செல்வம், பொருளாளர் சின்னசாமி நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்க வேண்டும்.
    • கல்லூரி விழாவில் டி.எஸ்.பி. பொன்னுசாமி பேசினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை தாங்கினார். ஒருங் கிணைப்பாளர் பிரதீபா சிறப்பு விருந்தினரை அறிமு–கப்படுத்திப் பேசினார். விழாவில் மதுரை கோட்ட ரெயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகம் பங்கேற்று அரசு பணிகளில் சேர தங்களை தயார் செய்து–கொள்ள வேண்டும். மாண–வர்களுக்கு அரசியல் ஆர் வம் இருக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து தான் நல்ல தலைவர்கள் உருவாக முடியும் என பேசினார்.

    அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி ஆகியோர் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த–னர். இணை முதல்வர் சுந்த–ரராஜ் வாழ்த்திப் பேசினார்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை மாணவர்களுக்கான கல்விப்புலத் தலைவர் நிர்மல் ராஜ்குமார் ஏற்பாடு–களை செய்திருந்தார். மாணவி பிரதிநிதி மோனிகா இந்திரா நன்றி கூறினார்

    • அ.தி.மு.க.வை முடக்க நினைத்து கனவு கண்ட துரோகிகளுக்கு பலத்த இடி விழுந்து விட்டது.
    • கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    இந்திய தேர்தல் ஆணை–யம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற் றம் செய்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார் பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருமங்கலம் தொகுதியில் உள்ள நடுவக்கோட்டை, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக அம்மா பேரவை செயலாள–ரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொது–மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா–வுக்கு பிறகு தாய் இல்லாத பிள்ளைகளாய் நாம் தவித்த போது இந்த இயக்கத்தையும், இயக்கத் தொண்டர்களை காப்பாற்ற கலங்கரை விளக்கமாய் எடப்பாடியார் நமக்கு கிடைத்தார். இந்த இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையில் உலக அளவில் ஏழாவது இடத்திற்கும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கும், தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார். உலகத்திலே ஏழைகளுக்கான ஒரே மக்கள் இயக்கம் தான் அ.தி.மு.க. உள்ளது.

    இன்றைக்கு இந்திய தேர் தல் ஆணையம் கழக பொதுச் செயலாளராக எடப்பாடியாரையும் அங்கீக–ரித்துள்ளது. அதனைத் தொ–டர்ந்து தலைமை கழக நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் அங்கீ–கரித்த நல்ல மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.

    இந்த இயக்கம் தான் ஜனநாயகத்தின் முகவரி யாக உள்ளது. தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் வளர்ச்சி, தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லை என்ற நிலை உரு–வாக வேண்டும். அமைதி, வளம், வளர்ச்சி என்று இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் சேவை–யாற்ற வேண்டும் என்ற அம்மாவின் தெய்வ வாக்கை கொண்டு மக்கள் பணியாற் றியவர் எடப்பாடியார்.

    இயக்கத்திற்காக எடப் பாடியார் ஊன், உறக்கம் இல்லாமல் உழைத்து வருகி–றார். ஆனால் தொடர்ந்து சிலர் அவதூறு பழிச்சொல் கூறி வருகிறார்கள். இந்த இயக்கத்தை எப்படியாவது முடக்கிட வேண்டும் என்று எதிரிகளும், துரோகிகளும் இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண் டும் என நினைத்தனர். அவர்கள் கண்ட கனவில் இடி விழுந்து விட்டது.

    ஒரு கிளைக் கழகச் செயலாளர் நாட்டின் முதல–மைச்சராக ஆகலாம். ஒரு கிளைக் கழகச் செயலாளர் ஒரு இயக்கத்தின் கழகப் பொதுச் செயலாளராக வரலாம் என்று தன் உழைப் பால் இன்று எடப்பா–டியார் நிரூபித்துள்ளார். நிச்சயம் வருகின்ற தேர்தல்களில் எடப்பாடியார் மகத்தான வெற்றி பெற்று, அம்மாவின் புனித ஆட்சி அமைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ம.க.ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.

    சிவகாசி

    சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார். விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து சிறப்புரை யாற்றினார். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,

    இனி வரும் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் பா.ம.க. போட்டியிடும். 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கப்படும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.

    • சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கல்வி பயன்பட வேண்டும்.
    • புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேருபவரின் எண்ணிக்கை 3-ல் 1 பங்காக உள்ளது. இதில் உயர்கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால், உயர்கல்விக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 52 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

    கல்லூரி என்பது பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. அந்த கல்வியோடு, சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்கள் குறித்தும் கண்காணிப்பது, அது குறித்து ஒரு தீர்க்கமான பார்வை கொண்டிருப்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பதுதான் கல்லூரி.

    அந்த கல்வியை முறையாக பயில்வதன் மூலம் ஒரு முழுமைபெற்ற, சமூகத்தில் ஒரு பொறுப்பு மிக்க பெண்ணாக உருமாற்றம் பெற்று, உங்களை காத்துக் கொள்வதற்கும், சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், உங்களை சார்ந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கும் உங்கள் கல்வி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) சிக்கந்தர் பீவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர் முனைவர் உஷா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் வரவேற்பில் தமிழகமே திரும்பி பார்க்க வேண்டும்.
    • அமைச்சர் மூர்த்தி கூட்டத்தில் பேசினார்.

    மதுரை

    மதுரை பசுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய 3 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் முன்னிலையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி மதுரை யில் உலகத்தரம் வாய்ந்த நமது தலைவர் கலைஞர் பெயரால் அமைக்கப்பட்ட நூலகத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார். இது அரசு விழா என்பதால் வரவேற்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில் இருந்து விரகனூர் ரவுண்டானா வரை மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அணி வகுத்து வரவேற்க வேண்டும்.

    மதுரை மாநகர் பகுதிகளில் நூலகம் வரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பார்கள். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்

    50-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பை மதுரை மட்டு மல்லாது தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வருகிற பாராளு மன்றத் தேர்தலில் எதிரொ லிக்கும் வகையில் நாம் எழுச்சியுடன் வரவேற்க வேண்டும். 40-க்கு 40 நாம் வெற்றி பெற்ற வேண்டும்.

    மேலும் மதுரை, விருது நகர், தேனி ஆகிய 3 பாராளு மன்ற தொகுதியை தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக தலைமையிடம் இந்த 3 தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.

    அது நமது உரிமை, இருப்பினும் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் நாம் பெரும் வெற்றி இந்திய பிரதமர் யார் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மதுரையில் நடந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் 72 ஆயிரம் பேருக்கு வழங்கி னோம். பிற மாவட்டங்களில் இல்லாத அளவு அந்த நிகழ்ச்சி இருந்தது என்று நாம் பாராட்டப் பெற்றோம். அதேபோல் விரைவில் ஒரு லட்சம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பொன் முத்து ராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், முன்னாள் மேயர் குழந்தை வேலு, மாவட்ட அவைத் தலைவர்கள் பாலசுப்பிர மணியன், ஒச்சு பாலு, நாக ராஜன், மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கரு.தியாகராஜன், தனசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான்.

    மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா கலா நிதி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், சுவிதா விமல், சரவண புவனேஸ்வரி, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி, சசிகுமார், ஈஸ்வரன், கிருஷ்ணபாண்டி, ராமமூர்த்தி.

    ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், வேட்டையன், பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈஸ்வரி, ஜெய ராமன், நகர் மன்ற தலைவர்கள் ரம்யா முத்துக்குமார், முகமது யாசின், சுகாதார குழு தலைவர் ஜெயராஜ் ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பால ராஜேந்திரன், தனசேகர், தன்ராஜ், பசும்பொன் மாறன்.

    கவுன்சிலர்கள் கருப்புசாமி, வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், காளிதாஸ், வாசு, செந்தா மரைக்கண்ணன், உசிலை சிவா, சுதன், ஆழ்வார், அணி அமைப்பா ளர்கள் விமல், வக்கீல் கலாநிதி, வட்ட செயலாளர் மகேந்திரன், புதூர் வேலு, ராஜேந்திரன், நெல்பேட்டை லயன் சீனிவாசன், நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும்.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கூட்டு துப்புரவுப் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்,சிவகங்கை பழைய நீதிமன்ற வாசல் அருகி லுள்ள, ராமச்சந்திரா பூங்கா பகுதியில் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்து இடங்களிலும் ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப்பைகளை அப்புறப்படுத்தும் திட்டம் ஒன்றிய, மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், மண்ணை பாதுகாப்போம் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற குறிக்கோளுடன் பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    நகர்ப்பகுதி மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பையை தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வருங்காலங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை தவிர்த்து மண் வளத்தை பாதுகாப்பதுடன் சுகாதாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீண்டும் மஞ்சள்பை திட்டத்தினை கருத்தில் கொண்டு அனைவரும் நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும்.

    இதேபோன்று, சுகாதாரத்தினை பேணிக்காத்திடும் வகையில், குப்பைகளை தங்களது பகுதிகளிலுள்ள தெருவோரங்களில் போடாமல், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை, முறையாக தங்களது வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, தங்களது பகுதிகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் கீழ், குப்பைகளை தரம் பிரித்திடுவோம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடு வோம்-என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில், சிவகங்கை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறு வனத்தைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×