என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் வரவேற்பு
    X

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியபோது எடுத்த படம்.

    முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் வரவேற்பு

    • மதுரையில் முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் வரவேற்பில் தமிழகமே திரும்பி பார்க்க வேண்டும்.
    • அமைச்சர் மூர்த்தி கூட்டத்தில் பேசினார்.

    மதுரை

    மதுரை பசுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய 3 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் முன்னிலையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி மதுரை யில் உலகத்தரம் வாய்ந்த நமது தலைவர் கலைஞர் பெயரால் அமைக்கப்பட்ட நூலகத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார். இது அரசு விழா என்பதால் வரவேற்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில் இருந்து விரகனூர் ரவுண்டானா வரை மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அணி வகுத்து வரவேற்க வேண்டும்.

    மதுரை மாநகர் பகுதிகளில் நூலகம் வரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பார்கள். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்

    50-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பை மதுரை மட்டு மல்லாது தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வருகிற பாராளு மன்றத் தேர்தலில் எதிரொ லிக்கும் வகையில் நாம் எழுச்சியுடன் வரவேற்க வேண்டும். 40-க்கு 40 நாம் வெற்றி பெற்ற வேண்டும்.

    மேலும் மதுரை, விருது நகர், தேனி ஆகிய 3 பாராளு மன்ற தொகுதியை தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக தலைமையிடம் இந்த 3 தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.

    அது நமது உரிமை, இருப்பினும் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் நாம் பெரும் வெற்றி இந்திய பிரதமர் யார் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மதுரையில் நடந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் 72 ஆயிரம் பேருக்கு வழங்கி னோம். பிற மாவட்டங்களில் இல்லாத அளவு அந்த நிகழ்ச்சி இருந்தது என்று நாம் பாராட்டப் பெற்றோம். அதேபோல் விரைவில் ஒரு லட்சம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பொன் முத்து ராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், முன்னாள் மேயர் குழந்தை வேலு, மாவட்ட அவைத் தலைவர்கள் பாலசுப்பிர மணியன், ஒச்சு பாலு, நாக ராஜன், மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கரு.தியாகராஜன், தனசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான்.

    மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா கலா நிதி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், சுவிதா விமல், சரவண புவனேஸ்வரி, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி, சசிகுமார், ஈஸ்வரன், கிருஷ்ணபாண்டி, ராமமூர்த்தி.

    ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், வேட்டையன், பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈஸ்வரி, ஜெய ராமன், நகர் மன்ற தலைவர்கள் ரம்யா முத்துக்குமார், முகமது யாசின், சுகாதார குழு தலைவர் ஜெயராஜ் ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பால ராஜேந்திரன், தனசேகர், தன்ராஜ், பசும்பொன் மாறன்.

    கவுன்சிலர்கள் கருப்புசாமி, வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், காளிதாஸ், வாசு, செந்தா மரைக்கண்ணன், உசிலை சிவா, சுதன், ஆழ்வார், அணி அமைப்பா ளர்கள் விமல், வக்கீல் கலாநிதி, வட்ட செயலாளர் மகேந்திரன், புதூர் வேலு, ராஜேந்திரன், நெல்பேட்டை லயன் சீனிவாசன், நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×