search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க.ஆலோசனை கூட்டம்
    X

    பா.ம.க.ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ம.க.ஆலோசனை கூட்டம்

    • பா.ம.க.ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.

    சிவகாசி

    சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார். விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து சிறப்புரை யாற்றினார். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,

    இனி வரும் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் பா.ம.க. போட்டியிடும். 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கப்படும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.

    Next Story
    ×