search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தலூரில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி
    X

    பந்தலூரில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி

    • வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பந்தலூர்

    தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் பந்தலூர் அருகே பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு, வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பேச்சு, ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பிதிர்காடு வனச்சரகர் ரவி தலைமை தாங்கினார். சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், பிதிர்காடு வனவர்கள் ஜார்ஜ், பிரவின்சன், பெலிக்ஸ், பள்ளி தலைமை ஆசிரியர் மீரா மற்றும் ஆசிரியர்கள், வனத்துறையினர், பெற்றோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×