search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seedlings"

    • 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
    • கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த தோட்டக்கலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கத்தரி, மிளகாய் உட்பட பல்வேறு வகையான குழி தட்டு காய்கறி நாற்றுக்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று தஞ்சை அடுத்த மருங்குளத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் , விவசாயிகளுக்கு மானிய விலையில் கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்பட அனைத்து வட்டாரங்களிலும் அந்தந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் கூறும் போது:-

    விவசாயிகளுக்கு தை பட்டத்திற்காக தங்கு தடையின்றி காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 10.5 லட்சம் எண்ணிக்கையில் கத்தரி நாற்றுகள், 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லி, எலுமிச்சை போன்ற நாற்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தப் பணி நடந்து வருகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    • தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது.
    • 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது. அதனை அதிகப்படுத்தும் வகையில் பசுமை தமிழகம் திட்டத்தை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் 2032 ம் ஆண்டுக்குள் வனப்பரப்பை 33 சதமாக உயர்த்தும் வகையில், இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 15 கோடி மரக்கன்று நடப்படும் .அதற்கு அடுத்த ஆண்டு 25 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்(பல்லடம்), அசோகன் (பொங்கலூர்), பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை.
    • பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

     குண்டடம், நவ.23-

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.

    இது குறித்து மேடுக்கடையை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-தற்போது இப்பகுதி விவசாயிகள், சின்ன வெங்காய நாற்றுகக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய ஒரு ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது

    இந்த பயிர்கள் 40 முதல் 45 நாகளில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளதாலும் சில நாட்களாவே பரவலாக மழை பொழிந்துள்ளதால் தேனீ, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொங்கலூர், பூளவாடி, உடுமலை, உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.

    இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    கடந்தவருடம் ஒரு பாத்தி சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானதால் நல்ல லாபம் ஈட்டினர். இதனால் இந்தவருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில் நுட்ப வளர்ச்சியால், வீரிய ஒட்டு ரகம், அதிக மகசூல் தரும் ரகங்கள் என விதைகள் வந்துள்ளன.
    • தக்காளி நாற்று 50 பைசாவுக்கும், மிளகாய், கத்தரி, காலிப்ளவர் 90 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை:

    வீரிய ஒட்டு ரக விதைகள் வருகைக்கு முன்பு, விவசாயிகளே வயல்களில் நாற்றுக்களை தயாரித்து நடவு செய்து சாகுபடி செய்து வந்தனர். தொழில் நுட்ப வளர்ச்சியால், வீரிய ஒட்டு ரகம், அதிக மகசூல் தரும் ரகங்கள் என விதைகள் வந்துள்ளன.

    இந்த விதைகளில் நடவு, வளர்ப்பு உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. இதற்கு தீர்வாக விவசாயிகளுக்கு உதவும் வகையில், நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு, 20 முதல் 30 நாட்கள் வரை வளர்ந்த நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி மற்றும் அருகாமையிலுள்ள மற்ற பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் அமைந்துள்ளன.

    ஒவ்வொன்றும் தலா 3 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். இப்பண்ணைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்ளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.இப்பண்ணைகளிலிருந்து தக்காளி நாற்று 22 நாட்களிலும், மற்ற காய்கறி நாற்றுக்கள் 30 நாட்களிலும் விவசாயிகள் வாங்கி நடவு செய்கின்றனர்.

    இதனால் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு அதிகரித்தாலும் சாகுபடி காலம் குறைகிறது. குறைந்த நாட்களில் மகசூல் எடுக்க முடிகிறது.இதனால் உடுமலை சுற்றுப்பகுதிகளில் காய்கறி சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

    ஒரு ஏக்கருக்கு தக்காளி நாற்றுக்கள் 10 ஆயிரம் தேவைப்படுகிறது. அதே போல் மிளகாய் நாற்றுக்கள், 7 ஆயிரம், கத்தரி 5 ஆயிரம், காலிப்ளவர் 10 ஆயிரம் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது.தக்காளி நாற்று 50 பைசாவுக்கும், மிளகாய், கத்தரி, காலிப்ளவர் 90 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், வேளாண் சாகுபடி பணிகள் பாதித்துள்ளது. அதிலும், தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடி முடங்கியுள்ளது.இதனால் ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும், அவற்றின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப தலா ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை நாற்றுக்கள் தேக்கமடைந்துள்ளன.

    இங்கு உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் 25 முதல் 30 நாட்களில் வயல்களில் நடவு செய்யாவிட்டால், முழுமையாக வீணாகும் நிலையும், பல லட்சம் ரூபாய் நிதி இழப்பும் ஏற்படும் சூழல் உள்ளது.

    அதே போல் தக்காளி நடவு செய்தால் 60 நாட்களில் அறுவடை என ஜனவரி மாதம் தக்காளி வரத்து துவங்கும். நேரடியாக நிலத்தில் நடவு செய்யும் தக்காளி, 40 நாட்கள் வரையும், கொடி முறையில் நடவு செய்யும் தக்காளி 70 முதல் 90 நாட்கள் வரையும் மகசூல் கொடுத்து வரும்.மிளகாய், கத்தரி உள்ளிட்ட பயிர்கள் 75 முதல் 80 நாட்கள் அறுவடைக்கு தயாராகி 6 மாதம் வரை மகசூல் தரும். சாகுபடி பணி தாமதமானதால் அடுத்து வரும் நாட்களில் உற்பத்தி குறைந்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    இது குறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    பருவத்திற்கு தேவையான, நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பருவ மழை தாமதமாக துவங்கிய நிலையில், தொடர்ந்து பெய்து வருவதால் விவசாய பணிகள் பாதித்துள்ளன.அதே போல், தக்காளி விலை தற்போது கடும் சரிவை சந்தித்து 14 கிலோ பெட்டி, ரூ.100க்கும் குறைவாக விற்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.தொடர் மழை மற்றும் அடுத்தடுத்து புயல், கன மழை என வானிலை மையம் அறிவித்துள்ளதால் வானிலை நிலவரம், பருவ மழைக்கு பின் நடவு செய்யலாம், என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    தற்போது, நடவு செய்த தக்காளி நாற்றுக்களும் பாதித்துள்ளன. இதனால் நாற்றுப்பண்ணைகளில், உற்பத்தி செய்த நாற்றுக்கள் அதிகளவு தேக்கமடைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பண்ணைகளிலுள்ள நாற்றுக்கள் வீணாகி விடும்.அடுத்த சுற்று நாற்று உற்பத்திக்கும், ஒரு மாதம் வரை தாமதமாகும். மழை குறைந்து விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகும் போது, நாற்றுக்கள் பற்றாக்குறை ஏற்படும்.

    மழையில் நாற்றுக்கள் நடவு செய்தாலும், அழுகல், வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். நடப்பு சீசனில் தக்காளி நடவு பெருமளவு குறைந்துள்ளதால், ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் வரத்தும் குறையும்.மற்ற காய்கறிகளுக்கும் இதே சூழல் உள்ளதால், விலையும் உயரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • தூர் வெடித்த பயிரினை கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
    • நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம்.

    திருவாரூர்:

    மழையிலிருந்து சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுமென மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து ள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்க வாய்ப்புள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூழ் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான் இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் நாற்றாங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும்.

    தூர் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் இரகங்களை நடலாம். அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

    நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும்.

    போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்ட பிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    பாக்டீரியா இலைக்கருகில் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்டெப்ரோமைசின் சல்பெட், டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.

    நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி
    வேளாண் துறை அலுவலர்களை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1 முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.
    • புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறை–களான தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கள் ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுவதை தவிர்க்கலாம்.

    காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரம் அளித்து பயிரின் ஊட்டச்சட்டி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

    கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதை தவிர்க்கலாம். 1 முதல் 3 வயது உள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

    வாழைத்தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிகள் செய்ய வேண்டும். வாழை தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். நிழல் வலை குடிலின் குழிதட்டில் தயார் செய்யப்பட்டுள்ள நாற்றுகள் அதிகப்படியான மழை நீரால் பாதிப்படையாமல் இருக்க நெகிழித்தாள்கள் கொண்டு நாற்றுகளை மூடி பாதுகாக்கலாம்.

    காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் எதிர் திசையில் கயிறு , கழிகள் மூலம் முட்டு கொடுத்து காற்றின் வேகத்தில் இருந்து புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். கனமழை அல்லது காற்றுக்கு பின் மரங்களில் பாதிப்பு இருப்பின் மரத்தை சுற்றி மண் அணைத்து மரங்களுக்கு தேவையான தொழு உரம் இடவேண்டும். பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் உயிர் நோய் கட்டுப்பாட்டு காரணிகளை இட்டு நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பா நடவு பணிகளும் நாற்று பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை அறுவடை ஏறக்குறைய நிறைவடைந்து விடும் நிலையில் உள்ளது.

    தாம தமாக நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஏரி பாசன பகுதிகளான செங்கிப்பட்டி பகுதியிலும் சில கிராமங்களில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சம்பா நடவு பணிகளும் நாற்றுப் பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தாளடி நடவு பணிகளும் மெதுவாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களை உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் முழு வீச்சில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

    விவசாயிகள் உரத் தட்டுப்பாடு, கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவுப் பணிகளிலும் வேளாண் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடவு பணிகளை செய்து விட வேண்டும் என்று விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள அன்பு உலகம் தொண்டு நிறுவனம் சார்பில் வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அன்பு உலகம் தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் தலைமை தாங்கினார்.

    வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு சுற்று சூழலின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

    முன்னதாக நேற்று முன்தினம் வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு வெலாசிட்டி மால் வளாகத்தில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் பி.வி.ஆர்.திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் காலை முதல் இரவு வரை மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் அன்பு உலக தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பி.வி.ஆர். திரையரங்க மேலாளர் கலாநிதி, மாறன் அசோசியேட்ஸ் மேலாளர் மணிமாறன் மற்றும் அன்பு உலக தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 20 நிமிடங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் பசுமை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 6 நாட்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி காரைக்குடி கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பசுமை திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    5-ம் நாளான நேற்று வரை 80 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமுக ஆர்வலர்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினர்க ளுக்கும் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, 6-ம் நாளான இன்று கின்னஸ் சாதனை முயற்சியாக, 20 நிமிடங்களில் 25 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.

    அழகப்பா கலை கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை முயற்சியை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் லால்வேனா, காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மரங்களை ஆர்வமுடன் நட்டனர்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது. முடிவில் ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செயலாளர் டாக்டர் குமரேசன் நன்றி கூறினார்.

    • 75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழகோவில்பத்து ஊரா ட்சியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு கிரா மசபை கூட்டம் நடைபெ ற்றது. கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினே ஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குஉள்பட ஊராட்சியில் நிறைவே ற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அமானுல்லா உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும்.
    • சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் வழியாக பழைய கோட்டை முதல் தாராபுரம் வரை செல்லும் ஈரோடு பழனி சாலை அகலப்படுத்தும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50 ஆண்டுகள் கடந்த வேம்பு, புளி, வாகை, புங்கன், நொச்சி, வெள்ளவேல மரங்கள் பலவும் வெட்டி அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

    ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முக்கிய வீடாக பழனி விளங்குகிறது‌. வட மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாக வரும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் பயன்படுத்தும் சாலையாகவும், ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்குச் செல்ல பயன்படுத்தும் முக்கிய சாலையாக இது அமைந்துள்ளது.

    மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியம், எண்ணெய் வித்து பொருட்களை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இரு தேசிய நெடுஞ் சாலைகளை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை யாக இது உள்ளது.

    ஈரோடு முதல் 112 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் சாலையை அகலப்படுத்த அருகில் இருந்த 50 ஆண்டுகள் கடந்த பழமையான மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனை அடுத்து வேப்பமரம்,புளிய மரம் என பல நூறு மரங்கள் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெட்டப்பட்ட மரங்களை ஈடு செய்யும் வகையில்,காங்கயம் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், விரிவாக்கம் செய்த சாலை ஓரத்தில் புதிதாக வேம்பு புங்கன், நாவல், வாகை,புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைத்து மரக் கன்றுகளை பராமரித்து வருகின்றனர்.

    மழை காலம் இல்லாத சமயங்களில் சாலைப்பணியாளர்கள் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி கண்காணித்தும் வருவதால்,ஒரு சிலவற்றை தவிர மற்ற மரங்கள் நன்கு துளிர்த்து வளர்ந்து உள்ளது.வெட்டபட்ட மரங்களுக்கு பதில் உடனடியாக மரக்கன்று வைத்து பராமரித்து வரும் நெடுஞ்சாலைத் துறையின் செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • பசுமை இயக்க திட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக 2031-ம் ஆண்டிற்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • இதற்காக மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடப்பட இருக்கிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பசுமை இயக்க திட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக 2031-ம் ஆண்டிற்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடப்பட இருக்கிறது. ஒவ்வொரு வனக்கோட்டத்திற்கும் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    4.29 லட்சம் மரக்கன்றுகள்

    அதன்படி சேலம் வனக்கோட்டத்திற்கு 4.29 லட்சம் மரக்கன்று ஆத்தூர் வனக்கோட்டத்திற்கு 5.39 லட்சம் என ெமாத்தம் மாவட்ட வனக்கோட்டத்திற்கு 9.68 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, 20 இடங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இதில் மலை வேம்பு, தேக்கு, மகிழம், ஈட்டி, புளியம், மலைநெல்லி, கொய்யா, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இடம் பெற்றுள்ளன. அரசு சார்பில் ஒரு மரக்கன்று வளர்க்க 20 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது.

    ×