search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபரங்கள்"

    • அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது விபரங்களை தேசிய தரவுதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
    • பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று சிவகங்ககை லெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெடடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கியுள்ளது.

    https://eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள்,பேக்கிங் செய்வோர் உள்ளிட்ட 370 வகையான துறைகளில் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    eSHRAM Portal- லில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ள லாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

    இத்தரவுதளத்தில் தொழிலாளர்கள் தங்களைப்பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓ.டி.பி. மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்குப் புத்தகம் போன்ற தேவையான விவரங்கள் இருக்க வேண்டும்.

    மேலும் இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN என்ற 12-இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

    அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெற வேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவுதளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.

    எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும்.
    • மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

        சேலம்:

    தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்பட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பவதாவது-

    பள்ளிக்கல்வித்துறையில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்கு பின்னர் ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தவிர பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவல கங்கள், பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியாளர் விபரங்களையும் தனி அறிக்கையாக அனுப்ப வேண்டும் இநத பணி களின்போது உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவரின் விபர மும் விடுபடாதவாறு அறிக்கையை விரைவாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழகோவில்பத்து ஊரா ட்சியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு கிரா மசபை கூட்டம் நடைபெ ற்றது. கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினே ஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குஉள்பட ஊராட்சியில் நிறைவே ற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அமானுல்லா உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×