search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbers"

    • வேப்பூர் அருகே கோவிலில் திருடிய கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மாளிகைமேடு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி சொக்கலிங்கம் கடந்த 1 ஆம் தேதி கோவிலை பூட்டி விட்டு 2- ந் தேதி கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோவில் தர்மகத்தா கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கோவில் மணிகள் திருடு போனது சம்பந்தமாக குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டதின்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மேற்பார்வையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலி ங்கம் , காவலர்கள் கலை செல்வன் , நாராயணசாமி ஆகிய தனிப்படையினர் விசாரணை மேற்கொ ண்டனர் .

    கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் கண்காணிப்பு கேமிராவில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது . பதிவாகி இருந்த புகைப்படத்தை வைத்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர் . இத்திருட்டு வழக்கில் 4 குற்றவாளிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது . குற்ற வாளிகளை தேடி தனிப்படை போலீசார் தொளார் கிராமம் பஸ் ஸ்டாப்பில் கண்கா ணித்தபோது அங்கு இருந்த 2 நபர்கள் தப்பி ஓட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் வெங்கடேசன் , சங்கர் என கூறினர் . பின்னர் வெங்கடேசன் என்பவர் மாளிகைமேடு கோவிலுக்கு சொந்தமான 7 மணிகளை வடிவேல் , சங்கர் , கார்த்தி இவர்களுடன் சேர்ந்து கோவிலில் இருந்த மணிகளை உடைத்து திருடியது தெரிய வந்தது.

    மேலும் நாங்கள் கூலி வேலை செய்து வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் திருடலாம் என ஒன்று கூடி மாளிகைமேடு அய்யனார் கோவிலில் இருந்த கோவில் மணிகளை நாங்கள் 4 பேரும் சேர்ந்து உடைத்து எடுத்து கொண்டு பெரியாகுறிச்சி சென்றோம். மேலும் திருடிய மணிகளை வடிவேலும் , கார்த்தியும் விற்று பணம் கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.எனதெரிய வந்தது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா முதுகுளம் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42 ), சங்கர் வயது 47 ஆகிய இருவரை கைது செய்தனர் . மேலும் தலைமறைவான வடிவேல் மற்றும் கார்த்தி யைவலைவீசி தேடி வருகின்றனர். சிறப்பாக பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான தனிப்ப டையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார்.

    • வள்ளியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    • மர்மநபர்கள் நூதன முறையில் வள்ளியம்மாளிடம் நகையை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூா் தென்னம்பாளையம் காலனியை சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 66). இவா் தென்னம்பாளையத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் செக்கிங் பிரிவில் பணியாற்றி வருகிறாா். இந்தநிலையில், தென்னம்பாளையம் அருகே வள்ளியம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 பேர் போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனா்.

    இந்தப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதால் நகைகளை அணிந்து செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனா். பின்னா் வள்ளியம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகை, 4 பவுன் தங்க வளையல் ஆகியவற்றை வாங்கி அவரிடம் இருந்த பர்சில் வைத்து திருப்பிக் கொடுத்துள்ளனா். இதையடுத்து, வள்ளியம்மாள் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது பர்சில் கற்கள் இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். இதன் மூலம் மர்மநபர்கள் நூதன முறையில் வள்ளியம்மாளிடம் நகையை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து வள்ளியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • புவனகிரி அருகே கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.
    • இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவன கிரியில் குறிஞ்சிப்பாடி சாலையான வயல்வெளி பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இன்று காலை மர்ம நபர்கள் சென்றனர். கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். பின்னர் அதனை அங்குள்ள வயல் வெளியில் வீசி சென்று தலைமறை வானார்கள். இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் உண்டி யல் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதுகுறத்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குபதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த கும்பலை தேடி வருகிறார்கள்.

    • கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
    • ஒர்க்‌ஷாப்பில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). இவர் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது. இதனைத்தொடர்ந்து அவர் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது 2பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று சி.சி.டி.வி. கேமராவில் காணப்பட்ட இருவரும் அவினாசிபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்ததை மகேஷ் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் இருவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவர்களில் ஒருவர் திருப்பூர் புதுரோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் சேகர் (43 ), மற்றொருவர் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் ஆனந்த் (53) தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் போலீசார் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி உள்ளனர்.

    இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • அன்னமாா் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது.
    • கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலா் அருள்குமாா் பலத்த காயமடைந்தாா்.

    அவிநாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி முத்துசெட்டிபாளையம் பகுதியில் உள்ள அன்னமாா் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் அவிநாசி போலீஸ் நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றும் திருப்பூா் ஆயுதப் படை 2ம் நிலை காவலரான அருள்குமாா் (27) என்பவா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவிநாசி முத்துசெட்டிபாளையம் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும்படியாக அதிவேகமாக சென்ற 3 நபா்களை பிடிக்கச் சென்றபோது, அவா்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலா் அருள்குமாா் பலத்த காயமடைந்தாா்.

    உடனிருந்தவா்கள் பிடிக்க முயன்றும் 3 நபா்களும் தப்பிச்சென்றனா். இதையடுத்து அருள்குமாா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தில் உள்ள அன்னமாா் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்கள், ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையர்கள் புகுந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம்அருகே ெஜயம்கொண்டம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக கலைச்செல்வன், விற்பனையாளராக மூர்த்தி, தண்டபாணி ஆகியோர் உள்ளனர்.

    கடை உடைப்புநேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கடையை பூட்டை உடைத்தனர். பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்தனர்.அப்போது கடையில் கண்காணிப்பு காமிரா இருந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இன்று காலை டாஸ்மாக் கடை திறந்து கிடப்பது கண்டு அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து சூப்பர்வைசர் கலைச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்தார். அங்கு மதுப்பாட்டில்கள் அப்படியே இருந்தது. எதுவும் கொள்ளைபோகவில்லை.

    இதுகுறித்து மருதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் சமீபத்தில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    அதனடிப்படையில் கீழ்வேளூர் அருகே கூட்டுக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த தமிழ்மாறன், தனராஜ், ஹரிஹரன், குருபாலன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தொடர் கொள்ளை மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திட்டக்குடி அருகே போலீசாரை கண்டதும் மணல் ெகாள்ளையர்கள் தப்பி ஓடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி தினந்தோறும் நள்ளிரவில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக திட்டக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மணல் கொள்ளையர்களிடமிருந்து 2 டிப்பர் லாரிகள், பொக்ந்திலைன் எந்தி ரம், 1 டிராக்டர் டிப்பர் மற்றும் இனோவா கார் உட்பட 2 கார்கள் பறிமுதல் செய்து திட்டக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய மணல் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருச்சி சமயபுரத்தில் உள்ள வங்கியின் லாக்கரை உடைத்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். #BankRobbery #LockersBrakes
    திருச்சி:

    திருச்சியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் செல்லும் வழியில் நெம்பர்1 டோல் கேட் பகுதியில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உள்ளது.

    இங்கு திருச்சி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அத்துடன் விவசாயிகளும், பொதுமக்களும் நகைகளை அடகு வைத்துள்ளனர்.

    அத்துடன் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் தங்களது நகைகளை சேப்டி லாக்கர் எனும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளனர். தினந்தோறும் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடைபெறும் இந்த வங்கியில் நேற்று நள்ளிரவில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணி நேரம் முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். சனிக்கிழமை குடியரசு தின விடுமுறை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும். 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வங்கியை திறந்து உள்ளே சென்றனர்.



    அப்போது வங்கியின் பல்வேறு பகுதிகளில் அடையாளங்களை மாற்றும் அளவிற்கு பொருட்கள் சின்னாபின்னமாகி கிடந்தன. அங்கு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை ஊழியர்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது வங்கியின் தனி அறையில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. மேலும் அதன் அருகிலேயே லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய கியாஸ் வெல்டிங் மெஷின், சிலிண்டர், சுத்தியல், கடப்பாரை உள்ளிட்டவை கிடந்தன.

    இதில் வாடிக்கையாளர்களின் லாக்கர்களில் இருந்த ரூ.5 கோடி பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2 நாட்கள் வங்கிக்கு விடுமுறை என்பதால் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    தகவல் அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வங்கி முழுவதும் ஆய்வு செய்தனர்.

    வங்கியின் பிரதான முன் வாசலில் இருந்த பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது தோல்வி அடைந்ததால் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பல நாட்களாக திட்டம் தீட்டிய பின்னரே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    வங்கியில் கணக்கு வைத்துள்ள தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களின் செயல்பாடுகள், அவர்கள் வங்கி லாக்கர்களில் என்னென்ன பொருட்கள் வைத்துள்ளனர் என்பதை அறிந்து வைத்துள்ளனர்.

    அதனால்தான் குறிப்பிட்ட 5 வாடிக்கையாளர்களின் லாக்கர்களை உடைத்துள்ளனர். குறிப்பாக வங்கி லாக்கர்களுக்கான 2 சாவிகளில் ஒன்று வாடிக்கையாளரிடமும், மற்றொன்று வங்கி நிர்வாகத்திடமும் இருக்கும். லாக்கரில் இருக்கும் நகை குறித்த விபரம் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது குறிப்பிட்ட 5 லாக்கர்களை மட்டும் உடைக்க காரணம் என்பது புதிராகவே உள்ளது.

    மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வங்கியில் சுழற்சி முறையில் காவல் பணியிலும் செக்யூரிட்டிகள் பணியில் இருக்கிறார்கள். அதனை முழுமையாக கணித்த கொள்ளையர்கள் அவர்கள் கண்ணில் படாதவாறு உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கொள்ளை நடந்த வங்கிக்கு உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அத்துடன் இன்று காலை முதல் வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கினர். #BankRobbery #LockersBrakes
    சென்னை வண்ணாரப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தது ஏன்? என கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
    பிராட்வே:

    சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ். வீட்டின் அருகே நகை கடை வைத்துள்ளார். சந்தோஷ், தனது வீட்டில் லாக்கரில் இருந்த தங்க நகைகள், வெள்ளி மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டதாக கொருக்குப்பேட்டை போலீசில் 7-ந் தேதி புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். சந்தோஷ் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

    மேலும் சந்தோஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளைபோனதால் அவருடைய வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 26), சந்தோஷிடம் வேலை பார்த்து வந்ததும், டிசம்பர் மாதம் அவரை வேலையில் இருந்து நிறுத்தியதும் தெரியவந்தது.

    அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா பகுதியில் சென்று கொண்டு இருப்பது தெரிந்தது. பின்னர் ஹன்ஸ்ராஜின் புகைப்படத்தை முகநூலில் இருந்து எடுத்த போலீசார், தென்மத்திய ரெயில்வே போலீஸ் கமாண்டர் ஜி.வி.குமாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஆந்திர போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்துக்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு தப்பிச்செல்ல முயன்ற ஹன்ஸ்ராஜ், அவருடைய தம்பி ஹரேந்திரசிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4½ கோடி மதிப்பிலான நகை, வெள்ளி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார், விஜயவாடா சென்று கைதான 2 பேரையும் சென்னை அழைத்து வந்தனர்.

    நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தது ஏன்? என கைதான ஹன்ஸ்ராஜ் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

    நான், 3½ ஆண்டுகளாக சந்தோஷ் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்தேன். அவர் 3 மாதத்துக்கு ஒரு முறை சம்பளத்தை மொத்தமாக கொடுப்பார். நான், மாதந்தோறும் சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதால் என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷிடம் எனது சம்பள பாக்கியை கேட்டேன். அவர் தர மறுத்து விட்டார். இதனால் நான், பெங்களூரு சென்று அங்கிருந்த எனது தம்பி ஹரேந்திரசிங்குடன் சேர்ந்து சந்தோசை பழிவாங்க திட்டம் தீட்டினேன். அதன்படி 6-ந்தேதி எனது தம்பியுடன் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தேன். அன்று இரவு எனது தம்பியுடன் சந்தோஷ் வீட்டுக்கு சென்றேன்.

    ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் என்பதால் சந்தோஷ் வீட்டின் சாவியை வைக்கும் இடத்தில் இருந்து எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றோம். பின்னர் அங்கு இருந்த 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றோம்.

    பின்னர் கோயம்பேட்டில் இருந்து வாடகை காரில் விழுப்புரம் சென்று, அங்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி உத்தரபிரதேசம் தப்பிச் செல்ல முயன்றோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது பற்றி அறிந்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் கைதான கொள்ளையர்கள், மீட்கப்பட்ட தங்க நகை, வெள்ளி மற்றும் பணத்தை பார்வையிட்டனர். கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு, வெகுமதி வழங்கினர். அப்போது துணை கமிஷனர் ரவளிபிரியா கந்தபுனேனி உடன் இருந்தார்.

    அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் கொள்ளையர்களால் கடத்தி துப்பாக்கியால் சுடப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். #SaiKrishna #Telanganaengenieer #Detroitrobbers #SaiKrishnashot
    நியூயார்க்:

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணா என்ற இளைஞர் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் பட்டம்பெற்று அங்குள்ள டெட்ராய்ட் நகரில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த மூன்றாம் தேதி இரவு பணி முடிந்து சாய் கிருஷ்ணா தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். டெட்ராய்ட் புறநகர் பகுதியில் அவரது காரை ஒரு கும்பல் வழிமறித்தது. காருக்குள் ஏறிய சிலர் துப்பாக்கி முனையில் சாய் கிருஷ்ணாவை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு காருடன் கடத்திச் சென்றனர்.

    ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினர். சாய் கிருஷ்ணாவிடம் இருந்த பணம், கைபேசி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் பறித்தனர். துப்பாக்கியால் அவரை சுட்டு வீழ்த்திய பின்னர் காரை கடத்திச் சென்றனர்.

    பின்னர், அவ்வழியாக சென்ற ஒருவர் உறையும் குளிரில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சாய் கிருஷ்ணாவின் நிலையை பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    ஆம்புலன்ஸ் வாகனத்துடன் விரைந்துவந்த போலீசார் அவரை டெட்ராய்ட் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த இரு பகுதிகளில் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகவும், இதற்கு சுமார் இரண்டரை லட்சம் டாலர்கள் வரை செலவாகும் என்றும் அம்மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த செலவுக்காக சாய் கிருஷ்ணாவின் சில நண்பர்கள் ‘கோபன்ட்மி’ என்ற இணையவழி இயக்கத்தின் மூலம் நிதி திரட்டி வருகின்றனர். அவருக்கு உதவி செய்ய சிலர் ஒரு லட்சம் டாலர்கள் வரை உதவி செய்துள்ள நிலையில், சாய் கிருஷ்ணாவின் நிலமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. #SaiKrishna #Telanganaengenieer #Detroitrobbers #SaiKrishnashot
    பெரம்பலூரில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து காருடன் நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறை மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 32), துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கார்த்திகா (25). கர்ப்பிணியான இவர் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

    இந்தநிலையில் இன்று காலை மகேந்திரன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கார்த்திகாவுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.  அப்போது வீட்டின் பீரோ மற்றும் லாக்கரை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. 

    மேலும்  வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய காரும் திருடப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×