search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car smuggling"

    நொய்யல் அருகே வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 26 பவுன் நகை மற்றும் காரை திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). இவர் தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தர். பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது. 

    இந்த சம்பவம் குறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தனார். இன்ஸ் பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும் மாயமான கார் குறித்த தகவல்கள் பிற மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதற்கிடையில் மதுரையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சம்பந்தப்பட்ட காரை போலீசார் மடக்கினர். அந்த காரில் 3 வாலிபர்கள் இருந்னர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆரப்பாளையத்தை சேர்ந்த பட்டறை சுரேஷ் (29) என்பது தெரியவந்தது.

    போலீசர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த வினோத் (29), திருச்சி துவாக்குடியை சேர்ந்த டேவிட் (30) ஆகியோருடன் இணைந்து நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள வீட்டில் 26 பவுன் நகைகள், கார் ஆகியவற்றை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மதுரை நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்து பட்டறை சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார். மேலும் அவரிடம் இருந்த 26 பவுன் தங்க நகை யையும் மீட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், டேவிட் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மேலப்பாளையத்தில் வக்கீல் காரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் தமீம் என்ற சாகுல் அமீது. இவர் தற்போது மதுரையில் தங்கி இருந்து கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்து வருகிறார்.

    இவரை மதுரை பாண்டி கோவில் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்த வக்கீல் புலிகேசி (வயது 55) என்பவர் தொடர்பு கொண்டு ரூ.10 கோடி கடன் கேட்டுள்ளார். அதற்கு தேவையான ஆவணங்களை தருவதாகவும் கூறிஉள்ளார். ஆனால் சாகுல் அமீது தன்னிடம் ரூ.10 கோடி இல்லை.

    மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் அந்த தொகையை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் புலிகேசி, சாகுல் அமீது ஆகிய 2 பேரும் மேலப்பாளையத்துக்கு வந்துள்ளனர். அங்குள்ள நேரு நகரில் ஒரு வீட்டில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.

    அவர்கள், தங்களிடம் சாகுல் அமீது ரூ.17 லட்சத்தை மோசடி செய்து விட்டார் என்று கூறி, அவரை தாக்கி உள்ளனர். பின்னர் அவர் தர வேண்டிய ரூ.17 லட்சத்துக்கு பதிலாக, புலிகேசியின் காரை தருமாறு பறித்துக் கொண்டனர்.

    பின்னர் அந்த காரில் புலிகேசியை அழைத்துச் சென்று நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு காரை திருடிச் சென்று விட்டனர். தங்களுடன் சாகுல் அமீதை அழைத்துச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து புலிகேசி மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தென்காசியை சேர்ந்த சேக்முகமது என்பவரிடம் அந்த கார் இருப்பதை அறிந்தனர். இதையடுத்து தென்காசி போலீசாரின் உதவியுடன் அந்த கார் மீட்கப்பட்டது.

    இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசி ஷேக் முகமதுவை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த முகமது அசன்(28) என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செல்வம், பாண்டி, துரைப்பான்டி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூரில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து காருடன் நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறை மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 32), துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கார்த்திகா (25). கர்ப்பிணியான இவர் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

    இந்தநிலையில் இன்று காலை மகேந்திரன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கார்த்திகாவுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.  அப்போது வீட்டின் பீரோ மற்றும் லாக்கரை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. 

    மேலும்  வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய காரும் திருடப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயபுரம் கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    ராயபுரம் ராமநாராயணன் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து. கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்ணடியை சேர்ந்த சித்திக் என்பவர் காரை வாடகைக்கு எடுத்து சென்று திருப்பி ஒப்படைத்து விட்டார்.

    இந்த நிலையில் அல்லி முத்து வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென மாயமானது. போலீசார் விசாரணையில் சித்திக், கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி திருவனந்தபுரத்தில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து சித்திக், அவரது நண்பர்கள் அனீஸ், பத்மாபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். கார் மீட்கப்பட்டது. #tamilnews
    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    மதுரை பழங்கானத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகளை பார்க்க கணேசன் முடிவு செய்தார். இதற்காக அவர் சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்திருந்தார்.

    இதையொட்டி நேற்று மாலை கணேசன் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை மதுரை பாலரங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் கிறிஸ்டோபர் டேனியல்(40) ஓட்டி சென்றார். இரவு 12 மணியளவில் அவர்கள் சென்னை சென்றடைந்தனர்.

    பின்னர் கணேசனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் டேனியல் மட்டும் காரில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டார்.

    தாம்பரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலிடம் நாங்கள் விழுப்புரம் செல்ல வேண்டும். எங்களை அங்கு இறக்கி விடுங்கள் என்றனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

    பின்பு அந்த 4 வாலிபர்களும் காரில் ஏறினர். அவர்கள் தலா 150 ரூபாய் கிறிஸ்டோபர் டேனியலிடம் கொடுத்தனர். அதன்பிறகு அவர் காரை விழுப்புரம் நோக்கி ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள விராட்டிக்குப்பம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காரில் இருந்த ஒருவர் காரை நிறுத்தம்படி கூறினார்.

    உடனே கிறிஸ்டோபர் டேனியல் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கிறிஸ்டோபர் டேனியல் தலையில் தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்பு அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து காரை கடத்தி சென்று விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் டேனியலுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களிடம் நடந்த விபரங்களை கூறினார். அவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிறிஸ்டோபர் டேனியலை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்டது குறித்து விழுப்புரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    கார் கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தனிப்படை ஒன்று அமைத்தார். தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரை கடத்தி சென்றவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார் கடத்திய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி காரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை உடையார்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் ஐம்பொன் நகைகள் செய்து விற்று வந்தார். இவரது நண்பர்கள் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன்.

    இவர்களில் ரகுராமகிருஷ்ணன் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நம்பிராஜன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே சுரேஷ்குமார் சமீபத்தில் புதிதாக கார் வாங்கினார்.

    கார் வாங்கியதை கொண்டாடுவதற்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக சுரேஷ்குமார் தனது நண்பர்கள் ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோருடன் நெல்லை தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்கு காரில் சென்றார்.

    அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு 3 பேரும் மது அருந்தினர். பின்னர் ஆற்றில் குளித்தனர். இந்த வேளையில் அப்பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரிடம் இங்கு எப்படி காரை நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.

    பின்னர் சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் தடுத்தனர். உடனே ஆத்திரமடைந்த கும்பல் அவர்களையும் தாக்கியது. பின்னர் 3 பேரையும் இழுத்து சுரேஷ்குமாரின் காருக்குள் போட்டனர். பின்னர் சுரேஷ்குமாரிடம் இருந்த கார் சாவியை பறித்து 3 பேரையும் காருடன் கடத்தி சென்றனர். காரை ஒருவர் ஓட்ட, மற்ற 2 பேர் காரில் இருந்தனர். 3 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் சுரேஷ்குமாரும், ரகுராமகிருஷ்ணனும் காரில் இருந்து குதித்து தப்பினர். நம்பிராஜனால் காரில் இருந்து குதிக்க முடியவில்லை. டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது நம்பிராஜனை காரில் இருந்து கீழே தள்ளிய கும்பல் காருடன் தப்பி சென்றது. கடத்தப்பட்ட காரில் சுரேஷ்குமாருக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்தன. அவற்றுடன் கும்பல் தப்பிவிட்டது.

    இதனிடையே கும்பல் தாக்கியதில் காயமடைந்த சுரேஷ்குமார், ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்குபதிவு செய்து காரை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டிரைவரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை கடத்தி சென்ற வழக்கில் வாலிபர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பல்லடம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    பல்லடம்:

    கோவை விரும்மாண்டம்பாளையம் நஞ்சேகவுண்டன்புதூர் விவேகானந்தா வீதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 22). இவர் கோவையில் உள்ள ஏ.கே.டிராவல்ஸ் உரிமையாளர் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வந் தார். இந்த நிலையில் கடந்த 8.3.2013 அன்று இரவு ஆனந்தகுமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசியவர் பழனிவரை செல்வதற்கு வாடகைக்கு கார் ஒன்று வேண்டும் என்றும், அந்த காரை கோவை புண்ணியகோடி தெருவில் உள்ள சரவணா வணிக வளாகத்திற்கு எடுத்து வருமாறும் கூறினார். இதையடுத்து ஆனந்தகுமார், டிரைவர் அருள்பிரகாசுக்கு மேற்கண்ட முகவரிக்கு செல்லுமாறு குறுந்தகவல் அனுப்பினார்.

    இதையடுத்து அருள்பிரகாஷ், புண்ணியகோடி தெருவில் உள்ள சரவணா வணிக வளாகத்திற்கு காரை ஓட்டிச்சென்றார். அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். பின்னர் கார் அங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்றது. அப்போது அங்கு மேலும் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களும் காரில் ஏறிக்கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து கார் கோவை புறப்பட்டது. காரை அருள்பிரகாஷ் ஓட்டினார். காரின் டிரைவர் இருக்கை அருகே ஒருவரும், பின் இருக்கையில் 3 பேரும் அமர்ந்து இருந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் புள்ளியப்பம்பாளையம் பிரிவு அருகே 9.3.2013 அன்று காலை 5 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று காரில் இருந்த 4 பேரும் கத்தியால், டிரைவர் அருள்பிரகாசை குத்தி, அவரை கீழே தள்ளி விட்டு காரை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து அருள்பிரகாஷ், பல்லடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற 4 பேரையும் வலை வீசி தேடி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அருள்பிரகாசை கத்தியால் குத்தி விட்டு, காரை கடத்தி சென்று இருப்பது தர்மபுரி மாவட்டம் திண்டலனூரை சேர்ந்த சந்திரசேகரன் என்ற வாசுதேவன் (22), கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் நியூ காலனி வீதியை சேர்ந்த தாமஸ் அருண்பிரசாத் (22), சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூரை சேர்ந்த பிரபு(30 ) மற்றும் அவரது தம்பி அருண்(28 )ஆகியோர் என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வழக்கில் சந்திரசேகரன், தாமஸ் அருண்பிரசாத், பிரபு மற்றும் அருண் ஆகிய 4 பேரையும் பல்லடம் போலீசார் கைது செய்து திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பல்லடத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் சார்புநீதிமன்ற நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் சந்திரசேகரன் என்ற வாசுதேவனுக்கும், தாமஸ் அருண்பிரசாத் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், பிரபு, அருண் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எம்.பொன்னுசாமி ஆஜராகி வாதாடினார். 
    குமரியில் தொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு காரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி லீபுரம் கல்லுவிளை ஆஞ்சநேயர் நகரில் வசிப்பவர் ரவீந்திரன் நாயர் (வயது 78). கேரளாவைச் சேர்ந்த இவர் அங்கு கல்வி அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வுக்கு பின் மன அமைதிக்காக கன்னியாகுமரியில் வீடு கட்டி தங்கியிருந்தார். இவர் கேரளாவில் விடுதியும் நடத்தி வருகிறார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி மாலை 3 மணிக்கு ரவீந்திரன் ஆஞ்சநேயர் நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒரு காரில் வந்து இறங்கினர். அவர்கள் ரவீந்திரன் நாயரிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.

    அந்த கும்பல் ரவீந்திரன் நாயரை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க தேடினர். ஆனால் அவர்களிடம் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரவீந்திரன் நாயர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் மட்டுமே சிக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ரவீந்திரன் நாயரை கத்தியால் குத்திவிட்டு 4 வெற்று காசோலைகளில் அவரிடம் கையெழுத்து வாங்கினர். பின்னர் அவரை கயிற்றால் கட்டி போட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த ரவீந்திரன் நாயரின் சொகுசு காரை கடத்திச் சென்றனர்.

    அக்கம்பக்கத்தினர் ரவீந்திரன் நாயரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த துணிகர கொள்ளை தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் தலைமையிலான போலீசார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தோவாளை தெற்கு தெருவைச் சேர்ந்த மனோஜ் (25), நாசரேத் கோவில் தெருவைச் சேர்ந்த பீம்சிங் (29), திருச்செந்தூர் அருகே உள்ள ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த செல்வபெருமாள் (28), சிதம்பரபுரம் தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 4 பேரும் ரவீந்திரன் நாயரை தாக்கி காரை கடத்திச் சென்றவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் பீம்சிங் கல்லூரி மாணவர் ஆவார். செல்வபெருமாள் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். மனோஜ் மருந்து விற்பனையாளராக பணிபுரிகிறார்.

    ரவீந்திரன் நாயர் வீட்டில் நடந்த கொள்ளைக்கு மனோஜ் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் ரவீந்திரன் நாயரை, மனோஜ் சந்தித்துள்ளார். அப்போது தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதை தெரிவித்து ரவீந்திரன் நாயர் மனோஜிடம் மருந்து கேட்டுள்ளார். இதையடுத்து மனோஜ், ரவீந்திரன் நாயர் வீட்டுக்கு அடிக்கடி சென்று மருந்துகள் வழங்கினார்.

    அப்போது ரவீந்திரன் நாயர் செல்வ செழிப்புடன் இருப்பதையும், தனியாக வசிப்பதையும் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது திட்டப்படி தான் 7 பேர் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த தகவல்களை மனோஜ் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார்.

    கடத்தப்பட்ட ரவீந்திரன் நாயரின் காரை அந்த கும்பல் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்று அந்த பணத்தை பங்கு வைத்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மார்த்தாண்டம் சென்று அந்த காரை மீட்டனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

    மாங்காடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் சிறப்பாக பணியாற்றி 3 மணி நேரத்தில் காரை மீட்டனர்.
    பூந்தமல்லி:

    மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூரில் சவாரி ஏற்ற வருமாறு இன்று காலை 6 மணி அளவில் தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு அழைப்பு வந்தது.

    இதையடுத்து டிரைவர் செல்வம் காருடன் அந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரை பயணிகள் யாரும் வரவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர் கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து அவர் சவாரியை ரத்து செய்து விட்டு காரை ஓட்ட முயன்றார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் திடீரென செல்வத்தை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் காரை ஓட்டி கடத்தி சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த செல்வம் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கால் டாக்சியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கார் செல்லும் இடத்தை கண்காணித்து விரட்டிச் சென்றனர்.

    காலை 9 மணி அளவில் ஊரப்பாக்கம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கினர். உடனே அதில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காரை மீட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கார் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews
    ×