search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் அருகே 26 பவுன் நகை - கார் திருட்டு: 2 பேருக்கு வலைவீச்சு
    X

    நொய்யல் அருகே 26 பவுன் நகை - கார் திருட்டு: 2 பேருக்கு வலைவீச்சு

    நொய்யல் அருகே வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 26 பவுன் நகை மற்றும் காரை திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). இவர் தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தர். பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது. 

    இந்த சம்பவம் குறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தனார். இன்ஸ் பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும் மாயமான கார் குறித்த தகவல்கள் பிற மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதற்கிடையில் மதுரையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சம்பந்தப்பட்ட காரை போலீசார் மடக்கினர். அந்த காரில் 3 வாலிபர்கள் இருந்னர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆரப்பாளையத்தை சேர்ந்த பட்டறை சுரேஷ் (29) என்பது தெரியவந்தது.

    போலீசர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த வினோத் (29), திருச்சி துவாக்குடியை சேர்ந்த டேவிட் (30) ஆகியோருடன் இணைந்து நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள வீட்டில் 26 பவுன் நகைகள், கார் ஆகியவற்றை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மதுரை நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்து பட்டறை சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார். மேலும் அவரிடம் இருந்த 26 பவுன் தங்க நகை யையும் மீட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், டேவிட் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×