search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் வீடு புகுந்து காருடன் நகைகளை திருடி சென்ற கொள்ளையர்கள்
    X

    பெரம்பலூரில் வீடு புகுந்து காருடன் நகைகளை திருடி சென்ற கொள்ளையர்கள்

    பெரம்பலூரில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து காருடன் நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறை மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 32), துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கார்த்திகா (25). கர்ப்பிணியான இவர் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

    இந்தநிலையில் இன்று காலை மகேந்திரன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கார்த்திகாவுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.  அப்போது வீட்டின் பீரோ மற்றும் லாக்கரை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. 

    மேலும்  வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய காரும் திருடப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×