search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thugs law"

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் சமீபத்தில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    அதனடிப்படையில் கீழ்வேளூர் அருகே கூட்டுக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த தமிழ்மாறன், தனராஜ், ஹரிஹரன், குருபாலன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தொடர் கொள்ளை மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    புதுவையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கடை வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் ரவுடிகளால் மாமூல் வசூலிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தற்போது மாமூல் வேட்டைகளுக்கு சென்று ரவுடிகள் மாமூல் வசூலிப்பதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதோடு, புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தடைபட்டு வருகிறது.

    ரவுடிகளின் ராஜ்ஜியமாக புதுவை மாறி வருவதை வில்லியனூர் சம்பவம் உறுதி செய்கிறது.

    இச்சம்பவத்தில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டு உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்கள் மீது 144 சட்டத்தை போட்டு அவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.

    வணிகர்களிடமும், சிறு, சிறு தொழில் செய்வோரிடமும் மாமூல் வசூல் செய்யும் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் தற்போது தொழில்கள் நலிவடைந்த நிலையில் வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார வரி, தொழில் வரி, குப்பை வரி என அனைத்துக்கும் அதிக அளவில் வரிவசூல் செய்வதோடு புதிதாக மாமூல் வசூல் என்ற வரியையும் வணிகர்களிடம் வசூலிப்பது நியாயமா? இந்த நிலை நீடித்தால் புதுவை மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

    தற்போது காவல்துறையில் குறுக்கிடும் எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட விரோதமான 3 நம்பர் ஆன்-லைன் லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவற்றை எல்லாம் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ரோந்து பணியை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    ×