search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு சம்பவம்"

    • அன்னமாா் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது.
    • கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலா் அருள்குமாா் பலத்த காயமடைந்தாா்.

    அவிநாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி முத்துசெட்டிபாளையம் பகுதியில் உள்ள அன்னமாா் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் அவிநாசி போலீஸ் நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றும் திருப்பூா் ஆயுதப் படை 2ம் நிலை காவலரான அருள்குமாா் (27) என்பவா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவிநாசி முத்துசெட்டிபாளையம் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும்படியாக அதிவேகமாக சென்ற 3 நபா்களை பிடிக்கச் சென்றபோது, அவா்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலா் அருள்குமாா் பலத்த காயமடைந்தாா்.

    உடனிருந்தவா்கள் பிடிக்க முயன்றும் 3 நபா்களும் தப்பிச்சென்றனா். இதையடுத்து அருள்குமாா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தில் உள்ள அன்னமாா் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்கள், ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×