search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே - டாஸ்மாக் கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள்
    X

    சிதம்பரம் அருகே - டாஸ்மாக் கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள்

    • சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையர்கள் புகுந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம்அருகே ெஜயம்கொண்டம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக கலைச்செல்வன், விற்பனையாளராக மூர்த்தி, தண்டபாணி ஆகியோர் உள்ளனர்.

    கடை உடைப்புநேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கடையை பூட்டை உடைத்தனர். பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்தனர்.அப்போது கடையில் கண்காணிப்பு காமிரா இருந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இன்று காலை டாஸ்மாக் கடை திறந்து கிடப்பது கண்டு அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து சூப்பர்வைசர் கலைச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்தார். அங்கு மதுப்பாட்டில்கள் அப்படியே இருந்தது. எதுவும் கொள்ளைபோகவில்லை.

    இதுகுறித்து மருதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×