search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rise"

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 6-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் மேலான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி பல்லடத்தில் இன்று நடந்த கூட்டத்தில் கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.103 ஆக இருந்த ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக உள்ளது.

    • அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை‌ கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:பரமத்தி வேலூரில்

    வெள்ளக்கொடி வெற்றிலை விலை உயர்வு

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்த னூர்,பரமத்தி வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    வெற்றிலை விவசாயம்

    வெற்றிலைகள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து நூறு வெற்றிலை கொண்ட ஒரு கவுலியாகவும் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர்-கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கி செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்கின்றனர். வாங்கிய வெற்றிலை சுமைகளை கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    விலை உயர்வு

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்ப யிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ1,700-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.5ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,50 0-க்கும் ஏலம் போனது. வெள்ளைக் கொடி இளம்

    பயிர் வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது.
    • நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்ைட, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு சென்று தான் பூக்கள் வாங்கி வருகின்றனர்.

    விஷேச நாட்களில் இங்கு பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது. நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ரூ.200 உயர்ந்து கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை பூ மார்க்கெ ட்டிற்ககு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சத்தியமங்கலம், காரமடையில் இருந்து முல்லைப் பூவும், ஓசூரில் இருந்து ரோஜா பூவும் விற்பனைக்கு வருகிறது. நேற்று 2 டன் அளவுக்கு பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    நாளை ஆடிப்பெருக்கு விழா என்பதால் இன்று மேலும் பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்,

    பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-மல்லிகை - ரூ.800, முல்லை ரூ.480, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ. 320, ரோஜா 240, கோழி கொண்டை ரூ. 140, அரளி ரூ. 240, தாமரை ரூ.10 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.
    • தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    கோவை,

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தற்போது தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால், விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபடவில்லை. இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

    ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அங்கும் விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தற்போது தென் மாநிலங்களில் அதிகமாக தக்காளி பழங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். எனவே ஆந்திரா, கர்நாடகாவில் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கோவை காந்திபுரம் தியாகி குமரன் மார்க்கெ ட்டில் இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.130க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.140 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட் சில்லரை விலை கடைகளில் நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கிலோ கணக்கில் தக்காளி வாங்கியவர்கள் தற்போது, 100, 200 கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்வதை காண முடிகிறது.

    இதுகுறித்து தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்கு சரக்கு லாரிகள் மூலம் தக்காளி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

    ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில் தக்காளி பழங்களை கொள் முதல் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்ததுடன், விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்னும் ஒரு சில வாரங்களில் தக்காளி அறுவடை தொடங்க உள்ளது. எனவே கோவை சந்தைக்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளியின் விலை குறையும் என்றனர்.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட் சந்தையில் காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ): கத்தரிக்காய்-60, வெண்டைக்காய்-60, உருளை க்கிழங்கு-30, பீட்ரூட்-30, புடலங்காய்-40, சுரைக்காய்-40, பீர்க்கங்காய்-40, மிளகாய்-80, வாழைக்காய்-40, பூசணிக்காய்-30, எலுமிச்சை-60, முருங்கை-50, கேரட்-50, பீன்ஸ்-100, முட்டைக்கோஸ்-25.

    • தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
    • இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த

    சில நாட்களாக தக்காளி

    விலை மேலும் அதிகரித்த தால் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விநியோ கிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதேபோல் சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள கூட்டுறவு பண்டக சாலையிலும் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு தக்காளி வாங்க வந்தனர். ஆனால் அங்கு கடந்த 2 நாட்களாக விற்பனைக்கு தக்காளி வரவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் கூட்டுறவு பண்டக சாலையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அங்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் விரைவில் தக்காளி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

    • சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
    • சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அசைவ பிரியர்கள் உள்ளதால் ஆடு, கோழி, காடை, வாத்து இறைச்சி விற்பனை ஜோராக நடக்கிறது.

    பருவநிலை மாற்றத்தால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமலால் அவதிப்படுகின்றனர். சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

    சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    இது குறித்து வாத்து முட்டை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் கூறியதாவது, தேவை அதிகரித்ததால், வாத்து முட்டை கடும்தட்டு பாடு ஏற்பட்டதால் வாத்து முட்டை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி முட்டையை விட வாத்து முட்டைகள் அதிக சத்துக்கள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகள் மூலம் முட்டை கொள்முதல் செய்து பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்கிறோம். வாத்து முட்டை 12 ரூபாய்க்கும், வேக வைத்த வாத்து முட்டை 15 ரூபாயும், வாத்து முட்டை ஆம்லெட் ரூ.30 ஆகும் விலை உயர்ந்துள்ளது என கூறினார்.

    • 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.
    • முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 93 ரூபாயாக நீடிக்கும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோல முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    • தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் உழவர் சந்தைகளுக்கும் தக்காளி வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:

    உருளைக் கிழங்கு - ரூ.30-60, சின்ன வெங்காயம் - ரூ.75-80, பெரிய வெங்காயம் - ரூ.25-28, பச்சை மிளகாய்- ரூ.80-85, கத்தரி -ரூ.40-44, வெண்டைக்காய்-ரூ.28-30, முருங்கைகாய்-ரூ.30-50, பீர்க்கங்காய் -ரூ.40,

    சுரைக்காய்- ரூ.20-24, புடலங்காய்-ரூ.24-25, பாகற்காய்-ரூ.50-55, தேங்காய் - ரூ.20-25, முள்ளங்கி -ரூ.20-24, பீன்ஸ் - ரூ.98-105, அவரை- ரூ.70-75, கேரட் - ரூ.60- 74, மாங்காய்- ரூ.25-30, வாழைப்பழம்-ரூ.35-45-55,

    கீரைகள் - ரூ.20-24, பப்பாளி - ரூ.20-24, கொய்யா-ரூ.40, சப்போட்டா - ரூ.35-40, ஆப்பிள் - ரூ.180-200, சாத்துக்குடி - ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மார்க்கெட்களில் ஒரு கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.
    • அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது.

    சேலம்:

    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.

    குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.

    அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது. இதனால் மாவட்டத்திற்கு தக்காளி வரத்து பாதியாக சரிந்துள்ளது. இதனால் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சேலம் உழவர் சந்தைகளில் 50 முதல் 55 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் நாட்டு தக்காளி முதல் ரகம் 60 ரூபாய்க்கு விற்றது. தற்போது ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    55 ரூபாய்க்கு விற்ற 2-ம் ரகம், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 700 ரூபாய் வரை அதிகரித்து, 2,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோவிற்க்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் தக்காளியின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    சேலம் உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

    உருளைக்கிழங்கு முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.30, சின்னவெங்காயம் முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.55, பெரியவெங்காயம் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, பச்சை மிளகாய் முதல் தரம் ரூ.78, 2-ம் தரம் ரூ.76, கத்தரிக்காய் முதல் தரம் ரூ.44, 2-ம் தரம் ரூ.40, வெண்டைக்காய் முதல் தரம் ரூ.36, 2-ம் தரம் ரூ.34, முருங்கைக்காய் முதல் தரம் ரூ.40, 2-ம் தரம் ரூ.20, பீர்க்கங்காய் முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.46, சுரைக்காய் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, முள்ளங்கி முதல் தரம் ரூ.35, 2-ம் தரம் ரூ.32, சேனை கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.30, கருணைக்கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.45.

    • வெற்றிலை வரத்து குறைந்த தும், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருமண முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை‌ விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும்,

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளை யம், ஓலப்பாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங் களை பயிர் செய்துள்ள னர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது, கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளி கொண்ட ஒரு சுமை யாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிக ளுக்கு வரும் வியாபாரிக ளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவே லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் - கரூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்ப யிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்துக் கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயி ரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.1500-க்கும் விலை போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்ப யிர் சுமை ஒன்று ரூ.4ஆயி ரத்து 500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.

    வெற்றிலை வரத்து குறைந்த தும், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருமண முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    நெல்லையில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ.50-ஐ நெருங்கி உள்ளது. ஒரு வாரத்தில் ரூ.20 அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை டவுன் நயினார்குளத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு நெல்லை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் வரும்.
     
    இந்த 2 மாவட்டங்களை தவிர ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி, கத்தரிக்காய், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் வரும்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரங்களில் ரூ.100-ஐ தாண்டிய தக்காளி விலை தற்போது சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதன் விலை உயர தொடங்கியது. இன்று உழவர் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காயின் விலை ரூ.48-க்கு விற்பனையாகிறது.

    மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்யும் போது ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் கத்தரிக்காய் விலை ரூ.20-ஐ தாண்டி உயர்ந்துள்ளது.

    இதனால் பெண்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். வெள்ளை கத்தரிக்காய் விலை அதிகரித்து வருவதால் பச்சை, ஊதா நிற கத்தரிக்காய்களுக்கு மவுசு அதிரித்துள்ளது.

    இன்று உழவர் சந்தைகளில் பச்சை நிறத்திலான கீரி கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.30-க்கும், ஊதா நிறத்திலான கீரி கத்தரிக்காய் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வெண்டை-36, புடலை-22, அவரைக்காய்-80, பச்சை மிளகாய்-36, முருங்கைக்காய்-60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. 
    பரமத்தி வேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில்,  தி. கவுண்டம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, குறும்பலமகாதேவி, வடகரையாத்தூர், ஆனங்கூர், கண்டிப்பாளையம், கு. அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், நன்செய் இடையார், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பூவன் வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். 

    வாழைத்தார் விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

    வாழைத்தார்களை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு  வந்து  தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

    கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ 400-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 300-க்கும் ,ரஸ்தாலி வாழைத்தார்ரூ 300-க்கும் ,பச்சநாடன் வாழைத்தார் ரூ 250-க்கும், மொந்தன் வாழைத்தார் 300-க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ 500 க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ 350 க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ 350 க்கும், பச்சநாடன் வாழைத்தார் 
    ரூ 300க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ400 க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். 

    வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
    ×