search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg prices"

    • நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன.
    • முட்டை கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த 1970-ம் ஆண்டில் நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன. பல நேரங்களில் முட்டை விலை உயர்வும், சரிவும் தொடர்ந்து வந்தன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 24-ந் தேதி கோழிப்பண்ணை வரலாற்றில் முதன் முறையாக ஓர் முட்டை விலை ரூ.5.75 ஆனது.

    நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், ரூ. 5.75 ஆக இருந்த முட்டை விலை, மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்கு அதிக அளவில் முட்டை தேவை ஏற்பட்டுள்ளதாலும், தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதாலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாக முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இதனால் முட்டை கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 580 காசுகளாக இருந்தாலும் சேலத்தில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் 50 ரூபாயை கொடுத்து 10 முட்டை வாங்கியவர்கள் 7 முட்டைகளை மட்டுமே வாங்கி செல்கிறார்கள். மேலும் முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள உணவு பொருட்களில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது. முட்டை விலை தற்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் ஆம்லெட் முட்டை தோசை, முட்டை புரோட்டா, முட்டை பிரியாணி உள்பட பல உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆம்லெட் 15 ருபாய்க்கு விற்று வந்த நிலையில் சில கடைகளில் ஆம்லெட் விலை தற்போது 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல முட்டையால் தயாரிக்கப்படும் மற்ற உணவு பொருட்களின் விலையும் உயரும் நிலை உள்ளதால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) சென்னை 640, பர்வாலா 609, பெங்களூர் 620, டெல்லி 652, ஐதராபாத் 599, மும்பை 659, மைசூர் 625, விஜயவாடா 610, ஹொஸ்பேட் 590, கொல்கத்தா 675.

    இதற்கிடையே பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது . இதில் கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது . அதன்படி 98 ரூபாயாக இருந்த கறிக்கோழி 101 ஆக உயர்ந்தது. நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி பண்ணயைாளர்கள் கூட்டத்தில் முட்டை கோழி விலையை கிலோவுக் கு 8 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 88 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 80 ரூபாயாக குறைந்தது.

    • 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.
    • முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 440 காசுகளாக இருந்த முட்டை விலை, 445 காசுகளாக உயர்ந்தது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 93 ரூபாயாக நீடிக்கும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோல முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 78 ரூபாயாக நீடிக்கிறது.

    • கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படு கின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து படிப்படியாக சரிவடைந்து கடந்த 8-ம் தேதி ரூ. 4.70 ஆக இருந்த முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா குறைக் கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் முட்டை விலை 120 காசுகள் குறைந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள மற்ற மண்டங்களில் முட்டை விலை சரிவடைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.20 விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-

    சென்னை-500, பர்வாலா-392, பெங்களூர்-460, டெல்லி-410, ஹைதராபாத்-425, மும்பை-530, மைசூர்-480, விஜயவாடா-425, ஹொஸ்பேட்-420, கொல்கத்தா-490.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 82 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    முட்டைவிலை சரிவு குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:-

    நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி சிறப்பாக கேரளாவில் பொழிந்து கொண்டிருப்பதால் கேரளா விற்பனை நன்றாக உள்ளது. ஏற்றுமதிக்கான முட்டைகளும் தொடர்ந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    வயது முதிர்ந்த கோழிகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும் கடந்த காலங்களில் பண்ணைகளில் சராசரி அளவை விட குறைந்த கோழிக்குஞ்சு விடப்பட்டதாலும் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் முட்டை பற்றாக்குறை தொடர்வதால், வரும் நாட்களில் முட்டை விலை மேலும் ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, என்றனர்.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப் படு கின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்று மதிக்கும் போக மீதமுள்ள முட்டை கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்

    படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரி களுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையா ளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    மீன்பிடி தடை காலம் முடிந்து மீன் வரத்து அதி கரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை -610, பர்வாலா -473, பெங்களூர் -600, டெல்லி -490, ஹைதராபாத் -540, மும்பை -605, மைசூர் -603, விஜய வாடா -535, ஹொஸ்பேட் -560, கொல்கத்தா -570.

    ×