என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தக்காளி விற்பனை இல்லாததால் கூட்டுறவு பண்டக சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
- இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சேலம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த
சில நாட்களாக தக்காளி
விலை மேலும் அதிகரித்த தால் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விநியோ கிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல் சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள கூட்டுறவு பண்டக சாலையிலும் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு தக்காளி வாங்க வந்தனர். ஆனால் அங்கு கடந்த 2 நாட்களாக விற்பனைக்கு தக்காளி வரவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் கூட்டுறவு பண்டக சாலையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே அங்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் விரைவில் தக்காளி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்