search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
    X

    கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

    • நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது.
    • நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்ைட, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு சென்று தான் பூக்கள் வாங்கி வருகின்றனர்.

    விஷேச நாட்களில் இங்கு பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது. நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ரூ.200 உயர்ந்து கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை பூ மார்க்கெ ட்டிற்ககு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சத்தியமங்கலம், காரமடையில் இருந்து முல்லைப் பூவும், ஓசூரில் இருந்து ரோஜா பூவும் விற்பனைக்கு வருகிறது. நேற்று 2 டன் அளவுக்கு பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    நாளை ஆடிப்பெருக்கு விழா என்பதால் இன்று மேலும் பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்,

    பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-மல்லிகை - ரூ.800, முல்லை ரூ.480, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ. 320, ரோஜா 240, கோழி கொண்டை ரூ. 140, அரளி ரூ. 240, தாமரை ரூ.10 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×