search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை உயர்வு
    X

    பரமத்திவேலூர் தினசரி ஏல மார்க்கெட்டில் வெற்றிலை சுமைகள் வைக்கப்பட்டுள்ள காட்சி. 

    பரமத்திவேலூர் பகுதியில் வெற்றிலை விலை உயர்வு

    • வெற்றிலை வரத்து குறைந்த தும், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருமண முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை‌ விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும்,

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளை யம், ஓலப்பாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங் களை பயிர் செய்துள்ள னர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது, கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளி கொண்ட ஒரு சுமை யாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிக ளுக்கு வரும் வியாபாரிக ளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவே லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் - கரூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்ப யிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்துக் கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயி ரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.1500-க்கும் விலை போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்ப யிர் சுமை ஒன்று ரூ.4ஆயி ரத்து 500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.

    வெற்றிலை வரத்து குறைந்த தும், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருமண முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×