search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RIP Karunanidhi"

    அற்பமான காரணங்களைக் கூறி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க அரசு மறுப்பதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே செய்ய நிலம் ஒதுக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இரவோடு இரவாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர், வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

    மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 



    இதற்கிடையே, கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் இருந்த சட்ட சிக்கல்களை போக்கும் வகையில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்ட 5 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  அத்துடன் திமுக மனு மீதான விசாரணையை தொடங்கினர். அப்போது இந்த வழக்கில் இன்றை தீர்ப்பு வழங்கப்போகிறீர்களா? என நீதிபதிகளிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கேட்டார். நேற்றைய மனு விவரங்கள் மற்றும் அரசு பதில் மனு விவரங்களை பதிவு செய்த பிறகு விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று நீதிபதிகள் கேட்க, எந்த அவசரமும் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

    இதையடுத்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். அப்போது தலைமை செயலாளரின் முடிவை பத்திரிகை செய்தியா, உத்தரவா? என்று பார்க்க வேண்டியதில்லை என்று கூறினார். ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் என்பது வேறு திராவிட சித்தாந்தம் என்பது வேறு எனவும் அவர் கூறினார். 

    ‘எனது வாழ்வும் ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். 1988ம் ஆண்டே இடக்கம் செய்வதற்காக பகுதியாக அண்ணா சமாதி பகுதி அறிவிக்கப்பட்டது. நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டதால் சட்ட சிக்கல்கள் இல்லை. அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அது பாரபட்சம் காட்டுவதாகும். மக்கள் மனம் புண்படும்.’ என்றும் திமுக வாதிட்டது.

    மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ராஜாஜி அரங்கத்தில் திரண்டுள்ள தொண்டர்களும், கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். #Karunanidhi #DMK #RajajiHall #RIPKarunanidhi #MarinaMemorial #Marina4Karunanidhi

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய சிவகார்த்திகேயன் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துவதே சரி என்று கூறினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா, தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா, ஏன் உலக அரசியலில் ஒப்பற்ற தலைவர். அவருக்கு இந்த நேரத்தில் புகழஞ்சலி செலுத்துவது தான் சரியானது. அவருடைய சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை, இனியும் யாரும் செய்யப் போவதில்லை. தமிழ், கலை, இலக்கியம், அரசியல் இவையெல்லாம் இருக்கும் வரை ஐயாவுடைய பெயரும், புகழும் எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டே தான் இருக்கும். 95 ஆண்டுகளாக ஓயாமல் உழைத்த சூரியன், இன்று ஓய்வெடுக்கச் சென்றுள்ளது. அவரது உடல் மட்டுமே ஓய்வெடுக்கிறது. அவரது கதிர்வீச்சுகள் இனிவரும் அரசியலும், தமிழும் நிறையவே பேசும் என நினைக்கிறேன். ஐயாவுக்கு எனது புகழஞ்சலி. என்று குறிப்பிட்டார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Sivakarthikeyan

    சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ:

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து அவரது குடும்பத்துடன்நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vairamuthu
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கிமற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar  #Vairamuthu

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu

    சென்னை மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க இடம் வழங்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #RIPKarunanidhi
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், பரபரப்பான சூழல் உருவானது.

    இதற்கிடையே, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெவித்துள்ளனர். அண்ணா சமாதி உள்ள பகுதி கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குள் வரவில்லை என ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த துரைசாமி கூறினார்.

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக முறையிட்டது. இரவு 10.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.

    தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அரசுத் தரப்பில் ஆஜராகினர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆஜராகினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தங்களது பதிலை காலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.



    அதன்படி இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

    மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது #Karunanidhi #DMK #RajajiHall #RIPKarunanidhi
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித், நடிகை ஷாலினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Suriya #Sivakumar

    திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி செலுத்தி, மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். #கலைஞர் #DMK #RIPKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலில் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 7.45 மணியளவில் ராஜாஜி அரங்கத்திற்கு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கனிமொழி உடனிருந்தார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருப்பு சால்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். #RIPKalaignar #கலைஞர் #DMK #RIPKarunanidhi
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கருணாநிதியின் உடல்  ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கருணாநிதி உடலுக்கு கருப்பு சால்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோரும் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    தங்கள் பாசமிகு தலைவனை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ராஜாஜி அரங்கத்திற்கு திமுக தொண்டர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம் என்று நடிகர் தனுஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #DMK #Dhanush
    திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

    இந்நிலையில், நடிகர் தனுஷ் ‘வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து, எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்’ என்று கூறியிருக்கிறார்.


    திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, நாளை சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

    கருணாநிதியின் மறைவையொட்டி, நாளை படப்பிடிப்புகள், சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் நாளை அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் இரங்கல் தெரிவித்துள்ளது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

    இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில்,

    ஐந்து முறை முதல்வராக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். தமிழில் பெயர் தாங்கி வந்த படங்களுக்கு முழு வரி விலக்கு வழங்கியவர் கலைஞர். தமிழக அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த மிக குறைந்த கட்டணம் நிர்ணயித்தவர் கலைஞர். தமிழ் திரையுலகினருக்கு மகாபலிபுரம் அருகே பையனூரில் வீடு கட்டிக் கொள்ள இடம் கொடுத்தவர் கலைஞர்.

    சின்னத்திரை கலைஞர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்கப்படுத்தியவர் கலைஞர். நேரு முதல் மோடி வரை பதினைந்து பிரதமர்களையும், ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை பதினாலு குடியரசுத்தலைவர்களையும் கண்டவர் கலைஞர். பல துறைகளிலும் சாதனைகள் படைத்த கலைஞரின் மறைவு தமிழ்மக்களுக்கு, குறிப்பாக திரையுலகினருக்கு பேரிழப்பு. தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ×