என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RIP Karunanidhi"
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த வண்ணம் இருந்தனர். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு மக்கள் அதிக அளவில் குவிய தொடங்கினார். அதேவேளையில் போலீசாரால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையே பொதுமக்கள் கருணாநிதி உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் ராஜாஜி ஹாலில் மக்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை சரிபடுத்தினார்கள்.
4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.
மக்கள் வருகை அதிகரித்ததால் இந்த 3 சாலைகளிலும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் புளிசாதம், இட்லி, தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. பொது மக்கள் அவற்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கேயே சுற்றியப்படி காணப்பட்டனர்.
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டதும் அண்ணாசாலை, வாலாஜா சாலை, சிவானந்த சாலை ஆகியவற்றில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.
ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதனால் மதியம் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது.
எம்.ஜி.ஆர். 3634 நாட்களும், காமராஜர் 3432 நாட்களும் முதல்வராக இருந்துள்ளனர். காமராஜரும், எம்.ஜி.ஆரும் முதல்வர் பொறுப்பில் இருந்ததை விட கூடுதலாக ஒரு மடங்கு அதிகமான நாளில் கருணாநிதி முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் கருணாநிதி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் ஆலமரம் போல் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தவர் டாக்டர் கலைஞர். அவருடைய மறைவு என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பற்றத் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு இந்திய அரசியலில் மிகப்பெரிய கிங் மேக்கராக திகழ்ந்தவர் என்பதோடு மட்டுல்ல மூன்று பிரதமர் வருவதற்கும் காரணமாக இருந்தவர். அவர் யாரை எதிர்த்தாலும் வெளிப்படையாக எதிர்க்கக் கூடியவர். அதேபோல் ஆதரித்தாலும் முழுமனதோடு ஆதரிப்பவர்.
அவருடைய இழப்பு இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதோடு மட்டுமல்ல அவருடைய மறைவால் தமிழ கத்திற்கு இந்திய அரசியலில் ஒரு முக்கியத்துவம் இனி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி சென்னையில் நேற்று மாலை முதல் போக்குவரத்து படிப்படியாக குறைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ, கார், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து அரசு வெளியூர் பஸ்களும் நிறுத்தப்பட்டன. ஆம்னி பஸ்களும் இயக்கப்படவில்லை.
இன்று நகரம் முழுவதும் பஸ், ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடின. ஆனால் மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு சென்றன.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மின்சார ரெயில், சேவை இன்றுகளை இழந்தது. மின்சார ரெயில் சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் கூட்டம் இல்லாததால் காலியாக ஓடின.
மின்சார ரெயில் நிலையங்கள் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு ஆலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விப்பட்டதால் மக்கள் கூட்டம் இல்லை.
ஒவ்வொரு மின்சார ரெயிலிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வழக்கமாக பயணித்த நிலையில் இன்று 50 சதவீதத்திற்கு குறைவாகத்தான் பயணம் செய்துள்ளனர்.
கடற்கரை- தாம்பரம், கடற்கரை- வேளச்சேரி, மூர்மார்க்கெட்- திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட அனைத்து புறநகர் மின்சார ரெயில்களும் கூட்டமின்றி ஓடின.
அதேபோல மெட்ரோ ரெயில் சேவையும் இன்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. மெட்ரோ ரெயிலில் குறைந்த அளவிலான பயணிகள் பயணம் செய்தனர்.
சென்னையில் அனைத்து போக்குவரத்துகளும் முடங்கிய நிலையில் புறநகர் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவைகள் பொதுமக்களுக்கு கை கொடுத்தன.
புதுச்சேரி:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு புதுவை அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களுக்கும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.
நகரின் பிரதான சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தது. மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தொழிற்பேட்டைகள் இயங்க வில்லை.
சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டே இருந்தது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
புதுவை முழுவதும் ஆங் காங்கே தி.மு.க.வினரால் கருணாநிதியின் உருவப்படம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு இருந்தது. #RIPKarunanidhi #Karunanidhideath #dmk
காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடின. அவரது மரணச்செய்தி நேற்று மாலை 6.10 மணிக்கு பிறகு வெளியாகப்போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே பரவியது. இதன் காரணமாக தங்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே கடைகளுக்கு சென்று வாங்கினர்.
நேற்று இரவு 7 மணிக்கே சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நள்ளிரவு போல காட்சி அளித்தது. சிறிய பெட்டிக்கடைகளில் தொடங்கி பெரிய ஓட்டல்கள் வரை அத்தனையும் அடைக்கப்பட்டுவிட்டது.
இன்று காலையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக மட்டும் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்திருந்தனர். முன்னதாக கருணாநிதி மரணம் அடைந்துவிட்ட தகவல் பரவியதும் நேற்று மாலையில் ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் நின்றும் பொது மக்கள் பால் வாங்கியதை காண முடிந்தது.
சென்னையை பொறுத்த வரையில் தினமும் பரபரப்பாகவே விடியும். அதிகாலையிலேயே சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கிவிடும். மாநகர பேருந்துகளும் முழு அளவில் இயங்கும். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் இன்று காலையில் அதுபோன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருந்தது. காலையில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இது முழுஅடைப்பு நடந்தால் எப்படி இருக்குமோ? அது போன்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிலையே காணப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலைய வளாகத்திலேயே பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாநகர பேருந்துகள் எதுவும் ஓடாததால் அங்கு பஸ்கள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது. மின்சார ரெயில்களும், மெட்ரோ ரெயில்களும் வழக்கம் போல இயங்கின.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. வெளியூர்களில் இருந்து கோயம்பேடு மார்க் கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகள் வந்துள்ளன. சரக்குகள் இறக்காமல் உள்ளன.
இதனால் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் களை இழந்து காணப்பட்டது. ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களும் ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதனால் வெளியில் ஆட்கள் நடமாட்டம் இன்றியே காணப்பட்டது. தி.மு.க.வினர் மட்டும் தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றனர். நேற்று மாலையிலேயே பஸ், போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டது. மின்சார ரெயில்களும் முழு அளவில் இயக்கப்படவில்லை. குறைந்த அளவில் ஓடிய பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. படியில் தொங்கியபடியே பெண்களும் பயணம் செய்தனர்.
இதனால் நேற்று மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். குறிப்பாக பெண்கள் அவதிக்குள்ளானார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்