search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழர்களுக்கு ஆலமரம் போல் நிழல் கொடுத்தவர்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
    X

    தமிழர்களுக்கு ஆலமரம் போல் நிழல் கொடுத்தவர்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

    திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanidhi

    திமுக தலைவர் கருணாநிதி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் ஆலமரம் போல் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தவர் டாக்டர் கலைஞர். அவருடைய மறைவு என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பற்றத் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

    பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு இந்திய அரசியலில் மிகப்பெரிய கிங் மேக்கராக திகழ்ந்தவர் என்பதோடு மட்டுல்ல மூன்று பிரதமர் வருவதற்கும் காரணமாக இருந்தவர். அவர் யாரை எதிர்த்தாலும் வெளிப்படையாக எதிர்க்கக் கூடியவர். அதேபோல் ஆதரித்தாலும் முழுமனதோடு ஆதரிப்பவர்.

    அவருடைய இழப்பு இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதோடு மட்டுமல்ல அவருடைய மறைவால் தமிழ கத்திற்கு இந்திய அரசியலில் ஒரு முக்கியத்துவம் இனி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
    Next Story
    ×