search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajaji hall"

    • விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
    • நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.

    தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்க அரசு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    விஜயகாந்தின் உடலை பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத் திடலில் வைக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக, பிரேமலாத, சுதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், நாளை அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு, விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    பிறகு, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு, நாளை மாலை விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    ராஜாஜி அரங்கில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பொது மக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

    அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழியும், பொது மக்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதையில் பொதுமக்கள் புகுந்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் 26 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செண்பகம் (60), ஒரு ஆண் ஆகியோர் இறந்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவணன் (37), துரை (56) ஆகியோர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    பலியான துரை மதுரை மதிசியம் பகுதியை சேர்ந்தவர். தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளரான இவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஏற்கனவே 2 முறை சென்னை வந்துள்ளார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

    காயமடைந்த மற்ற 22 பேரில் 15 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தை வேலு, அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த தங்கராஜ், சத்யா, கென்னடி, வேலூரை சேர்ந்த ஜெயராமன், காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு ஆகிய 7 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலாப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் கார்த்திக் என்ற வாலிபரும் பலியானார்.

    நேற்று காலை 11 மணி அளவில் கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜெகதீஷ் கார்த்திக், மாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் மனைவி சுமித்ராவிடம் தண்ணீர் வாங்கி குடித்த அவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.

    இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜெகதீஷ் கார்த்திக்குக்கு 13 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். ஜெகதீஷ் தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வந்தார்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhidath #RIPKarunanidhi #dmk #rajajihall
    சென்னை:

    திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் ராஜாஜிஅரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தாமையா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கருணாநிதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பிற்பகல் 2.20 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  #Karunanidhidath #RIPKarunanidhi #dmk #rajajihall
    கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கில் திரண்ட தொண்டர்களால் கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து அவர்களை கலைந்துசெல்லும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். #karunanidhideath #dmk #ripkarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டுள்ளனர். நேரம் செல்லச்செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான  தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. 

    கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி 26 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து தொண்டர் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு வந்ததால், அவர்களை கட்டுப்படுத்தி இறுதி ஊர்வலத்தை அமைதியாக நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. 

    எனவே, மு.க.ஸ்டாலின் உடனடியாக தொண்டர்களிடையே மைக்கில் பேசினார். கருணாநிதியின் மறைவு, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பட்ட தடைகள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர், அமைதியாக கலைந்துசெல்லும்படி கூறினார்.

    “கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும்படி முதல்வரை சந்தித்து கேட்டபோது, தர முடியாது என்று மறுத்தார்கள். இதையடுது கலைஞரை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை போராடி பெற்றுள்ளோம். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். எனவே, கலவரம் ஏற்பட இடம் தராமல் அனைவரும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். அமைதியாக கலைந்து சென்றால்தான் சரியாக 4 மணிக்கு தலைவருடைய இறுதிப்பயணத்தை தொடங்க முடியும். 

    உங்கள் சகோதரனாக கேட்கிறேன் தயவு செய்து கலைந்துசெல்லுங்கள். தயவு செய்து யாரும் சுவர் மற்றும் படிக்கட்டு வழியாக ஏறி வந்து கலைஞரின் முகத்தை பார்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். என் வார்த்தையை நீங்கள் கேட்பீர்கள் என நம்புகிறேன்”  என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    அவரது அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்ட தொண்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்துசெல்லத் தொடங்கினர்.  #karunanidhideath #dmk #ripkarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், அண்ணா நினைவிட வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), 11 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று மாலை மரணம் அடைந்தார். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில் முந்தைய சம்பவங்களை எடுத்துக்கூறி ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதால், சட்டச் சிக்கல் நீங்கியது. எனினும், மரபுகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது. இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்யப்போவதில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

    நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. அடக்கம் செய்யும் இடத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இடம் முடிவு செய்யப்பட்டதும், அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. 

    ராஜாஜி ஹாலில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபின், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, கருணாநிதி உடல் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்கம் செய்யப்படும். #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருப்பதால், ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர், கர்நாடகா முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தனர்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த வண்ணம் இருந்தனர். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு மக்கள் அதிக அளவில் குவிய தொடங்கினார். அதேவேளையில் போலீசாரால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

    இதற்கிடையே பொதுமக்கள் கருணாநிதி உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் ராஜாஜி ஹாலில் மக்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை சரிபடுத்தினார்கள்.
    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ராஜாஜி ஹாலுக்கு அலைகடலாக திருண்டு வந்த வண்ணம் உள்ளனர். #RIPKarunanidhi
    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்த சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

    மக்கள் வருகை அதிகரித்ததால் இந்த 3 சாலைகளிலும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் புளிசாதம், இட்லி, தயிர் சாதம் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. பொது மக்கள் அவற்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கேயே சுற்றியப்படி காணப்பட்டனர்.



    கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டதும் அண்ணாசாலை, வாலாஜா சாலை, சிவானந்த சாலை ஆகியவற்றில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.

    ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதனால் மதியம் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது.
    தமிழக முதல்வராக அதிக நாட்கள் பணியாற்றிய ஒரே தலைவர் என்ற பெருமையை திமுக தலைவராக இருந்த கருணாநிதி பெற்றுள்ளார். #RIPKarunanidhi
    தமிழ்நாட்டில் 5 தடவை முதல்-அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. அவர் 6863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக 5239 நாட்கள் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பணியாற்றியுள்ளார்.



    எம்.ஜி.ஆர். 3634 நாட்களும், காமராஜர் 3432 நாட்களும் முதல்வராக இருந்துள்ளனர். காமராஜரும், எம்.ஜி.ஆரும் முதல்வர் பொறுப்பில் இருந்ததை விட கூடுதலாக ஒரு மடங்கு அதிகமான நாளில் கருணாநிதி முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள ஐஎன்எஸ் அடையாளர் கடற்படை தளத்திற்கு வந்து சேர்ந்தார்.

    அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரங்கம் வந்தடைந்த அவர், கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #ModiTributesKarunanidhi

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பாக்யராஜ் அவர்களது குடும்பத்துடன் நேரில் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும், நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar 

    சென்னை மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க இடம் வழங்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #RIPKarunanidhi
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், பரபரப்பான சூழல் உருவானது.

    இதற்கிடையே, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெவித்துள்ளனர். அண்ணா சமாதி உள்ள பகுதி கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குள் வரவில்லை என ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த துரைசாமி கூறினார்.

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக முறையிட்டது. இரவு 10.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.

    தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அரசுத் தரப்பில் ஆஜராகினர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆஜராகினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தங்களது பதிலை காலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.



    அதன்படி இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

    மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது #Karunanidhi #DMK #RajajiHall #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்ல இரங்கல் தெரிவித்துள்ளார். #கலைஞர் #RIPKarunanidhi
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருக்கும் விஜயகாந்த் கருணாநிதி மரணம் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் கருப்பு சட்டை அணிந்து வீடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் தனது வீடியோ இரங்கல் செய்தியில் ‘‘கருணாநிதி மறைந்தார் என்பது என்னால் நம்ப முடியவில்லை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×