search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்- ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு
    X

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்- ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு

    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருப்பதால், ராஜாஜி ஹாலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர், கர்நாடகா முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தனர்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த வண்ணம் இருந்தனர். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு மக்கள் அதிக அளவில் குவிய தொடங்கினார். அதேவேளையில் போலீசாரால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

    இதற்கிடையே பொதுமக்கள் கருணாநிதி உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் ராஜாஜி ஹாலில் மக்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை சரிபடுத்தினார்கள்.
    Next Story
    ×