search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ricky Ponting"

    • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.
    • பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க திணறினார். முதல் டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 ரன்னே எடுத்தார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங் சில் 15 ரன் எடுத்த அவர் காயம் காரணமாக 3-வது டெஸ்டில் விலகினார்.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் தனது 100-வது போட்டியை மெல்போர்னில் விளையாடி இரட்டை சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறும் சிறந்த தருணத்தை அவர் தவற விட்டு விட்டார். அனைத்து வீரர்களும் இதைதான் விரும்புவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு வார்னருக்கு வராமல் கூட போகலாம். ஏனென்றால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது.

    தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆஷஸ் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் வார்னரை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும் என்று கருதுகிறேன்.

    அதே போல் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வார்னர் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் மெல்போர்னில் தனது 100-வது போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார். சொந்த ஊரான சிட்னியில் தனது 101-வது போட்டியில் சிறப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    36 வயதான டேவிட் வார்னர் 103 டெஸ்டில் 8,158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதம், 34 அரை சதம் அடித்துள்ளார்.

    • உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிடுகிறார்.
    • 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.

    மும்பை:

    இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.

    டி20 கிரிக்கெட்டில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களிலும் தடம் பதித்து வருகிறார். நியூசிலாந்து தொடரில் முழுமையாக வாய்ப்பை பெற்ற சூர்யகுமார் யாதவ், அடுத்த மாதம் வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை பார்த்ததே கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    ஆட்டத்தின் சிந்தனைகள், திறமைகளை வைத்து பார்த்தால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிட்டு, அடுத்த சவால்களுக்கு சென்றுவிடுகிறார்.

    இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் செய்வதை போலவே நிறைய வீரர்கள் செய்ய முயற்சிப்பார்கள் என நான் கேள்விப்பட்டு வருகிறேன். இது கேட்பதற்கே எவ்வளவு நன்றாக உள்ளது. 360 டிகிரியிலும் அடிக்கிறார் என நாம் பேசி வருகிறோம். ஆனால் விக்கெட் கீப்பருக்கு பின்னால் அவர் அடிக்கும் சிக்ஸர்கள், ஃபைன் லெக் திசையில் அடிக்கும் ஷாட்கள் அவரின் பெயரை கூறும் அளவிற்கு உள்ளது. 

    சூர்யகுமார் 5 - 6 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், போன்று சூர்யகுமாரும் தரமான ஃபிட்னஸுடன் இருக்கிறார். இப்படியே இருந்தால் நிச்சயம் ஒரு அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.

    • ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
    • ரோகித்சர்மா ஒருநாள் போட்டியில் தனது 30-வது சதத்தை பதிவு செய்தார்.

    இந்தூர்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    அதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

    இதனையடுத்து சுப்மன் கில்லும் 72 பந்துகளில் சதத்தை சுவைத்தார். தனது 21-வது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4-வது சதமாகும். ஒரு நாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் காண்பது இது 10-வது நிகழ்வாகும்.

    இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதையும், சுப்மன் கில் (3 ஆட்டத்தில் 360 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா 101 ரன்கள் எடுத்து தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (46) ஆகியோருக்கு அடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குடன் (30 சதம்) 3-வது இடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.

    இவர்களுக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (28 சதம்) இருக்கிறார். 

    • ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை.
    • மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும்.

    மும்பை:

    கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட், முதற்கட்ட சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். சமீபத்தில் தான் டேராடூனில் இருந்து மும்பையில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    இன்னும் 4 வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை இருப்பதாக தெரிகிறது. தசை நார் கிழிந்துள்ளதால் ரிஷப் பண்ட் பழைய உடற்தகுதிகளை பெற்று குணமடைந்து வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகிவிடலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பண்ட் இடம்பெற போவதில்லை.

    இந்நிலையில் பண்ட் ஐபிஎல் தொடருக்கு வரும்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் அழைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை. ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், சிரிப்புகள், அணியை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வது போன்றவை கண்டிப்பாக டெல்லி அணிக்கு தேவை.


    எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகிவிட்டால் போதும், ஐபிஎல் போட்டிகளின் போது டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும். அப்போது இருந்து அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட், என்னுடன் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும்.

    இவ்வாறு ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.

    ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பதால் டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன்சியில் அதிக அனுபவம் கொண்ட வார்னர், ஐபிஎல் தொடரிலும் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கோப்பையை வென்றுக்கொடுத்தார். பாண்டிங்கும் வார்னர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதால் அதிக வாய்ப்புள்ளது.

    • இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் ரிக்கி பாண்டிங்கை விட டோனி முன்னிலை பெறுகிறார்.
    • 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் டோனி படைத்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா 1999 உலகக் கோப்பை வென்று அசத்தியது. அவருக்குப்பின் பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங் அவரையும் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தி 2007, 2011 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார்.

    2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி முக்கிய நேரங்களில் தைரியமான முடிவெடுத்த எம்எஸ் டோனி இந்தியாவுக்கு முதல் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார்.

    மேலும் சச்சின் முதல் லக்ஷ்மன் வரை அனைத்து மூத்த வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய அவர் 2010-ல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்தி 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் மற்றுமொரு தாகத்தை தணித்தார்.

    அதை விட 2013-ல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் களத்திற்கு வெளியே வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் நடந்த அரசியல்களை ரிக்கி பாண்டிங்கை விட டோனி மிகச் சிறந்ததாக கையாண்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பாராட்டியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

    ரிக்கி பாண்டிங்கிடம் அற்புதமான அணி இருந்தது. டோனியும் சிறந்த அணியை பெற்றிருந்தார். என்னைப் பொறுத்த வரை இருவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல கேப்டன்ஷிப் சாதனைகளை படைத்துள்ளார்கள். அவர்களை நாம் பிரிக்க முடியாது. இருப்பினும் ரிக்கி பாண்டிங்கை விட இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி நிறைய அரசியல் ரீதியான நிகழ்வுகளை கொண்டிருந்தார். அது தான் ரிக்கி பாண்டிங்கை விட டோனியை முன்னிலைப்படுத்தும் அம்சமாகும். ரிக்கி பாண்டிங்கின் மற்றொரு விஷயம் என்னவென்றால் அவரைச் சுற்றி நிறைய அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள்.

    உண்மையில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் எப்படி அசத்த வேண்டும் என்பதை தெரிந்திருந்தார்கள். அதனால் விளையாட்டின் சில அம்சங்களை மட்டுமே பாண்டிங் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அவரது தலைமையில் பெரும்பாலான வீரர்கள் அணுகுமுறைகள், ஒழுக்கம், என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் டோனி தலைமையில் அப்படி ஒரு அணியில்லை. அது கடினமான ஒன்று. அத்துடன் இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் அவரை விட டோனி முன்னிலை பெறுகிறார். சாரி ரிக்கி.

    இவ்வாறு பிராட் ஹாக் கூறினார்.

    • ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்தார்.
    • ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் வர்ணனையாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், வர்ணனையின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.

    • தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
    • நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன்.

    20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு யார் செல்வார்கள் என்று யாருக்கு தெரியும்? ஆனால் ஆஸ்திரேலியா தனது பிரிவில் இருந்து அரை இறுதிக்கு செல்லும். தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் என்று நம்புகிறேன்.

    நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன். இது ஒரு பெரிய விளையாட்டு என்பதை உணர்ந்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எவ்வளவு அதிகமான திறமையை வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினால் சிறப்பாக விளையாடுவீர்கள் என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாக விளையாடியிருக்கிறார்
    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு நாடும் தங்களது அணியை அறிவித்து விட்டன. இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திரும்பி உள்ளார்.

    அதே போல் காயத்தில் இருந்து குணம் அடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியின்போது, உலக கோப்பையில் பும்ரா, ஷகீன் ஷா அப்ரிடி இருவரில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதிலளித்து கூறும் போது, ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார் என்று கருதுகிறேன். இதில் அனுபவத்தை வைத்து நான் பதில் கூறுகிறேன். பும்ரா ஆஸ்திரேலியாவில் ஓரளவு கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

    ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாகவும், பெரிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதனால் உலக கோப்பையில் அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    20 ஓவர் போட்டியில் பும்ரா 58 போட்டியில் 69 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 40 போட்டியில் 47 விக்கெட்டும் எடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே இன்று நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டியில் பும்ரா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறும்போது, போட்டிக்கு பும்ரா தயாராக இருக்கிறார் என்றார்.

    • அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் விராட் கோலியால் 100 சதங்களை எடுக்க இயலும்.
    • விராட் கோலி குறைந்த போட்டியில் விளையாடி 71 சதத்தை எடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அதிக சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அவர் 782 இன்னிங்சில் 100 சதம் அடித்துள்ளார்.

    அதற்கு அடுத்தப்படியாக விராட் கோலி, ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலா 71 சதத்துடன் உள்ளனர்.

    33 வயதான விராட் கோலி சமீபத்தில் 1000 நாட்களை தாண்டிய பிறகு தான் சர்வதேச போட்டியில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த செஞ்சூரியை அடித்தார்.

    இதன் மூலம் விராட் கோலி 71-வது சதத்தை தொட்டு பாண்டிங்கை சமன் செய்தார். டெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலும், பாண்டிங் 2012-ம் ஆண்டிலும் ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் விராட் கோலியால் 100 சதம் அடித்து டெண்டுல்கரின் சாதனையை தொட இயலும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி குறைந்த போட்டியில் விளையாடி 71 சதத்தை எடுத்துள்ளார். இன்னும் 30 சதங்கள் தான் அவருக்கு தேவை. ஒரு ஆண்டுக்கு 5 அல்லது 6 சதம் அடிக்கும் திறன் கொண்டவர்.

    அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் அவரால் 100 சதங்களை எடுக்க இயலும்.

    இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.

    • இந்திய வீரர்களில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
    • அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71-வது சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ள விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி, ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை தகர்க்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

    இந்திய வீரர்களில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் 24,208 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    தற்போது விராட் கோலி 24,002 ரன்கள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் அவர் 207 ரன்களை இந்த தொடரில் குவிக்கும் பட்சத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார்.

    மேலும் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடிக்க அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது.

    அதோடு அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங்கை சமன் செய்திருக்கும் கோலி மெல்ல மெல்ல சச்சினின் சாதனையை நெருங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாட போவது யார் மற்றும் வெற்றியாளர் யார் என்பதை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
    • டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி போன்ற புகழ்பெற்ற மைதானங்களில் நடைபெறுகிறது.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி போன்ற புகழ்பெற்ற மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    கடந்த 2021-ல் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை தக்க வைக்க சொந்த மண்ணில் களமிறங்குகிறது.

    இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாட போவது யார் மற்றும் வெற்றியாளர் யார் என்பதை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

    இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும். இறுதி போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் நடப்பு சாம்பியனான அவர்களுக்கு சொந்த மண் சூழ்நிலைகள் சாதகமாக கிடைத்துள்ளது.

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து மிகச்சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். தற்போதைய நிலைமையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் மட்டுமே உலகத்தரம் மற்றும் கிளாஸ் நிறைந்த மேட்ச் வின்னர் வீரர்கள் நிறைந்துள்ளார்கள்.

    அதேபோல் பாபர் அசாம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

    நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் எதிர்பாராத வகையில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    டி20 கிரிக்கெட்டை நான் அதிகமாக பார்த்துள்ளேன். அந்த வகையில் நியூசிலாந்து அல்லது வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான். இந்த அணிகள் டி20 கிரிக்கெட்டில் மிகவும் விரும்பி விளையாடுகின்றன. மேலும் டி20 அவர்களுக்கு மிகவும் பொருத்தமாகவும் அமைகிறது. எனவே அவர்களில் யாராவது ஒருவர் இறுதிப்போட்டியில் விளையாடினாலும் நான் ஆச்சரியப்பட போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலிக்கு அவருடைய நம்பிக்கையை மீட்க நடவடிக்கை எடுப்பேன்.
    • விராட் கோலி இல்லாத அணியை விட, அவர் பிளேயிங் லெவனில் இருக்கும் அணியை பார்த்து தான் நான் அச்சம் கொள்வேன்.

    இந்திய அணி 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்பட 3 பேருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

    விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் திணறி வருகிறார். அவர் கடைசியாக 3 வருடத்திற்கு முன்பு சதம் அடித்தார். விராட் கோலியை இந்திய அணி முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலிக்கு இது ஒரு கடினமான காலம் என்பதை நான் அறிவேன். அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால் அனைத்து சிறந்த வீரர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்படும். பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் சரி இந்த நிலைமையை அவர்கள் கடந்து ஆக வேண்டும். ஆனால் சிறந்த வீரர்கள் கடினமான சூழலில் எப்படி எதிர்கொண்டு மீண்டு வருகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

    விராட் கோலிக்கும் அது சீக்கிரம் நிகழும் என நம்புகிறேன். வீரராகவும் கேப்டனாகவோ இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். விராட் கோலி இல்லாத அணியை விட, அவர் பிளேயிங் லெவனில் இருக்கும் அணியை பார்த்து தான் நான் அச்சம் கொள்வேன். அது தான் விராட் கோலி ஏற்படுத்தி இருக்கிற தாக்கம்.

    உலகக்கோப்பை நடைபெறும் இந்த காலத்தில் விராட் கோலியை அணியை விட்டு நீக்கி வேறு ஒருவரை நீங்கள் கொண்டு வந்தால், மீண்டும் விராட் கோலி அணிக்கு திரும்புவது கடினமாகும். நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலிக்கு அவருடைய நம்பிக்கையை மீட்க நடவடிக்கை எடுப்பேன். விராட் கோலியின் தற்போது உள்ள சூழலை நான் லேசாக மாற்ற முயற்சி செய்வேன்.

    விராட் கோலி ஃபார்முக்கு வர நான் காத்திருப்பேன். விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் ஃபார்மில் இல்லை என்றால் கூட அவரை விளையாட வைக்க வேண்டும். அப்போதுதான் லீக் சுற்றுகளில் விராட் கோலி ஓரளவுக்கு உத்வேகத்தை பெற்று நாக் அவுட் சுற்றுகளில் எரிமலை போல் வெடித்து அணிக்காக சிறந்து விளையாடுவார்.

    ×