search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Request"

    • உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.
    • நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், விவசாய நிலங்களை அழித்து விவசாயம் அல்லாத நோக்கத்திற்காக அனுமதியற்ற முறையில் மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.

    அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமீறல்கள் தெரியவரும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது

    மேலும் பொதுமக்கள் யாரும் முறையான கட்டிட அனுமதி பெறப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்கவோ அல்லது மூடி முத்திரையிடவோ தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மலையிட கட்டிட விதிகள் 1993, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998(திருத்தப்பட்டது 2022)ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம் எனவும், மனைப்பிரிவு, நில அபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.

    பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று மேயர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    • கொசு ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் பேச்சு

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்திதில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 65 வார்டுகளிலும் தலா 50 போ் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகரமாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா்.

    கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
    • ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்து தீர்மானம்

    பொன்னமராவதி, 

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மேலத்தானியம் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் கொன்னைப்பட்டி செல்வமணி , பொருளாளர் தேனூர் கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேரனூர் காமராஜ், முள்ளிப்பட்டி குமார் ஆகியோர் ஊராட்சிகளின் செயல்பாடு, ஊராட்சி செயலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்ள்,தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்க்கு ஊதியம் வழங்க முடியாத நிலை மற்றும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை செலவினங்கள் மேற்கொள்ள புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள டி.என்.பாஸ் முறையினால் மேற்கொள்ள முடியாத நிலை மற்றும் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து விளக்கிப்பேசினார்.

    இதனைத்தொடர்ந்து ஊராட்சிகளில் பணியாளர்கள் மற்றும் செலவினங்களுக்கு ஓ.டி.பி. முறை என்ற டி.என்.பாஸ் முறையினை ரத்து செய்து பழைய முறையினை கொண்டு வரவேண்டும். 3 மாதமாக வழங்கப்படாத மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும்.ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஊராட்சி தலைவர்களே நியமனம் செய்யவழிவகை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கை அடங்கிய மனுவினை கிராம ஊராட்சி ஆணையர் கருணாகரனிடம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித்தலைவர்கள் ராமையா, செல்வராஜ்,ராமன்,அர்ச்சுணன்,அழகுமுத்து, ராமசாமி,பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பசும்பொன் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும்.
    • பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணி கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி

    பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில பொறுப்பாளர் சி.எம்.டி ராஜா சேதுபதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசியமும் தெய்வீகமும் கொள்கை எனக் கொண்டு மத்தியில் ஆட்சி செய்கின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழக மெங்கும் வாழக்கூடிய முக்குலத்தோர் சமுதாய மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தென் மாவட் டங்களில் பெருவாரியான இடங்களில் அண்ணாமலை தலைமையில் வெற்றி பெறுவார்கள். அதற்கு உறு துணையாக, பாதுகாப்பு அரணாக முக்குலத்து சமுதாய மக்கள் இருப் பார்கள்.

    முக்குலத்து மக்களின் கோரிக்கைகளை மாநில தலைவர் அண்ணாமலை நிறைவேற்றி தர வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும் பொன் முத்துராம லிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். டி.என்.டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் மூன்று பேரையும் சேர்த்து தேவர் இனம் என்று அறிவித்து அரசு ஆணையை அமல் படுத்த வேண்டும். தேவர்

    பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இங்கே வாழக்கூடிய ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.
    • ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

    அண்ணாத்துரை தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.

    இது தொடர்ந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக 2020-ல் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு ஏற்பட்ட நிதிச் சுமையால் ஆசிரியர்களுக்கு காலம் காலமாக வழங்கி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டதில் 9.3.2020-க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களிடம் கருத்துருக்கள் பெற்று அதன் அடிப்படையில் பழைய முறையில் ஊக்க ஊதியம் வழங்கிட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

    எனவே முதல்வர் உயர்கல்வி முடித்திட்ட ஆசிரியர்களுக்கு பழைய முறையில் கணக்கிட்டு ஊக்க ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பித்திட வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • கரூர் பஸ்ஸ்டாண்டில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
    • சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    கரூர்,

    கரூர் மாநகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், பழநி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வெளியூர் பஸ்களும், அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், வாங்கல், தென்னிலை, சோமூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    கொசுவலை, பஸ்பாடி போன்ற முக்கிய தொழில்களை கொண்ட பகுதியாக கரூர் விளங்கி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்காகவும், மற்ற பணிகளுக்காகவும் கரூர் வந்து செல்கின்றனர். மேலும், கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள், வெளியூர்களுக்கு சென்று திரும்பி வருகின்றனர்.

    இந்த கரூர் பஸ்ஸ்டாண்டின் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பஸ்களை ஓட்டி செல்ல டிரைவர்கள், படாத பாடு பட வேண்டி உள்ளது. குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் சாலைகளை சீரமைத்து, பஸ்கள் எளிதாக வந்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    • மிஷின் பள்ளிக்கூட தெருவில் சாக்கடை நீர் செல்ல வாறுகால் அமைக்கப்படவில்லை.
    • மழைக்காலங்களில் தெருவே சகதிமயமாகி விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு நகராட்சி 15-வது வார்டுக்குள்பட்ட மிஷின் பள்ளிக்கூட தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் சாக்கடை நீர் செல்ல வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் தெருவிலேயே ஆறு போல் ஓடுகிறது. சாக்கடை நீருக்குள் இறங்கி தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. மேலும் அதில் கொசுக்கள் மற்றும் பூச்சிகளும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்களை பரப்பி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். சாக்கடைக்குள் குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது.

    மழைக்காலங்களில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து விடுவதால் தெருவே சகதிமயமாகி விடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அத்துடன் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தெருவில் சாக்கடை நீர் தேங்குவது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    • உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம் மற்றும் பஜார் வீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • மேலும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பஜார் வீதிகளில் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தபடுகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம் மற்றும் பஜார் வீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுமார்15 நிமிடம் முதல் 30 நிமிடம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு காரணம் போக்குவரத்து போலீசார் உடன்குடி பஸ் நிலையம், மற்றும் பஜார் பகுதியில் இருப்பதில்லை, மேலும் தேவை இல்லாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பஜார் வீதிகளில் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தபடுகிறது. அடிக்கடி ஒரு வழி பாதை மீறப்படுகிறது. இதையும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

    மேலும் கடைக்கு உள்பகுதியில் எவ்வளவு இடம் இருந்தாலும், சாலை ஓரமாக பொருட்களை குவித்து வைக்கின்றனர். இவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு நெரிசல் காண வேண்டும். என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • இடிந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர்
    • நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    ேசாழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து பொது மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் இந்த மருத்துவ மனை முன் நுழை வாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ச்சியடைந்து விரி வடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு அதிகப்படியான பொது மக்கள் மற்றும் நோயாளிகள் தினசரி வந்து செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள தாக பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

    மேலும் இந்த சுற்றுச்சவருக்கு அருகிலேயே மருத்துவ மனைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்து வதால் எந்த நேரத்திலும் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    மேலும் அவசர சிகிச் சைக்கு வரும் வாகனங்களும் இந்த வழியாக வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கின்றனர். ஆகையால் பொதுமக்களின நலன் கருதி பழைய சுற்று சுவரை இடித்து விட்டு புதிய சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக அரசு பாரபட்சமின்றி பதிவு செய்துள்ள பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கோவை,

    தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் சார்பில் பாப்பம்பட்டி பிரிவு அருகே பாரதிபுரத்தில் புதிய கிளை அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவுக்கு கட்டுமான பிரிவு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். உழைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

    கட்டுமானப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். புதிய அலுவலகத்தை எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் மாநில செயல் தலைவர் கணபதி சிவக்குமார் திறந்து வைத்தார். எச்.எம்.எஸ். கொடியை உழைப்பாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவராஜ் ஏற்றி வைத்தார்.

    விழாவில் எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்க மாநில செயல் தலைவர் கணபதி சிவக்குமார் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா மற்றும் கட்டுமான துறைகளில் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

    ஏற்கனவே அமைப்புசாரா மற்றும் கட்டுமானத்துறைகளில் பதிவு பெற்றுள்ள பெண்களுக்கு தற்போது மகளிர் உரிமை தொகை தமிழக அரசால் வழங்கப்படும் போது இரு பயனாளிகள் என்று கிராம நிர்வாக அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    தமிழக அரசு பாரபட்சமின்றி பதிவு செய்துள்ள பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இ.பி.எப்95 ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு 1995-ம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. எனவே மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    தமிழகத்தில் செயல்படும் அமைப்புசாரா, கட்டுமானம் உள்ளிட்ட தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், அனைவருக்கும் தமிழக அரசு தீபாவளி போனஸ், வேட்டி, சேலை மற்றும் பண்டிகை கால நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும்.

    ரெயில் நிலையங்களில் கேட்டரிங், கோச் கிளினிங், பைப் லைன், சுமைதூக்கும் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கும், ரெயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று ஊதிய உச்சவரம்பின்றி 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

    மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் எதிராக சட்டங்களை நிறை வேற்றி முதலாளிகளுக்கு சாதகமான செயல்பாட்டை கைவிட வேண்டும்.

    ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உறுதி கோரிய பா.ஜனதா அரசு இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. உடனடியாக அதனை நிைறவேற்ற வேண்டும்.

    கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து சாலைகளை செப்பனிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துசாமி, பள்ளிப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் ஏசையன், மாவட்ட பொரு ளாளர் பாலசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர்கள் கோபிநாத், மோகன், துணைத்தலைவர்கள் இன்னாசி முத்து, கருப்புசாமி, வேளாங்கண்ணி, காந்தி, அகஸ்டியன், புவனே ஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன.
    • உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்

    திருப்பூர்

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, கோவை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர், வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்டு ஆண்டிபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக உதவி மின் பொறியாளர், 15 கி.மீ., தூரத்தில் உள்ள முதலிபாளையம், காசிபாளையம் மின் அலுவலகத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.

    இடுவம்பாளையம் மின் அலுவலக உதவி மின் பொறியாளர், சின்னக்கரை மற்றும் கூடுதலாக சில மின் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளது. முருகம்பாளையம் உதவி மின் பொறியாளர், கரைப்புதூர் உட்பட துணை மின்நிலையங்களையும் கூடுதலாக கவனிக்கிறார்.

    ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. கூடுதல் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளதால், மின் வாரிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. மின் கணக்கீட்டாளர், பணம் வசூலிப்போரும் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என கூறியிருந்தனர். 

    ×