search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perimeter"

    • இடிந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர்
    • நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    ேசாழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து பொது மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் இந்த மருத்துவ மனை முன் நுழை வாயில் பகுதியில் உள்ள மரம் வளர்ச்சியடைந்து விரி வடைந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு அதிகப்படியான பொது மக்கள் மற்றும் நோயாளிகள் தினசரி வந்து செல்வதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள தாக பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

    மேலும் இந்த சுற்றுச்சவருக்கு அருகிலேயே மருத்துவ மனைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்து வதால் எந்த நேரத்திலும் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    மேலும் அவசர சிகிச் சைக்கு வரும் வாகனங்களும் இந்த வழியாக வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கின்றனர். ஆகையால் பொதுமக்களின நலன் கருதி பழைய சுற்று சுவரை இடித்து விட்டு புதிய சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கமுதி அடுத்துள்ள பேரை யூரில் சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.
    • சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரை யூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி வளாகத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக சுற்றி திரிந்ததாலும், சமூக விரோதிகள் பயன்படுத்த தொடங்கியதாலும் பாதுகாப்பு கருதி 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டது.இந்த நிலையில் தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதையொட்டி பேரையூர் வழியாக செல்லும் குண்டாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் சாலையோர கால்வாய்கள் மூலம் பள்ளி வளாகத் திற்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மழைக்காலங்க ளில் வரத்துக்கால்வாய்க ளில் தேங்கும் மழைநீர் மூலம் விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து உள்ள தால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தை பயன் படுத்த தொடங்கலாம்.

    எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயரமான சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
    • மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகள் பழமை யானது. இந்த பள்ளிக்கு தற்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவ தற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லை அளவீடு செய்யும்போது திருப்பத்தூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான மின்மாற்றி பள்ளியின் எல்லைக்குள் வருவது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அதிகாரி தனுஷ்கோடி மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் அந்த மின்மாற்றியால் பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்மாற்றிக்கு தேவையான அளவில் உயரமான சுற்றுச்சுவர் அமைத்து பள்ளியின் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டி ஆலோசனை வழங்கினார்கள்.

    அதனடிப்படையில் மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்த அளவின்படி டிரான்ஸ் பார்மரை சுற்றி பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உயர மாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    • டென்னிஸ் விளையாடும் மகளிர் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    • இதுகுறித்து கென்னடி எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் டென்னிஸ் விளையாடும் மகளிர் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இதுகுறித்து கென்னடி எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று இந்திரா காந்தி விளையாட்டு அரங்க சுற்று சுவரை புனரமைப்பு செய்வதற்காக ரூ. 12.83 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டது.

    இந்த பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர். சத்தியமூர்த்தி கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் அதனை உயர்த்தி கட்டி, மாணவியரின் சங்கடத்தை போக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நகர மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுப்பணித்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினார்.

    இதற்கு நாமக்கல் செயற்பொறியாளர் அருள் பதில் அனுப்பிய கடிதத்தில், இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் பணி செயலாக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது பற்றி சித்ரா கூறுகையில், மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து என்னை நிதி பெற்று தர சொல்வது, பொதுநல ஆர்வலர்களை இழிவு படுத்துவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்புறம் இருந்த சுற்றுச்சுவர் கஜா புயலில் சேதம் அடைந்தது.
    • திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்புறம் இருந்த சுற்றுசுவர் கஜா புயலில் சேதம் அடைந்தது.

    இதையடுத்து மாரிமுத்து எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைக்க ஒதுக்கீடு செய்தார்.

    இதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர்சுந்தர், வழக்கறிஞர் அருள்செல்வன், தாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×