search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசும்பொன் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும்
    X

    பசும்பொன் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும்

    • பசும்பொன் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும்.
    • பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணி கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி

    பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில பொறுப்பாளர் சி.எம்.டி ராஜா சேதுபதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசியமும் தெய்வீகமும் கொள்கை எனக் கொண்டு மத்தியில் ஆட்சி செய்கின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழக மெங்கும் வாழக்கூடிய முக்குலத்தோர் சமுதாய மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தென் மாவட் டங்களில் பெருவாரியான இடங்களில் அண்ணாமலை தலைமையில் வெற்றி பெறுவார்கள். அதற்கு உறு துணையாக, பாதுகாப்பு அரணாக முக்குலத்து சமுதாய மக்கள் இருப் பார்கள்.

    முக்குலத்து மக்களின் கோரிக்கைகளை மாநில தலைவர் அண்ணாமலை நிறைவேற்றி தர வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும் பொன் முத்துராம லிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். டி.என்.டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் மூன்று பேரையும் சேர்த்து தேவர் இனம் என்று அறிவித்து அரசு ஆணையை அமல் படுத்த வேண்டும். தேவர்

    பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இங்கே வாழக்கூடிய ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×