என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "release"
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று காலை நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினி முருகன் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். இரவு உணவும் அவர் சாப்பிடவில்லை.
2-வது நாளாக இன்று காலையிலும் அவர் உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தங்களது விடுதலையை முன் வைத்து முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
தங்களது மனுவின் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் அவர் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார் என்றனர். #rajivgandhi #nalinimurugan #vellorejail
2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டுக்கு 2019-ம் ஆண்டு மே 1-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 25-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையும் விடப்படுகிறது. ஏப்ரல் 27-ந்தேதி, சனிக்கிழமையை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை ஆகும்.
ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு விடுமுறை ஆகும். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 17-ந்தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 19 மற்றும் 18-ந்தேதிகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதியும், ரம்ஜான் பண்டிகைக்காக ஜூன் 5-ந்தேதியும், பக்ரீத் பண்டிகைக்காக ஆகஸ்டு 12-ந்தேதியும், சுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 15-ந் தேதியும், கிருஷ்ண ஜெயந்திக்காக ஆகஸ்டு 23-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்திக்காக செப்டம்பர் 2-ந் தேதியும், மொஹரத்துக்காக செப்டம்பர் 10-ந்தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ந்தேதி யும் விடுமுறை விடப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, விடுமுறை நாளான (அக்டோபர் 27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24-ந்தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுதவிர, குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, மிலாது நபி ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.
இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. #HighCourt #Holidays
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable
2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-
எஸ்.எஸ்.எல்.சி.
10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்
11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்
13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்
17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்
18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்
19-ந் தேதி (புதன்கிழமை) - அறிவியல்
22-ந் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்
பிளஸ்-1
10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்
12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).
17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.
19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.
பிளஸ்-2
10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்
12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).
17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.
22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
மேற்சொன்ன அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.
குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.
தற்போது, இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க் களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதே நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்தது.
ராஜபக்சேவை அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்து பேசியபோது, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிதர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு ராஜபக்சே ஒப்புக்கொள்ளாததால் அவருக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ராஜபக்சேயின் மகனும், எம்.பி.யுமான நமல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புதிய நிபந்தனை விதித்தார். அவர் டுவிட்டரில் தமிழில் பதிவு செய்த தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரம் பேசுவதுபோல் அமைந்துள்ளது. அதாவது ஓட்டெடுப்பில் தனது தந்தைக்கு ஆதரவு தரவேண்டும் என்று அவர் மறைமுகமாக வலியுறுத்தி இருக்கிறார்.
அதில், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி நபர்களின் சுயநல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
மற்றொரு பதிவில், ‘தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்த்து வைக்கும் வகையில் கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் அதிபர் மற்றும் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்’ என்று கூறி இருக்கிறார்.
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதைய நிலையில் ராஜபக்சேவை 100 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவை 103 எம்.பி.க்களும் ஆதரிக்கின்றனர்.
மீதமுள்ள 22 எம்.பி.க்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே ராஜபக்சே அணிக்கு தாவி விட்டார். இன்னும் 4 எம்.பி.க்களின் ராஜபக்சே பக்கம் தாவலாம் என்று கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவு கிடைத்தாலும் கூட ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 9 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
இதனால் மீதமுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் 6 உறுப்பினர்கள், இன்னொரு சிறு கட்சியின் ஒரு எம்.பி.யின் ஆதரவுடன் விக்ரமசிங்கே எளிதில் 113 என்னும் பெரும்பான்மை இலக்கை எட்டி விடுவார் என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ராஜபக்சே மகன் மறைமுக பேரத்தில் ஈடுபட்டு உள்ளார் என்று இலங்கையின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். #Rajapaksa #NamalRajapaksa
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.
அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் கவர்னர், அவர்களை உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கதாகும். இது தமிழக அமைச்சரவையின் முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமும் இதுவே.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் கவர்னர் நிராகரிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அப்போதைய தி.மு.க. அரசு அளித்த பரிந்துரையை கவர்னர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டு தண்டனையைக் குறைத்தார் என்பது வரலாறு ஆகும்.
எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சர்ச்சை ஆக்காமல், அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் கருணை மனுவை கவர்னர் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
கடந்த பல ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக கவர்னருக்கு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு கவர்னரை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கவர்னர் எடுக்க போகும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அவரின் முடிவு, 7 பேரின் விடுதலை தொடர்பாக நடைபெற்று வந்த நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு ஒரு இறுதி முடிவாக, நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நிஜாமுதீன் உள்பட பலர் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்