search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "release"

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று காலை நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினி முருகன் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். இரவு உணவும் அவர் சாப்பிடவில்லை.

    2-வது நாளாக இன்று காலையிலும் அவர் உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தங்களது விடுதலையை முன் வைத்து முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    தங்களது மனுவின் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் அவர் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார் என்றனர். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். அவர்களை விடுவிக்க கோரி டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ramadoss #tnfishermen #SriLankannavy
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு குழு மீனவர்களின் படகையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதில் மாயமான ஒரு மீனவரின் நிலை என்ன? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை திருப்பித் தர இலங்கை அரசு மறுத்து வருகிறது.

    சிங்களப் படையினரின் அத்துமீறல்கள் நீடித்தால், தூத்துக்குடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்க நேரிடும். எனவே, கைது செய்யப்பட்ட 27 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவித்து சொந்த ஊர் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் மூழ்கி மாயமான மீனவர் மாரிச்சாமியை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Ramadoss #tnfishermen #SriLankannavy
    கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டுள்ளார். #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர்.

    ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ‌சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ‌ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடநாடு சம்பவம் தொடர்பாக ‌சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.

    இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

    அப்போது கொடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த ‌சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இரவோடு இரவாக இருவரையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் ‌சயன், மனோஜ் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

    விமான நிலையத்தில் இருந்து 5 மணியளவில் வெளியில் வந்த போலீசார் அங்கு தயாராக இருந்த போலீஸ் வேனில் 2 பேரையும் ஏற்றி எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் சயன், மனோஜ் இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூம் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து சயன், மனோஜ் மீதான விசாரணை நீதிபதி முன்பு 4 மணிநேரம் நடைபெற்றது.  விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 

    விடுவிக்கப்பட்ட சயன், மனோஜ் வரும் 18ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் விசாரணையின் போது வழக்கறிஞருடன் வரும் 18ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன் வருமாறு நீதிபதி சரிதா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #KodanadEstate #KodanadVideo
    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார். #HighCourt #Holidays
    சென்னை:

    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டுக்கு 2019-ம் ஆண்டு மே 1-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 25-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையும் விடப்படுகிறது. ஏப்ரல் 27-ந்தேதி, சனிக்கிழமையை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை ஆகும்.

    ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு விடுமுறை ஆகும். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 17-ந்தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 19 மற்றும் 18-ந்தேதிகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதியும், ரம்ஜான் பண்டிகைக்காக ஜூன் 5-ந்தேதியும், பக்ரீத் பண்டிகைக்காக ஆகஸ்டு 12-ந்தேதியும், சுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 15-ந் தேதியும், கிருஷ்ண ஜெயந்திக்காக ஆகஸ்டு 23-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்திக்காக செப்டம்பர் 2-ந் தேதியும், மொஹரத்துக்காக செப்டம்பர் 10-ந்தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ந்தேதி யும் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, விடுமுறை நாளான (அக்டோபர் 27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24-ந்தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதுதவிர, குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, மிலாது நபி ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

    இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. #HighCourt #Holidays 
    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-

    எஸ்.எஸ்.எல்.சி.

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

    18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்

    19-ந் தேதி (புதன்கிழமை) - அறிவியல்

    22-ந் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்

    பிளஸ்-1

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.

    பிளஸ்-2

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

    மேற்சொன்ன அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. #TelanganaAssemblyElections #Congress
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.

    தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார். வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.



    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ஹுசூர் நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி பத்மாவதி மீண்டும் கோகட் தொகுதியில் போட்டியிடுகிறார். 

    சர்வே சத்யநாராயண எம்.பி செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியிலும், பூனம் பிரபாகர் கரீம் நகரிலும், பல்ராம் நாயக் மெகபூபாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். #TelanganaAssemblyElections #Congress 
    இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajapaksa #NamalRajapaksa
    கொழும்பு:

    2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

    குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.

    தற்போது, இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க் களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதே நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்தது.

    ராஜபக்சேவை அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்து பேசியபோது, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிதர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு ராஜபக்சே ஒப்புக்கொள்ளாததால் அவருக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில்தான் இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ராஜபக்சேயின் மகனும், எம்.பி.யுமான நமல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புதிய நிபந்தனை விதித்தார். அவர் டுவிட்டரில் தமிழில் பதிவு செய்த தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரம் பேசுவதுபோல் அமைந்துள்ளது. அதாவது ஓட்டெடுப்பில் தனது தந்தைக்கு ஆதரவு தரவேண்டும் என்று அவர் மறைமுகமாக வலியுறுத்தி இருக்கிறார்.

    அதில், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சில தனி நபர்களின் சுயநல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மற்றொரு பதிவில், ‘தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்த்து வைக்கும் வகையில் கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் அதிபர் மற்றும் பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்’ என்று கூறி இருக்கிறார்.

    225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதைய நிலையில் ராஜபக்சேவை 100 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவை 103 எம்.பி.க்களும் ஆதரிக்கின்றனர்.

    மீதமுள்ள 22 எம்.பி.க்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே ராஜபக்சே அணிக்கு தாவி விட்டார். இன்னும் 4 எம்.பி.க்களின் ராஜபக்சே பக்கம் தாவலாம் என்று கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவு கிடைத்தாலும் கூட ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 9 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

    இதனால் மீதமுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் 6 உறுப்பினர்கள், இன்னொரு சிறு கட்சியின் ஒரு எம்.பி.யின் ஆதரவுடன் விக்ரமசிங்கே எளிதில் 113 என்னும் பெரும்பான்மை இலக்கை எட்டி விடுவார் என்று கருதப்படுகிறது.

    இதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ராஜபக்சே மகன் மறைமுக பேரத்தில் ஈடுபட்டு உள்ளார் என்று இலங்கையின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். #Rajapaksa #NamalRajapaksa
    குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு வந்த குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடைபெற்றது. #Congressworkers #blackballoons
    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், வரும் 31-ம் தேதி குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை  விழாவில் பங்கேற்க வருமாறு உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி நேற்று லக்னோ நகருக்கு வந்தார்.

    லக்னோ விமான நிலையம் பகுதியில் நேற்றிரவு திரண்ட காங்கிரசார் கருப்பு பலூன்களை பறக்க விட்டு விஜய் ருபானிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விஜய் ருபானியே திரும்பிப்போ என்னும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

    மேலும், இன்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டுக்கு விஜய் ருபானி வந்தபோதும் இதேபோல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலரை போலீசார் கைது செய்து ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையில், லக்னோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜய் ருபானி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், பிரதமர் மோடி ஆகியோர் பிறந்த குஜராத் மாநிலம் ஒரு குட்டி இந்தியாவாகும். இந்தியா எல்லோருக்குமே பொதுவானது. 

    குஜராத்தின் வளர்ச்சிக்காக உ.பி., பீகார், மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட மாநில மக்கள் அதிகமாக உழைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். குஜராத்தில் அனைத்து மாநில மக்களுக்கான பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். #Congressworkers #blackballoons #GujaratCM #VijayRupani
    கொலை வழக்கில் விடுதலை என்று தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நல்லம்பள்ளி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலிதொழிலாளி ஜாமீனில் விடுதலையானார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள அதியமான் கோட்டையில் இரண்டு மகன்களுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி கூலி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது45). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். பத்தாம் வகுப்பு படிக்கும் சக்தி (15) என்ற மகனும், 6-வது வகுப்பு படிக்கும் வீரமணி (11) என்ற மகனும் உள்ளன. தனது 2 மகன்களுக்காக முனிராஜ் பல முறை சாதி சான்றிதழ் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகமும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னையிலும் பலமுறை மனு கொடுத்துள்ளார்.

    மனு கொடுத்தும் இது வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மகன் சக்தி எழுதுவதால் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. 

    அதனால் பல முறை மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் கிடைக்காததால் அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் அருகில் உள்ள 180 அடி செல்போன் கோபுரத்தில் ஏறி முனிராஜ் தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்களை பார்த்து சத்தம் போட்டார். இது குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அப்போது செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முனிராஜை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டு அதியமான் கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் முனிராஜிடம் விசாரணை நடத்தியதில் பல முறை தன் மகன்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகன்கள் மேற்படிப்பிற்கு தொடர முடியாதோ என்ற அச்சத்தில் மன முடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    வருவாய்துறையினர் சாதிசான்றிதழ் தருவதாக உறுதி அளித்த பிறகு முனிராஜை காவல் துறையினர் இது போன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து வழக்குபதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Perarivalan #RajivGandhiCase
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் கவர்னர், அவர்களை உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கதாகும். இது தமிழக அமைச்சரவையின் முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமும் இதுவே.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் கவர்னர் நிராகரிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அப்போதைய தி.மு.க. அரசு அளித்த பரிந்துரையை கவர்னர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டு தண்டனையைக் குறைத்தார் என்பது வரலாறு ஆகும்.

    எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சர்ச்சை ஆக்காமல், அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் கருணை மனுவை கவர்னர் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

    கடந்த பல ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக கவர்னருக்கு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு கவர்னரை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கவர்னர் எடுக்க போகும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அவரின் முடிவு, 7 பேரின் விடுதலை தொடர்பாக நடைபெற்று வந்த நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு ஒரு இறுதி முடிவாக, நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நிஜாமுதீன் உள்பட பலர் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #TNSecretariat #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. 

    இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    இதையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.



    இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படும்.

    அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர். #TNSecretariat #TNCM #EdappadiPalaniswami
    ×