search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress workers"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.
    • பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா அன்று, கர்நாடகாவில் உள்ள ராமர் கோவில்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து கர்நாடக முதல்வர் மேலும் கூறியதாவது:-

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பு எனக்கு வரவில்லை. ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.

    நாங்களும் ராமரை வணங்குகிறோம். ஆனால் அவர்கள் (பாஜக) ராமர் கோவில் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம். ஸ்ரீராமனை அல்ல.

    நான் ஜனவரி 22க்குப் பிறகு, நேரம் கிடைக்கும்போது அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமரை தரிசிப்பேன். நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் அல்ல. பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் அரங்கில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலேசியா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக நிர்வாக திறமை உள்ள ஒருவரை அறிவிக்க வேண்டும், வரும் பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக பணியாற்றி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் நல்ல பல திட்டங்களை பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் கவுன்சிலர் நிஜாம் அலிகான் மற்றும் சேவாதளம் மாநில தலைவர் பரமக்குடி அஜீஸ் ஆகியோர் பேசிய போது, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மிகச் சிறப்பாக காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார். ஆனால் தற்போது 5 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வேதனையாக உள்ளது, வரும் காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், சேவா தல தலைவர் அப்துல் அஜீஸ், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, நகர் துணைத் தலைவர் ஜெயக்குமார், மகளிர் அணி தலைவர் ராமலட்சுமி, பெமிலா விஜயகுமார், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டியன், ஜோதிபாலன் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், ராணுவ பிரிவு தலைவர் கோபால், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #LokSabhaElections2019 #CashForVote #ElectionFlyingSquad
    காரைக்குடி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப் புழக்கத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கவும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சுமதி தலைமையில் பறக்கும் படையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கடாசலம், பாலதண்டாயுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #CashForVote #ElectionFlyingSquad
    ‘சவுகிதார்’ என்று தங்கள் பெயரின் முன்னால் பாஜகவினர் போட்டுள்ளதைப்போல் பப்பு என்ற ராகுல் காந்தியின் பட்டப்பெயரை காங்கிரசார் சேர்த்துக் கொள்ளுங்கள் என அரியானா மந்திரி குறிப்பிட்டுள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
     
    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

    மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

    இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவை சேர்ந்த அரியானா மாநில மந்திரி அனில் விஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரசாருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்களுக்கு பிடித்திருப்பதால் எங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்னும் அடைமொழியை நாங்கள் சேர்த்திருக்கிறோம்.



    உங்களுக்கும் தேவைப்பட்டால் ‘பப்பு’ (மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் 'ஏதுமறியாத சிறுவன்' என்பதை குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என்ற அடைமொழியை உங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என தெரிவித்துள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
    சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். #CongressProtests #AlokVerma #CBIVsCBI #RahulArrest
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். பேரணியின் முடிவில் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.



    இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்த சிலர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI #RahulArrest
    குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு வந்த குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடைபெற்றது. #Congressworkers #blackballoons
    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், வரும் 31-ம் தேதி குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை  விழாவில் பங்கேற்க வருமாறு உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி நேற்று லக்னோ நகருக்கு வந்தார்.

    லக்னோ விமான நிலையம் பகுதியில் நேற்றிரவு திரண்ட காங்கிரசார் கருப்பு பலூன்களை பறக்க விட்டு விஜய் ருபானிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விஜய் ருபானியே திரும்பிப்போ என்னும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

    மேலும், இன்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டுக்கு விஜய் ருபானி வந்தபோதும் இதேபோல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலரை போலீசார் கைது செய்து ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையில், லக்னோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜய் ருபானி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், பிரதமர் மோடி ஆகியோர் பிறந்த குஜராத் மாநிலம் ஒரு குட்டி இந்தியாவாகும். இந்தியா எல்லோருக்குமே பொதுவானது. 

    குஜராத்தின் வளர்ச்சிக்காக உ.பி., பீகார், மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட மாநில மக்கள் அதிகமாக உழைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். குஜராத்தில் அனைத்து மாநில மக்களுக்கான பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். #Congressworkers #blackballoons #GujaratCM #VijayRupani
    ×