என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத் முதல் மந்திரி"
- விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
- கோர விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இதில், விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
- விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்திருந்தபோது குஜராத் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியை அவர் கேட்டு கொண்டார்.
இதையடுத்து, ஆறுநாள் அரசுமுறை பயணமாக விஜய் ருபானி இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். அவருடன் குஜராத் மாநில மந்திரிகள், உயரதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் கொண்ட குழுவினரும் மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரும் செல்கின்றனர்.
நவீன முறையிலான வேளாண்மை தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இஸ்ரேலில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? என்பதை இந்த குழுவினர் பார்வையிட உள்ளனர்.
கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்துவரும் பெரும்பாலான குஜராத்தியர்கள் அங்கு வைர வியாபாரம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் மந்திரி மற்றும் உடன் செல்பவர்கள் அங்குள்ள இந்தியர்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி உரி ஏரியல் ஆகியோரை சந்திக்கும் விஜய் ருபானி முன்னிலையில் இருநாடுகள் இடையில் சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதை விவரிக்கும் ஜெருசலேம் அருங்காட்சியகத்தை பார்வையிடும் விஜய் ருபானி, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் கல்லறைகளில் மரியாதை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #VijayRupanivisitsIsrael #VijayRupani






