search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்
    X

    ராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

    காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் அரங்கில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலேசியா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக நிர்வாக திறமை உள்ள ஒருவரை அறிவிக்க வேண்டும், வரும் பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக பணியாற்றி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் நல்ல பல திட்டங்களை பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் கவுன்சிலர் நிஜாம் அலிகான் மற்றும் சேவாதளம் மாநில தலைவர் பரமக்குடி அஜீஸ் ஆகியோர் பேசிய போது, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மிகச் சிறப்பாக காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார். ஆனால் தற்போது 5 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வேதனையாக உள்ளது, வரும் காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், சேவா தல தலைவர் அப்துல் அஜீஸ், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, நகர் துணைத் தலைவர் ஜெயக்குமார், மகளிர் அணி தலைவர் ராமலட்சுமி, பெமிலா விஜயகுமார், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டியன், ஜோதிபாலன் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், ராணுவ பிரிவு தலைவர் கோபால், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×