search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசார் பெயருக்கு முன்னால் பப்பு என்று சேர்த்துக் கொள்ளுங்கள் - அரியானா மந்திரி கிண்டல்
    X

    காங்கிரசார் பெயருக்கு முன்னால் பப்பு என்று சேர்த்துக் கொள்ளுங்கள் - அரியானா மந்திரி கிண்டல்

    ‘சவுகிதார்’ என்று தங்கள் பெயரின் முன்னால் பாஜகவினர் போட்டுள்ளதைப்போல் பப்பு என்ற ராகுல் காந்தியின் பட்டப்பெயரை காங்கிரசார் சேர்த்துக் கொள்ளுங்கள் என அரியானா மந்திரி குறிப்பிட்டுள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
     
    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

    மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

    இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவை சேர்ந்த அரியானா மாநில மந்திரி அனில் விஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரசாருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்களுக்கு பிடித்திருப்பதால் எங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்னும் அடைமொழியை நாங்கள் சேர்த்திருக்கிறோம்.



    உங்களுக்கும் தேவைப்பட்டால் ‘பப்பு’ (மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் 'ஏதுமறியாத சிறுவன்' என்பதை குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என்ற அடைமொழியை உங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என தெரிவித்துள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
    Next Story
    ×