என் மலர்
நீங்கள் தேடியது "Ram temples"
- ரூ.400 கோடியில் ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.
- அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று அந்த அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய சம்பத் ராய், "2020 பிப்ரவரி 5 முதல் 2025 பிப்ரவரி 5 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரியை ராம ஜென்மபூமி அறக்கட்டளை செலுத்தியுள்ளது. இதில், ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.
அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு அயோத்திக்கு 16 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோயிலுக்கு வருகை தந்தனர்" என்று தெரிவித்தனர்.
- ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.
- பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா அன்று, கர்நாடகாவில் உள்ள ராமர் கோவில்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் மேலும் கூறியதாவது:-
ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பு எனக்கு வரவில்லை. ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.
நாங்களும் ராமரை வணங்குகிறோம். ஆனால் அவர்கள் (பாஜக) ராமர் கோவில் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம். ஸ்ரீராமனை அல்ல.
நான் ஜனவரி 22க்குப் பிறகு, நேரம் கிடைக்கும்போது அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமரை தரிசிப்பேன். நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் அல்ல. பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.