search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravichandran Ashwin"

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமினின் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.
    • முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த வெற்றிக்கு 8-வது விக்கெட் ஜோடியான ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் காரணமாக இருந்தனர். 145 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 74 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது.

    இதனால் இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. இருவரும் சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றி வெற்றி பெற வைத்தனர்.

    இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 12 ரன்னும், 2-வது இன்னிங்சில் 42 ரன்னும் எடுத்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் எடுத்த 42 ரன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    36 வயதான அஸ்வின் 88 டெஸ்டில் விளையாடி 3043 ரன்கள் எடுத்துள்ளார். 449 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை யை அவர் படைத்தார்.

    இதற்கு முன்பு கபில்தேவ் (இந்தியா), ஹேட்லி (நியூசிலாந்து) பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), வார்னே (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர். இந்த வரிசையில் 6-வது வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இணைந்து உள்ளார்.

    கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் குவித்துள்ளார். 434 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரிச்சர்டு ஹேட்லி 86 டெஸ்டில் 3124 ரன்னும், 431 விக்கெட்டும், வார்னே 145 டெஸ்டில் 3154 ரன்னும், 708 விக்கெட்டும் எடுத்துள்ள னர்.

    பொல்லாக் 108 டெஸ்டில் 3781 ரன்னும், 421 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 159 டெஸ்டில் 3550 ரன்னும், 566 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த அஸ்வின் 450 விக்கெட் கைப்பற்றி மேலும் ஒரு மைல்கல்லை தொட இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. கும்ப்ளே குறைந்த டெஸ்டில் 450 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். 93-வது டெஸ்டில் அவர் இதை செய்து இருந்தார். அவரது சாதனையை முறியடித்து அதிவேகத்தில் 450 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    அஸ்வின் நேற்று மேலும் ஒரு சாதனை புரிந்தார். 9-வது வீரராக களம் இறங்கி அதிக ரன்களை எடுத்து சேசிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமின் 9-வது வீரராக களம் இறங்கி 40 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்து இருந்தார். தற்போது அஸ்வின் 42 ரன் எடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். இதன் மூலம் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.

    • 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    • அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிப்பு.

    மிர்பூர்:

    வங்காள தேசம் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி நாளான நேற்று இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். அஸ்வின் 42 ரன்களுடனும், ஐயர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வின் ஆட்ட நாயகன் விருதையும், புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் திகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் கஃப் குறிப்பிட்டுள்ளார்.

    • பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது.
    • டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும்.

    சென்னை:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை மாற்ற வேண்டும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாவது:-

    டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும். ஒரே ஒரு பந்தில் தோற்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் வெற்றி பெறலாம். இதனை விட முக்கியமான ஒன்று பவர் ப்ளே.

    நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது. ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவை அனைத்துமே இந்திய ஓப்பனர்கள் ரோகித் - கே.எல்.ராகுலை குறிக்கின்றன. இந்த தொடரின் பவர் ப்ளேவின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்த 4வது அணி இந்தியா ஆகும் (95.85 ). 9 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி தான் சென்றுள்ளது. அதாவது ரோகித் , கே.எல்.ராகுல் ஆகியோர் ஒரு பந்திற்கு ஒரு ரன்னிற்கும் குறைவாக அடித்துள்ளனர்.

    ரோகித் - கே.எல்.ராகுல் ஜோடி மொத்தமாக 6 போட்டிகளில் 88 ரன்களை மட்டுமே அடித்தனர். அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 14.66 ரன்கள் மட்டுமே ஆகும். அரையிறுதியில் இந்தியா 38/ 1 என இருக்க, இங்கிலாந்து அணி 66/1 என வலுவான நிலையில் இருந்தது. இதனை தான் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

    • பவுன்சர் பந்து வீச கட்டுப்பாடுகள் உண்டு.
    • பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பது உண்டு. வலது கை பேட்ஸ்மேன் இடது கை பேட்ஸ்மேன் போன்றோ, இடக்கை வீரர் வலதுகை வீரர் போன்றோ திடீரென திரும்பி நின்று பந்தை அடித்து விரட்டுவார்கள். இன்னும் சிலர் உடலை திருப்பாமல் பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மட்டும் மாற்றிக்கொண்டு ஆடுவார்கள். பேட்டர்கள் இது போன்று ஆடுவது சகஜமாகி விட்டதால் எல்.பி.டபிள்யூ. விதிமுறைகளில் திருத்தம் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

    யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிட்டத்தட்ட 10 முறை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஆடினார். அதில் ஒன்று மட்டுமே பேட்டில் பட்டது. ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதால் ஒரு பேட்ஸ்மேன் எந்த அறிவிப்பும் இன்றி தனது பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மாற்றும் நிலை உள்ளது. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    ஒரு பந்து வீச்சாளர் எந்த முறையில் பந்து வீசுகிறார் என்பதை நடுவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதே போல் பவுன்சர் பந்து வீச கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் அவர்கள் பேட்டிங் செய்யலாம். அதனால் பாதிப்பு பவுலர்களுக்கு தான்.

    எனவே ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் வகையில் பேட்ஸ்மேன் அடிக்கும் போது, பந்து லெக்-ஸ்டம்பு வெளியே 'பிட்ச்'சாகி பேட்டில் படாமல் அது காலுறையில் பட்டால் அதற்கும் எல்.பி.டபிள்யூ. வழங்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அது தான் இந்த விஷயத்தில் நியாயமானதாக இருக்கும். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    • அஸ்வின் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
    • கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை. அவர் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.

    லீசெஸ்டர்னாஷர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதையடுத்து லீசெஸ்டருக்கு சென்று இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு சரியான நேரத்தில் குணமடைவார் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் காரணமாக இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது.

    ஆனால் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் விளையாடினார். அஸ்வின் காயம் முழுமையாக குணமடையாமலே விளையாடினார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் கடைசி டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை.



    இதற்கிடையே கவுன்ட்டி கிரிக்கெட்டில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி முடிவு செய்திருந்தார். தற்போது காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அஸ்வின் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது அஸ்வினை தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் ஊக்கப்படுத்தியது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. #ENGvIND #DineshKarthik #Ashwin
    பர்மிங்காம்:

    பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் முரளிவிஜய் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அஸ்வின் வீசிய ஒரு பந்தில் தடுமாறினார். இதை கவனித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ‘நல்லாயிருக்கு அஸ்வின்....போடு மாமா....போடு மாமா...அடுத்த 3 பந்தையும் அப்படியே போடு மாமா. என்ன பண்றான்னு பார்க்கலாம் ”என்று அஸ்வினை நோக்கி தமிழில் உரக்க கத்தினார். அவரது பேச்சு ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் தெளிவாக கேட்க முடிந்தது.

    களத்தில் நின்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு புரியக்கூடாது என்பதற்காக தினேஷ் கார்த்திக் இவ்வாறு தாய்மொழியில் பேசியுள்ளார். அதே சமயம் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோருக்கும் தினேஷ் கார்த்திக்கின் அழகிய தமிழ் உரையாடல் புரியாமல் விழித்தனர். தினேஷ் கார்த்திக்கின் தமிழ் பேச்சு சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. #ENGvIND #DineshKarthik #Ashwin
    டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என அஸ்வின் கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இதில் முதல் 3 போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று உள்ளனர். பொதுவாக இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும்.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான். 3 பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    இங்கிலாந்து அற்புதமாக இடம். அங்கு சென்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்ல அணியாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை அங்கு சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நாம் செயல்படுவதுதான் முக்கியம்.

    நீண்ட டெஸ்ட் தொடரில் உத்வேகத்தை தொடர்ந்து காட்டுவது மிக முக்கியம். அதை செய்து காட்டி விட்டால் நல்ல பயன் அளிக்கும். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    ×