என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அனுபவத்தை பயன்படுத்துவேன்- அஸ்வின்
Byமாலை மலர்20 July 2018 6:01 AM GMT (Updated: 20 July 2018 6:01 AM GMT)
டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என அஸ்வின் கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்குகிறது.
இதில் முதல் 3 போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று உள்ளனர். பொதுவாக இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான். 3 பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அஸ்வின் கூறியதாவது:-
இங்கிலாந்து அற்புதமாக இடம். அங்கு சென்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்ல அணியாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை அங்கு சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நாம் செயல்படுவதுதான் முக்கியம்.
நீண்ட டெஸ்ட் தொடரில் உத்வேகத்தை தொடர்ந்து காட்டுவது மிக முக்கியம். அதை செய்து காட்டி விட்டால் நல்ல பயன் அளிக்கும். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்குகிறது.
இதில் முதல் 3 போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று உள்ளனர். பொதுவாக இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான். 3 பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அஸ்வின் கூறியதாவது:-
இங்கிலாந்து அற்புதமாக இடம். அங்கு சென்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்ல அணியாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை அங்கு சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நாம் செயல்படுவதுதான் முக்கியம்.
நீண்ட டெஸ்ட் தொடரில் உத்வேகத்தை தொடர்ந்து காட்டுவது மிக முக்கியம். அதை செய்து காட்டி விட்டால் நல்ல பயன் அளிக்கும். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X