search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rangasamy"

    • திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சரபேஸ்வரர் கோவிலில் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தருமை ஆதீனம் சார்பில் சரபேஸ்வரர் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாக நாதசுவாமி கோவிலில் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

    இக்கோவிலில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    அதனையொட்டி அவர், நாகநாதர் சுவாமிக்கு 9 விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டார். பின்னர், கிரிகுஜாம்பிகை சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.

    அதை தொடர்ந்து திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சரபேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தருமை ஆதீனம் சார்பில் சரபேஸ்வரர் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

    • அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு.
    • கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார்.

    புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகன் நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நீக்கப்பட்ட அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை பண்பாட்டுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தது.

    மரபாக ஆதிதிராவிடர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.

    தற்போது ஆதிதிராவிட சமூகத்தை சேராத திருமுருகன் புதிய அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனால் ஆதி திராவிடர் நலத்துறையை அவருக்கு ஒதுக்காமல், அதே சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய்.சரவணக்குமாருக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அமைச்சர்களையும், இலாக்காக்களையும் முடிவு செய்வது முதலமைச்சரின் பொறுப்பு. இருப்பினும் கூட்டணி அமைச்சரவை என்பதால் பா.ஜனதா தலைமையிடம் தெரிவித்து, இலாக்காக்களை மாற்றம் செய்ய வேண்டும். அப்படி மாற்றம் செய்யும் பட்சத்தில் சாய்.ஜெ.சரவணன் குமாரிடம் உள்ள ஒரு துறையை புதிய அமைச்சருக்கு ஒதுக்க வேண்டும்.

    இல்லாதபட்சத்தில் முதலமைச்சர் தன்வசமே ஆதிதிராவிடர் நலத்துறையை வைத்துக் கொள்ளலாம்.

    இதுமட்டுமின்றி, சுற்றுலாத்துறை என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லட்சுமிநாராயணன் வசம் உள்ளது. சுற்றுலாவுடன் கலை பண்பாட்டுத்துறையும் இருந்தால் சுற்றுலா வளர்ச்சி மேம்பாடுகளை செய்வது எளிதாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.

    இதனால் கலை பண்பாட்டுத் துறையை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களின் ஒரு சில துறைகளை மாற்றி அமைக்கவும் முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த இலாக்கா மாற்றம் புதிய அமைச்சர் பதவியேற்ற நாளில்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.
    • சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. இரங்கல் குறிப்புக்கு பிறகு எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து பேசினர்.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா, மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தாதது, தொகுதியளவில் நடைபெற வேண்டிய பணிகள், மக்கள் நல பணிகளை செயல்படுத்தாதது ஆகியவை குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்.

    அனைத்து பிரச்சனைகளுக்கும் தலைமை செயலாளரும், அதிகாரிகளும்தான் காரணம் என கூறுகின்றனர். அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அலுவல் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் அமரும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    9.45 மணியளவில், சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி எதிர்கட்சித்தலைவர் சிவா வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.

    அப்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிவா தலைமையில் சபைக்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, அலுவல் பட்டியலில் இல்லாததை எப்படி பேசலாம்? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சபாநாயகர், நன்றி அறிவிப்பு அலுவல் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்தார். இதனால் சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார்.
    • சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்றார். இதனால் சட்டசபை நிகழ்வுகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    9.37 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி20 மாநாடை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்கும் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகியவற்றுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

    தொடர்ந்து சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

    தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுவை எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமிநாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர்.

    இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுவை சட்டசபை 23 நிமிடத்தில் முடிவடைந்தது.

    • புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
    • அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.

    டெங்கு பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம், டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும், வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

    மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக அறிவுறுத்தவும், கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்கவும், அனைத்து ஆஸ்பத் திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.

    அதோடு டெங்கு காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார்.

    டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார்.

    • காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.
    • சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து, நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு கவனம் செலுத்தும்.

    புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.

    புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சிறுதானிய உணவும் வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். படிக்கும் மாணவர்களுக்கு அது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பு மாணவர்களின் சோர்வை போக்கவே சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    • நடிகர் யோகிபாபு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
    • இவர் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    • முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. தீர்மானம்
    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தடையின்றி நிறைவேற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வார்டு நிர்வாகிகள் ஆலோ சனைக்கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

    அ.தி.மு.கவின் துணையோடு ஆட்சி பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தடையின்றி நிறைவேற்ற வேண்டும்.

    தடையின்றி வழங்கும் கூட்டணி அரசு மத்தியில் இருக்கும்போது மாநில அந்தஸ்து பெற முயற்சிப்பதே சரியான தீர்வாக இருக்கும். தேர்தல் நேரத்தில் மட்டும் மாநில அந்தஸ்து பற்றி முதல்- அமைச்சர் பேசாமல், அதை பெறுவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில அ.தி.மு.க. இணை செயலாளர் காசிநாதன், தொகுதி செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், மூத்த நிர்வாகி வில்லியனூர் மணி, கஜேந்திரன், உழவர்கரை நகர செயலாளர் பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
    • பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.

    புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.

    மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.

    பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.

    ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று புதுவைக்கு வந்தார்.

    தலைமை செயலகத்தில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளோடு புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மத்திய நிதிமந்திரி வருகையையொட்டி சென்னையிலிருந்து நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு காரில் வந்தார். அவர் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் புதுவைக்கு வர காலதாமதம் ஏற்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.

    அவரிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் காத்திருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த கவர்னர் தமிழிசையுடன், முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மத்திய நிதி மந்திரியிடம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    • மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.
    • மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.

    மீனவ மக்கள் கேட்ட அத்தனை திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    நேரடி வங்கி பரிமாற்றத்தால் அவர்கள் வழங்குகின்ற நிறைய திட்டங்கள் நமக்கு தெரிவதில்லை. திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே நமது எண்ணம். நாங்கள் எதிர்பார்த்த நிதியை விட கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்து, அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கற்கள் கொட்ட வேண்டும் என்றுகேட்கின்றனர். இதை ஆய்வு செய்யும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை மூலம் விரைவில் கடல் அரிப்பை தடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மாகியில் மீன்பிடித் துறைமுகப் பணி முடிக்கப்படாமல் உள்ளது. அதனை முடிக்கவும், ஏனாம் பகுதி மீனவ மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    கடல் அரிப்பை தடுப்பதற்கான நிதி உள்பட அனைத்து நிதியும் நமக்கு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார்.
    • ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்னால் எதுவும் செய்ய முடியாமல் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று விரக்தியாக பேசினார்.

    இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.

    என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார். 1963 யூனியன் பிரதேச சட்டப்படி மாநில முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது.

    மாநில அரசின் அதிகாரங்களை எல்லாம் கவர்னரிடம் சரண்டர் செய்து விட்டு தற்போது என்னால் முடியவில்லை என ரங்கசாமி கூறுகிறார். ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் அதிக நிதி கிடைக்கும். மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு தற்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று முதலமைச்சர் கூறுவது கபட நாடகம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கலால்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. குப்பை வாகனம் டெண்ட ரில் ஊழல் என்றதும் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர்.

    போலீஸ் துறையில் ஆட்கள் தேர்வுக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது என்று கூறியவுடன் அதனையும் சரி செய்துவிட்டனர் என்றார்.

    ×