search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramzan"

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
    நாமக்கல்:

    ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் - சேலம் ரோடு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையை இமாம் சாதிக் நடத்தினார். இந்த சிறப்பு தொழுகையின்போது இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக்நவீத் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

    முன்னதாக அவர்கள் நாமக்கல் - சேந்தமங்கலம் ரோடு பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக தொழுகை நடந்த இடத்திற்கு சென்றனர். தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு இந்து பிரமுகர் ஒருவர் உள்பட சிலர் பாதாம்பால் வழங்கினர்.

    இதேபோல் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் திடல் மற்றும் நாமக்கல் கோட்டை பள்ளிவாசல், மாருதிநகர் பள்ளிவாசல் என அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி என மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. 
    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் டவுன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் பெருமக்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான்ஹஜ்ரத், நூர் பள்ளிவாசல் ஹஜரத் முஸ்தபா ரம்ஜான் நோன்பின் மாண்புகள், இஸ்லாம் ஒருங்கிணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் பெருமகனார் நபி(ஸல்) ஆற்றிய பணிகள், ஈகையின் அவசியம் அன்பு சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.



    இதில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி யூசுப், முதன்மை நாட்டாண்மை முனவர் ஷெரீப், உலமாசபை மாவட்டத்தலைவர் முகம்மது முனீர், இப்ராகிம், மதரசா நிர்வாகி காஜாமொய்தீன், மருத்துவ அதிகாரி டாக்டர் ஹூசைன், மதரசா சத்தார், சாகுல்அமீது, வக்கீல் முகமது இல்யாஸ், அப்துல்லா உள்பட திரளாக முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறுவர்-சிறுமியர்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு (தூ-ஆ) நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளி வாசல், ஆகியவற்றில் ஈத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

    இதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஜே.கே.மகால் வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தில், லெப்பைக்குடிக்காடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், தேவையூர், பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன்  - 1 கிலோ
    அரிசி  - 1 கிலோ
    எண்ணெய்  - 100 கிராம்
    நெய் - 150 கிராம்
    பட்டை  - 2 துண்டு
    கிராம்பு  -  ஐந்து
    ஏலக்காய் - முன்று
    வெங்காயம்  - 1/2 கிலோ
    தக்காளி  - 1/2 கிலோ
    இஞ்சி, பூண்டு விழுது
    கொ. மல்லி  - 1 கட்டு
    புதினா  - 1 கட்டு
    மிளகாய்  - 8
    தயிர்  - 225 கிராம்
    சிகப்பு மிளகாய் தூள்  - 3 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிறிதளவு
    எலுமிச்சை பழம்  - 1

    செய்முறை:

    * முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.

    * பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

    * பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்

    * பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

    * மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.

    * பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைக்கவும்.

    *  அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

    * வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.

    * கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.



    * ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

    * அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    புதுடெல்லி:

    ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான - தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய விழாவின்போது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக, இந்தியாவிலும், கடல்கடந்தும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பகிரப்பட்ட நமது சமுதாயத்தில் நல்ல புரிதல்களையும், சகோதரத்துவத்தையும் இந்த ரம்ஜான் பண்டிகை மேம்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக தலிபான் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. #AshrafGhani #Taliban
    காபூல் :

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சமீபத்தில் அறிவித்தார்.



    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுவதாகவும், இதர வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக இன்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பு அறிவித்துள்ள போர் நிறுத்தம் எந்த நாளில் துவங்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. #AshrafGhani #Taliban
    ரமலான் நோன்பை கடைப்பிடித்துவரும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #Ramzan
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்கள் நேற்று முதல் ரமலான் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நோன்பை கடைப்பிடித்து வரும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்த நன்னாளில் முகம்மது நபிகளின் நல் சிந்தனைகளை நாம் நினைவு கூர்கிறோம். மேலும், ஒற்றுமை, இரக்கம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இவை ரமலான் புனித மாதத்தின் நல்லொழுக்கங்கள் ஆகும் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், கடந்த மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேடியோவில் ஒலிபரப்பான மன் கி பாத்தின் 43-வது உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #PMModi #Ramzan
    பிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். #Ramadan #Ramzan
    சென்னை:

    இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.
    ரமலான் மாதத்தை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #KashmirCeaseFire
    புதுடெல்லி:

    நாளை முதல் ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள் (தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை) எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவசமாக 5 ஆயிரம் டன் அரிசியை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CMpalaniswami #freericetomosques
    ×