என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகம்மது நபிகளின் நல்சிந்தனைகளை நினைவு கூர்வோம் - பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து
    X

    முகம்மது நபிகளின் நல்சிந்தனைகளை நினைவு கூர்வோம் - பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து

    ரமலான் நோன்பை கடைப்பிடித்துவரும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #Ramzan
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்கள் நேற்று முதல் ரமலான் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நோன்பை கடைப்பிடித்து வரும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்த நன்னாளில் முகம்மது நபிகளின் நல் சிந்தனைகளை நாம் நினைவு கூர்கிறோம். மேலும், ஒற்றுமை, இரக்கம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இவை ரமலான் புனித மாதத்தின் நல்லொழுக்கங்கள் ஆகும் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், கடந்த மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேடியோவில் ஒலிபரப்பான மன் கி பாத்தின் 43-வது உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #PMModi #Ramzan
    Next Story
    ×