என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » greets
நீங்கள் தேடியது "greets"
ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #RahulGandhi #CAtopper
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரை சேர்ந்தவர் ஷதாப் உசேன். இவரது அப்பா டெய்லராக வேலை பார்த்து வருகிறார். ஷஹாப் உசேன் சமீபத்தில் சிஏ தேர்வை முதல் முறையாக எழுதினார்.
இதற்கிடையே, சிஏ தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. அதில் ஷதாப் உசேன் 800 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது 74.63 சதவீதமாகும்.
இந்நிலையில், ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறுகையில், வாழ்த்துக்கள் ஷதாப். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் பயணத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #CAtopper
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், வலிமையுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், வலிமையுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
ரமலான் நோன்பை கடைப்பிடித்துவரும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #Ramzan
புதுடெல்லி:
இஸ்லாமியர்கள் நேற்று முதல் ரமலான் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நோன்பை கடைப்பிடித்து வரும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்த நன்னாளில் முகம்மது நபிகளின் நல் சிந்தனைகளை நாம் நினைவு கூர்கிறோம். மேலும், ஒற்றுமை, இரக்கம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இவை ரமலான் புனித மாதத்தின் நல்லொழுக்கங்கள் ஆகும் என பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேடியோவில் ஒலிபரப்பான மன் கி பாத்தின் 43-வது உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #PMModi #Ramzan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X